News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

மகளிர் அணி நிர்வாகிகள் காலில் விழுந்த பிரதமர் மோடி! நன்றி தெரிவிக்கும் விழா!

டெல்லியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பிரதமர் மோடி தனக்கு நன்றி தெரிவித்து காலில் விழுந்த பெண்களின் காலில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றம் செய்யப்பட்டது. இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பினர் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். அதன்படி டெல்லியில் பா.ஜ.க […]

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பார்வையிட்ட தமன்னா குஷ்பு!

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை தமன்னா, குஷ்பு உள்ளிட்ட நடிகைகள் பார்வையிட்டு மெய்சிலிர்த்து போன சம்பவம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு கடந்த மே மாதம் திறக்கப்பட்டது. இருப்பினும் மழைக்கால கூட்டத்தொடர் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலேயே நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 18ம் தேதி சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல்நாள் அலுவல்கள் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலும் அடுத்தடுத்த நாள் சிறப்புக் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற […]

ராஜ்யசபாவை வழிநடத்திய தி.மு.க. எம்.பி.கனிமொழி சோமு! வரலாற்று சிறப்பு!

மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா தொடர்பான விவாதத்தில் மாநிலங்களவையின் மாற்றுத் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி. டாக்டர் கனிமொழி சோமு அவையை வழிநடத்தியது தமிழகத்தின் பெருமையை பறைசாற்றியுள்ளது.   மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் மசோதா என்ற பெருமை பெற்றது. செப்.21ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவுக்கு அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டதால் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநிலங்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா […]

தமிழக ஆளுநர் மனைவியுடன் காஞ்சி சங்கரமடத்தில் சாமி தரிசனம்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் காஞ்சிபுரம் சங்கரமடத்தில் சாமி தரிசனம் செய்தார். காஞ்சீபுரத்திற்கு சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவி லட்சுமியுடன் காஞ்சிகாமகோடி பீடத்தில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். தமிழ்நாடு நலன் வேண்டி ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி லட்சுமி ரவி, ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தில் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டதற்கு பின்னர், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் சிவபெருமானை வழிபட்டனர். அதைத்தொடர்ந்து ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ […]

சென்னை அண்ணாசாலையில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி! அதிர்ச்சி பின்னணி!

தனக்கு வேலை ஒதுக்கப்படாததால் மனவிரக்தியடைந்த இளைஞர் ஒருவர் சென்னை அண்ணாசாலை தலைமை மின்வாரிய வளாகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மின்வாரியத்தில் தற்காலிக பணியிடங்கள் நிரப்பும் பணி நடைபெற்று வருகின்ற நிலையில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் விண்ணப்பித்து இருந்தனர். தங்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைத்துவிடும் என்று காத்திருந்த போது, ஒரு சிலருக்கு மட்டும் பணி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வேலை கிடைக்காதவர்கள் சென்னை கொளத்தூரில் உள்ள முதலமைச்சர் […]

கோடநாடு விவகாரம்! அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்தியா முழுவதும் பேச்சுப்பொருளாக மாறிய சனாதன ஒழிப்பு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு பல்வேறு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு விமர்சனம் தெரிவித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘‘மக்கள் பிரச்சினையை திருப்பவே சனாதனம் குறித்து உதயநிதி பேசியுள்ளார்’’ என்று தெரிவித்தார். இதற்கு பதிலடியாக கடந்த 7ம் […]

ஆட்டோ டிரைவர் வங்கிக் கணக்கில் ரூ.9,000 கோடி டெபாசிட்! சென்னையில் பரபரப்பு!

சென்னையில் ஆட்டோ ஓட்டுனரின் வங்கிக் கணக்கில் திடீரென 9  ஆயிரம் கோடி வரவு வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரது வங்கிக் கணக்கில் திடீரென்று ரூ.9,000 கோடி ரூபாயை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வரவு வைத்துள்ளது. இது குறித்து அறிந்த சம்பந்தப்பட்ட தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, தாங்கள் தவறுதலாக வரவு வைத்துவிட்டோம் என்று ஆட்டோ டிரைவரை அணுகி வழக்கறிஞர் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி பணத்தை திரும்பப் பெற்றதாக கூறப்படுகிறது. […]

ஜெயலலிதா வலிமையான தலைவர்! புகழ்ந்து பேசிய கனிமொழி எம்.பி.!

மகளிர் இட ஒதுக்கீடு குறித்து பேசிய கனிமொழி எம்.பி. அ.தி.மு.க. முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதாவை புகழ்ந்து தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதன்முதலாக தாக்கல் செய்யப்பட்ட பெருமையை பெற்ற மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா குறித்து தி.மு.க. எம்.பி.கனிமொழி பேசும்போது, ‘‘இந்த மசோதாவை நாங்கள் ஏற்கிறோம். ஆதரிக்கிறோம். ஆனால் துரதிருஷ்டவசமாக பா.ஜ.க. இதனை அரசியலாக்குகிறது என்று தெரிவித்தார். மேலும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த 1996ம் […]

4 மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் திடீர் ஆலோசனை! முக்கிய தகவல்கள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 4 மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்றும் (செப்.21) மற்றும் நாளையும் (செப்.22) ஆகிய 2 நாட்களில் முதலமைச்சர் தலைமையில் சென்னை மண்டல கள ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் […]

ஓ.பி.எஸ்.சுக்கு தடை விதிக்க எடப்பாடி மனு! இன்று விசாரணை!

அ.தி.மு.க. கட்சியின் பெயர், பேரறிஞர் அண்ணாவின் படம் பொறித்த கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக் கோரி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. இரட்டைக்குழலாக இருந்த அ.தி.மு.க.வை தற்போது எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக நடத்தி வருகிறார். மேலும் தான் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டதையும் தேர்தல் ஆணையத்திற்கு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அ.தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி […]