திருமாவுக்கு என்னாச்சு…? பானையை உடைச்சுட்டாரே

எம்.பி. பதவியை தூக்கியெறிந்துவிட்டு எம்.எல்.ஏ. தேர்தலில் நிற்கப் போகிறேன் என்று அறிவித்தார். அதேபோல் பாண்டிச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் 4 தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என்று அறிவித்தார். இதையெல்லாம் இன்று திருத்தியெழுதியிருக்கிறார். பாண்டிச்சேரியில் 3 தொகுதிகளில் விசிக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன் என்று கூறிவிட்டார். அதேபோல், ‘பறையன் பானை’ என எழுதப்பட்டிருந்த தண்ணீர் பானையை உடைத்தெறிந்த எல்.இளையபெருமாள் மகன் ஜோதிமணி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காட்டுமன்னார்கோயிலில் பானைச் சின்னத்தில் போட்டியிடுகிறார் என்று அறிவித்தார். இந்த […]
வீட்டுச்சிறை கருணாநிதிக்கு விசாரணை…? பாகுபலி கட்டப்பா… தேர்தல் யுத்தம்

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கடந்த 2021 தேர்தலில் திமுக வாக்குறுதி கொடுத்தது. அதேபாணியில் இப்போது கருணாநிதி வீட்டு சிறையில் இருந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று எடப்பாடி அறிவிப்பு செய்திருக்கிறார். இதையடுத்து விசுவாசத்திற்கு எப்படி பாகுபலி கட்டப்பா உதாரணமோ, அதேபோல் துரோகத்துக்கு எடப்பாடி பழனிசாமி என்று உதாரணம் காட்டி பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். கருணாநிதி வீட்டுச்சிறையில் இருந்தது பற்றி பேசும் திமுகவின் முக்கியப் புள்ளி ஒருவர் ‘’2006 திமுக […]
சிங்கத்தின் பிள்ளையா ஸ்டாலின்..? ஆ.ராசா மீது என்ன நடவடிக்கை?

கருணாநிதியை கடைசி காலத்தில் ஸ்டாலின் கைதி போன்று வைத்திருந்தார் என்று ஆ.ராசா ஆடியோவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். அதற்கு, கடைசி காலம் வரை தலைவர் சிங்கம் போன்று வாழ்ந்தார், அந்த சிங்கத்தின் பிள்ளை நான் என்று கடுமையாக பதிலடி கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். மேலும் அவர், ‘’தோல்வி பயத்தில், நாக்கில் நரம்பில்லாமல் பேசும் பழனிசாமி இனி எந்நாளும் ஆட்சிக்கு வரமுடியாது! தலைவர் கலைஞர் ஒரு சிங்கம்! அந்தச் சிங்கத்தின் பிள்ளை நான். தந்தையாக மட்டுமல்ல, தலைவராக […]
காங்கிரஸ் பட்டியல் வந்தாச்சு. ஜாதி மோதலில் சட்டை கிழிகிறது.

பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியான சற்று நேரத்திலேயே காங்கிரஸ் கட்சியின் பட்டியலும் வெளியிடப்பட்டது. அதன் பிறகும் ஜோதிமணி சூடு தாங்காமல் கொதித்துக்கொண்டு இருக்கிறார். காங்கிரஸ் சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் வெளியானது. பொன்னேரி துரை சந்திரசேகர், சோளிங்கர் முனிரத்தினம், ஊத்தங்கரை குப்புசாமி, கிருஷ்ணகிரி செல்லகுமார், பென்னாகரம் தமிழ் குமரன், ஆத்தூர் அர்த்தனாரி ஈரோடு கிழக்கு கோபிநாத், ஊட்டி ராமச்சந்திரன், கவுண்டம்பாளையம் சூரிய பிரகாஷ், சிங்காநல்லூர் ஸ்ரீநிதி நாயுடு, துறையூர் லெனின் பிரசாத், கடலூர் சந்திரசேகரன், மயிலாடுதுறை ஜமால் […]
அண்ணாமலைக்கு அரோகரா. பாஜக வேட்பாளர் பட்டியல் புகைச்சல்

எப்படியாவது அண்ணாமலைக்கு சீட் கிடைத்துவிடும் என்று நம்பியிருந்த பாஜக இளம் தலைமுறையினருக்கு இன்று வெளியாகியிருக்கும் வேட்பாளர் பட்டியல் பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது. அண்ணாமலை கேட்டும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அண்ணாமலைக்கு மட்டுமின்றி அவருக்கு வேண்டப்பட்ட அஸ்வத்தாமன், ஏ பி முருகானந்தம், அமர் பிரசாத் ரெட்டி, வினோஜ், எஸ் ஜி சூர்யா போன்ற பலருக்கும் சீட் கொடுக்கப்படவில்லை. தமிழிசை செளந்தரராஜன் மயிலாப்பூர் தொகுதியை தக்க வைத்துள்ளார். அதேநேரம் கடந்த தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்ட விஜயதரணிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே எம்.எல்.ஏ.வாக […]
தேர்தல் பிரசாரத்தில் செந்தாமரையுடன் சபரீசன்… அடுத்தது துர்கா..?

