News

விஜய் ரோட்டில் இறங்கிட்டாரு… புல்லரிக்கும் விசில் ரசிகர்கள்

Follow Us

அருணுக்குப் பதிலாக அபின். குற்றம் சாட்டும் திமுக

தமிழ்நாட்டில் தலைமைச் செயலாளர், காவல்துறை இயக்குனர், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், இவர்கள் அனைவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரை கடந்த 8ம் தேதி தேர்தல் ஆணையம் மாற்றியது. இதனைத் தொடர்ந்து, புதிய தலைமைச் செயலாளராக சாய்குமார், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டலை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், சென்னை காவல் […]

கொரோனா ஸ்டாலின், எடப்பாடிக்கு மலர்வளையம் – திசை மாறும் தேர்தல் களம்

புயல், வெள்ளம், கொரோனா போன்ற இயற்கை பேரிடர்களை நாங்கள் பார்த்தவர்கள். கொரோனா ஸ்டாலின் காலத்தில் வந்திருந்தால், அவரே போய்ச் சேர்ந்திருப்பார் என்று முதல்வர் ஸ்டாலினைப் பார்த்து கடுமையாக விமர்சனம் செய்தார் எடப்பாடி பழனிசாமி. இதற்கு கனிமொழி, ‘’எங்களை எதிர்த்தவர்களுக்கு எல்லாம் மலர் வளையம் வைத்தவர்கள் நாங்கள்’’ என்று நேரடியாகத் தாக்கியிருக்கிறார். இதையடுத்து திமுகவினர், ’’கஜா புயலின் போது மக்களுக்கு உதவாமல் ஓடி ஒளிந்து மாமியார் இல்லத்தில் விருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த அடிமை ஆட்சியில் கூட, கொரோனா காலத்தில் மக்களின் […]

சவுக்கு சங்கரை தூக்கிட்டாங்க…. தீயா வேலை பாக்குறாங்கப்பா

திமுக ஆட்சியை அகற்றுவதற்கு கடுமையாகப் பேசி தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வந்த சவுக்கு சங்கரை காவல் துறை ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. திமுக மீது தொடர் அட்டாக் செய்துவந்த சவுக்கு சங்கரை, பெண் போலீசாரை அவதூறு செய்தார் என்று குற்றம் சாட்டி, போலீசார் அவரை 2024ல் கைது செய்தனர். இதற்காக அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. மேலும், இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், குண்டர் சட்டத்தை ரத்து செய்ததோடு, அவரை ஜாமினிலும் விடுவித்தது. […]

தலைமைச் செயலாளர், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி திடீர் மாற்றம். திகிலில் திமுக

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பரப்புரை சூடு பிடித்துள்ள நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், தமிழக தலைமைச் செயலர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியை மாற்றி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர்தான் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தேர்தல் நெருக்கத்தில் மாற்றம் நடந்துள்ளது. புதிய தலைமைச் செயலராக சாய்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு […]

நெல்லையில் விஜய் ரோடு ஷோ… ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை

விஜய் இன்றைய பரப்புரையிலும் பின்னே சென்ற வாகனங்கள் கீழே விழுந்து பலர் காயமடைந்துள்ளனர். பின் தொடர வேண்டாம் என்று விஜய் கேட்டுக்கொண்டாலும், ரசிகர்கள் தொடரத்தான் செய்கிறார்கள். நெல்லை கேடிசி நகரில் இன்று நடைபெறும் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு வருகை தந்திருக்கிறார் விஜய். இன்று திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பரப்புரை மேற்கொள்கிறார். இந்த நிலையில் ரஜினியின் பேச்சு விஜய் ஆதரவாளர்களை மீண்டும் சூடாக்கியுள்ளது. சென்னை விமான […]

பால்டாயில் உதயநிதி… போட்டுத் தாக்கும் இபிஎஸ்

இன்று சென்னையில் பிரசாரம் செய்துவருகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இன்றைய தினம் உதயநிதியை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். இன்று இபிஎஸ், ‘’அதிமுக ஜனநாயகமுள்ள கட்சி. சாதாரண கிளைச் செயலாளர் கூட பொதுச்செயலாளர் ஆக முடியும், திமுகவில் வரமுடியுமா? எனக்குப் பின்னாலும் அதிமுக நூறாண்டுகள் தொடரும் என்று அம்மா சொன்னார், இப்போது எனக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கிறீர்கள், எனக்குப் பின் ரவி வருவார், இங்குள்ள யாராவது வருவார்கள், இப்படி வாய் திறந்து ஸ்டாலினால் சொல்ல முடியுமா? குடும்பமாக […]

ஸ்டாலினுடன் ராகுல் மோதுவது ஏன்..? இப்படியொரு வில்லங்கமா?

