News

Follow Us

அன்புமணி, ஜி.கே.வாசனுக்கு அழைப்பு… பன்னீரை கட்டம் கட்டிய மோடி

உத்தரப் பிரதேசத்தின் வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இடம்பெற்றுள்ள தகவல் படி மொத்த சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி. இதில் பெரும்பகுதி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் உள்ள ரூ.2.86 கோடி நிரந்தர வைப்புத்தொகை. கையிலிருக்கும் ரொக்கம் ரூ.52.920. காந்திநகர் மற்றும் வாரணாசியில் உள்ள இரண்டு வங்கிக் கணக்குகளில் உள்ள தொகை ரூ.80.304. தேசிய சேமிப்பு சான்றிதழில் ரூ.9.12 லட்சம் முதலீடு. ரூ.2.68 லட்சம் […]

நயினார் நாகேந்திரன் இனி தேர்தலில் நிற்கவே முடியாதா..?

தேர்தல் சமயத்தில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், அந்த குற்றவாளிகள் நயினார் நாகேந்திரனின் எமர்ஜென்சி கோட்டாவைப் பயன்படுத்தி பயணம் செய்தவர்கள் என்பது உறுதியாகியிருக்கிறது. அ.தி.மு.க.வில் இருந்து பா.ஜ.க.வுக்குத் தாவியவர் நயினார் நாகேந்திரன். இந்த தேர்தலில் ஜெயித்து அமைச்சர்  ஆகவேண்டும் என்ற கனவில் நெல்லையில் களம் இறங்கினார். தேர்தல் நேரத்தில் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்கள் என்று சொல்லப்படும் மூவர் 4 கோடி ரூபாயுடன் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நயினார் […]

எடப்பாடி பழனிசாமிக்கு செல்வப்பெருந்தகை தனி ரூட்டு… கண் சிவக்கும் தி.மு.க.

காங்கிரஸ் ஆட்சியை இழந்து 57 ஆண்டுகள் ஆகிவிட்டன. இனியும் நேரத்தை வீணடிக்க மாட்டோம். காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்கு நேரம் நெருங்கிவிட்டது என்று செல்வப்பெருந்தகை பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க.வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இணக்கம் நிலவி வந்த நிலையில், சவுக்கு சங்கர் கைது நடைபெற்றது. இந்த விவகாரத்தில் சவுக்கு சங்கரை வெளியே கொண்டுவருவதற்கு சவுக்கு சங்கரின் உறவினரும் காங்கிரஸ் வேட்பாளருமான சசிகாந்த் செந்தில் தீவிரமாக களம் இறங்கினார். அவருக்காக செல்வப்பெருந்தகையின் ஆதரவாளரான மோகன் குமாரமங்கலம் பேசினார். […]

லக்னோ ஏர்போட்டுக்கு எத்தனை டெம்போ? மோடியை கிண்டலடிக்கும் ராகுல்

அம்பானி, அதானி குறித்து பிரதமர் மோடி பேசியதற்கு பிறகு ராகுல் காந்தியின் பிரச்சாரத்தில் நாளுக்கு நாள் அதிக வேகமும், துணிச்சலும் அதிகரித்து வருகிறது. டெம்போக்களில் கருப்புப் பணம் வாங்கும் கலாச்சாரத்தை விடாமல் தொடர்ந்து அடித்து வருகிறார். லக்னோவில் தேர்தல் பரப்புரைக்கு வந்திருக்கும் ராகுல் காந்தி போட்டிருக்கும் ட்வீட் படு வைரலாகிறது. அந்த பதிவில், ‘நான் இப்போது லக்னோ விமான நிலையத்தில் தரை இறங்கப்போகிறேன். இந்த விமான நிலையம் மோடிஜி அவர்கள் தனது நண்பர் அதானிக்குத் தாரைவார்த்துக் கொடுத்த […]

ஸ்டாலின், மம்தா, பினராயி விஜயன் கைது நிச்சயம். கொளுத்திப் போடும் அரவிந்த் கெஜ்ரிவால்

மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கைது செய்யப்படுவார்கள் என்று சிறையில் இருந்து வெளிவந்திருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியிருப்பது நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் அவர் பேசும் ஒவ்வொரு விஷயமும் வைரலாக மாறி வருகிறது. பா.ஜ.க வெற்றிபெற்றால் மோடிக்குப் பதிலாக அமித் ஷா பிரதமர் ஆக்கப்படுவார் என்றும்  தேர்தலுக்குப் பிறகு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி […]

செல்வராஜ் எம்.பி. மரணத்துக்கு செவ்வணக்கம்… யார் இந்த செல்வராஜ்?