ஸ்டாலின் குடும்பத்தில் இப்போது உதயநிதி, கனிமொழி இருவரும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இவர்களைத் தவிர, நேற்றைய தினம் மனைவியுடன் சபரீசன் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டது சர்ச்சையாகியுள்ளது வில்லிவாக்கம் தொகுதியில் திமுக சார்பில் கார்த்திக் மோகன் போட்டியிடுகிறார். இங்கு தவெக சார்பில் ஆதவ் அர்ஜூனா போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் விஜயகுமார் போட்டியிடுகிறார். மூன்று பேருமே வில்லிவாக்கம் தொகுதி முழுவதும் தீவிரப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கார்த்திக் மோகன் நேற்றைய தினம் வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட நல்வாழ்வு சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று கலந்துரையாடினார். […]
ஆ.ராசாவை அம்பலப்படுத்திய எடப்பாடி. வைரல் ஆடியோ முழு விபரம்

கிருஷ்ணகிரியில் தேர்தல் எழுச்சிப்பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக போய்க்கொண்டிருக்கும் ஆ.ராசா ஆடியோ குறித்துப் பேசினார். அப்போது அவர், ‘’காற்றில் கூட ஊழல் செய்த கட்சி திமுக, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல். கனிமொழியும், ஆ.ராசாவும் காங்கிரஸ் ஆளும்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கூட்டணியில் இருக்கும்போதே குற்றம் சுமத்தப்பட்டு திகார் ஜெயிலில் இருந்தவர்கள் நம்மைப் பற்றி பேசலாமா? ஜெயிலில் இருந்தவர் ஆடியோ வைரல் ஆகிவருகிறது, அதுபற்றி சொல்கிறேன். ஆ.ராசா ஆடியோ […]
புதிய டிஜிபி சந்தீப்ராய் ரத்தோர் பதவியேற்பு. களமிறங்கிய தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனவும், கட்சிகளுக்கு இடையில் காவல் துறை பாகுபாடு பார்க்கிறது எனவும் அதிமுக தொடங்கி விஜய் வரையிலும் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்துவந்த நிலையில், நேற்று தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு போட்டது. அதன்படி, தமிழக காவல் துறையின் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக இருந்த ஜி.வெங்கடராமன் மாற்றப்பட்டு அவருக்கு பதில், காவல் உயர்பயிற்சியக டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இன்று தமிழக காவல்துறையின் புதிய […]
விஜய் ரோட்டில் இறங்கிட்டாரு… புல்லரிக்கும் விசில் ரசிகர்கள்

கரூரில் மயங்கி விழுந்ததை எல்லாம் கண்டுகொள்ளாமல் பேசிய விஜய்யிடம் இப்போது திடீர் மாற்றம் வந்திருக்கிறது. இன்று திருச்சி ரோடு ஷோவில், தன்னை பின் தொடர்ந்த ஒரு தம்பதி கீழே விழுந்ததைக் கண்டதும் வேனில் இருந்து கீழே இறங்கினார். விஜய் பாதுகாப்புப் படை மற்றும் காவலர்கள் சுற்றி நின்று பாதுகாப்பு கொடுத்த நிலையில், அவர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது உறுதியானதும் மீண்டும் வேனில் ஏறி பயணத்தைத் தொடங்கிவிட்டார். தலைவர் கண்ணு முன்னாடி கீழே விழுவதைப் பார்த்ததும் பதறிவிட்டார், […]
ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு வரவே மாட்டாரா..? கொதிநிலையில் திமுக

திமுக கூட்டணி தேர்தல் பிரச்சாரத்தில் முழுவதுமாக இறங்கிவிட்டது, தமிழ் நாடு முழுவதும். அதிமுகவும் இறங்கி விட்டது. 28 தொகுதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்னமும் வேட்பாளர் பட்டியலை முடிக்காமல் தடுமாறிக்கொண்டு இருக்கிறார்கள். இப்படியொரு கட்சியுடன் கூட்டணி வைக்கத்தான் வேண்டுமா என்று திமுகவினர் கொதித்துப் போய் இருக்கிறார்கள். அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்ய பிரதமர் மூன்று முறை வந்து விட்டார், அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் தொடர்ச்சியாக தமிழகம் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் திமுகவுக்காக பிரசாரம் செய்ய காங்கிரஸ் தலைவர்கள் […]