அண்ணன், தம்பி என்று ஒட்டி உறவாடிக்கொண்டிருந்த ஸ்டாலின், ராகுலுக்கு இடையில் கடும் சண்டை ஓடிக்கொண்டு இருக்கிறது. அதனாலே பாண்டிச்சேரியில் இருவரும் ஒரே நாளில் பிரசாரம் செய்தாலும், ஒருவரையொருவர் கண்டுகொள்ளவில்லை. ராகுலுக்குக் கோபம் என்ன என்று காங்கிரஸ் வட்டத்தில் விசாரித்தோம். ‘’பாஜக – திமுக இடையே உள்ள மறைமுக கூட்டணி பற்றிய சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் தான் இந்த தேர்தலில் ராகுல் காந்தி பெரிய அளவில் தலையிடவில்லை. அதிமுக கூட்டணிக்காக எந்த […]

லீமா ரோஸ்க்கு இவ்வளவு சொத்துக்களா..? இவரை முதல்வர் ஆக்கிடலாமே

தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர்கள் பட்டியலில் அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் முதலிடம் பிடித்துள்ள விவகாரம் செம வைரலாகிவருகிறது. இவரது சொத்துக்களை கணக்கிட்டால் எங்கேயோ போகிறது. இவரை முதல்வர் ஆக்கிவிட்டால், தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் இவரே கவனித்துக்கொள்வார் என்று கிண்டல் செய்கிறார்கள்.   திருச்சி மாவட்டம் லால்குடியில் போட்டியிடும் லீமா ரோஸ் குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 5 ஆயிரத்து 863 கோடி ரூபாய் என கணக்கு காட்டப்பட்டுள்ளது. இவரது தனிப்பட்ட மதிப்பு 1,048 கோடி ரூபாய்.  கணவர் […]

விஜய்க்கு மட்டும் ஏன் இத்தனை சோதனை…? கொந்தளிக்கும் ரசிகர்கள்

அரசியல் கட்சித் தலைவர்கள் ஸ்டாலின் தொடங்கி சீமான் வரையிலும் அவர்கள் விருப்பப்பட்ட இடங்களில் எல்லாம் பிரசாரம் செய்துவருகிறார்கள். ஆனால், விஜய்க்கு மட்டும் பிரசாரம் ரத்து செய்யப்படும் வகையில் அனுமதி கொடுப்பதும், மறுப்பதுமாக விளையாடுகிறார்கள் என்று விஜய் ரசிகர்கள் கொதிக்கிறார்கள். சென்னை வில்லிவாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கம் மற்றும் டி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரி தமிழக வெற்றிக் கழகம் காவல்துறைக்கு கடிதம் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து காவல்துறை சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், வில்லிவாக்கம் […]

எடப்பாடிக்கு குஷியான கருத்துக்கணிப்பு. தினமலர் – சாணக்கியா சர்வே

தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தல் தொடர்பாக தினமலர் நாளிதழும், சாணக்யா ஊடகமும் கருத்துக் கணிப்புகளை மேற்கொண்டன. மார்ச் 23 முதல் 10ம் தேதி வரை, 68 தொகுதிகளில் நடைபெற்ற இந்தக் கருத்துக்கணிப்பில் 19,305 ஆண், பெண் வாக்காளர்களிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்டன. இதில், 25 வயதிற்குட்பட்டவர்கள் 20 சதவீதமும்; 25 முதல் 50 வயதிற்குட்பட்டவர்கள் 55 சதவீதமும்: 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் 25 சதவீதமும் இடம்பெற்றிருந்தனர். இந்த சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. […]