அண்ணாமலை மீது வழக்கு போட ஆளுநர் அனுமதி எதுக்கு..? எந்த அரசு பதவியிலும் இல்லாத அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்வதற்கு ஆளுநர் அனுமதி எதற்கு வழங்க வேண்டும் என்பது பொதுமக்களிடம் கேள்வி எழுப்பியிருக்கிறது. உண்மையில், இது ஆளுநர் அனுமதி அல்ல, தமிழக அரசு அனுமதி கொடுத்திருக்கிறது என்பதே உண்மை. கடந்த ஆண்டு தமிழக முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான அண்ணாதுரை குறித்து அண்ணாமலை, ’1956-ம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் […]

மீண்டும் பிரசாந்த் கிஷோருடன் ஸ்டாலின் ஒப்பந்தம். எத்தனை கோடி தெரியுமா?

பத்து வருடம் ஆட்சியில் இல்லாத தி.மு.க.வுக்கு கடந்த 2021 வாழ்வா சாவா போராட்டமாக இருந்தது. ஆகவே, 360 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து தி.மு.க., வியூக வகுப்பாளராக பிரஷாந்த் கிஷோர் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து, 2021 சட்டசபை தேர்தலில், வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் ஐபேக் நிறுவனம் முன்னின்று செய்ய, தி.மு.க., மட்டும், 135 இடங்களில் வெற்றி பெற்று, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. கூட்டணி கட்சியினரும் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றனர். ஒரு நாளைக்கு, 1 […]

அண்ணாமலை மீது வழக்கு போட ஆளுநர் அனுமதி எதுக்கு..?

எந்த அரசு பதவியிலும் இல்லாத அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்வதற்கு ஆளுநர் அனுமதி எதற்கு வழங்க வேண்டும் என்பது பொதுமக்களிடம் கேள்வி எழுப்பியிருக்கிறது. உண்மையில், இது ஆளுநர் அனுமதி அல்ல, தமிழக அரசு அனுமதி கொடுத்திருக்கிறது என்பதே உண்மை. கடந்த ஆண்டு தமிழக முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான அண்ணாதுரை குறித்து அண்ணாமலை, ’1956-ம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அம்மனை பற்றி அண்ணா சில கருத்துகளை தெரிவித்ததாகவும், அதற்கு […]

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளில் ஸ்டாலினின் முத்திரைக் கட்டண உயர்வுக்கு கண்டனம்

இன்று எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை அ.தி.மு.க.வினர் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். குடிமராமத்து நாயகர், 7.5 இடஒதுக்கீடு தந்து அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கிய மக்கள் முதல்வர், விடியா அரசின் சிம்மசொப்பனம் என்றெல்லாம் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து போஸ்டர் ஒட்டியும் சமூகவலைதளங்களில் பாராட்டியும் வருகிறார்கள். இன்று அன்னையர் தினம் என்பதை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி, ‘’அம்மா’ என்ற சொல்லை உச்சரிக்கும்போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைப் பெற்றுத் தந்து, தமிழக […]

பெலிக்ஸ் கைதுக்கு சீமான், வேல்முருகன் கடும் எதிர்ப்பு

சவுக்கு சங்கர் அவரது சவுக்கு மீடியா போன்று மறைமுகமாக மேலும் நாலைந்து சேனல் வெவ்வேறு பெயர்களில் நடத்துவதாகவும் அவற்றில் ஒன்று பெலிக்ஸ் நடத்திவரும் ரெட் பிக்ஸ் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி டெல்லியில் பெலிக்ஸ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு தி.மு.க.வுக்கு கடுமையான கண்டனம் எழுப்பியிருக்கிறார் நாம் தமிழர் சீமான். இதுகுறித்து அவர், ‘’ரெட் பிக்ஸ்’ ஊடகத்தின் நிறுவனரும், ஊடகவியலாளருமான அன்புத்தம்பி பெலிக்ஸ் ஜெரால்டு அவர்களைக் கைதுசெய்திருக்கும் திமுக அரசின் பழிவாங்கும் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. […]