சீமான்- விஜயலட்சுமி வழக்கில் அதிரடி திருப்பம்! போலீசை திட்டித்தீர்த்த உயர்நீதிமன்றம்!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நடிகை விஜயலட்சுமி விவாகரத்தில் மெத்தனமாக செயல்பட்டதாக காவல்துறையை உச்சநீதிமன்ற நீதிபதி கடுமையாக சாடினார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிவிட்டார் என்று நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ம் ஆண்டு வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இவ்வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து நடிகை விஜயலட்சுமி, சீமான் மீதான புகாரை வாபஸ் பெறுவதாக […]
மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் எச்சரிக்கை! அ.தி.மு.க.வில் குளறுபடி!

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திடீரென்று கட்சியின் மாவட்ட செயலாளர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் புகைந்து கொண்டிருந்த தீ தற்போது கொழுந்துவிட்டு எரியத் தொடங்கி பூதாகரமாக வெடித்துள்ளது. முன்னாள் முதல்வர்களான அண்ணாதுரை மற்றும் ஜெயலலிதா பற்றி அவதூறு பரப்பும் வகையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்த நிலையில் இருகட்சிக்கும் இடையில் விரிசல் தொடங்கியது. இந்த நேரத்தில்தான் எடப்பாடி பழனிசாமி, திடீரென்று டெல்லிக்கு சென்று பா.ஜ.க. மூத்த தலைவரான அமித்ஷாவை சந்தித்து […]
முதல்வர் அலுவலகம் முற்றுகை! பரபரப்பு பின்னணி தகவல்கள்!

சென்னை கொளத்தூரில் உள்ள முதலமைச்சரின் அலுவலகத்தை முற்றுகையிட்ட இளைஞர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மின்வாரியத்தில் தற்காலிக பணியிடங்கள் நிரப்பும் பணி நடைபெற்று வருகின்ற நிலையில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் விண்ணப்பித்து இருந்தனர். தங்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைத்துவிடும் என்று காத்திருந்த போது, ஒரு சிலருக்கு மட்டும் பணி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வேலை கிடைக்காதவர்கள் சென்னை கொளத்தூரில் உள்ள முதலமைச்சர் அலுவலகம் முன்பு ஒன்றாக திரண்டு […]
தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!

தமிழகம் முழுவதும் மொத்தம் 40 இடங்களுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கன்வேயர் பெல்ட் சப்ளை செய்து வரும் நிறுவனங்களுக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய மொத்தம் 40 இடங்களில் இன்று காலை முதலே வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்னர் சென்னை உள்பட பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்திய அதே இடங்களில் மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது. […]
மாற்றி அமைக்கப்படும் ஆட்டோ கட்டணம்! தமிழக அரசு தகவல்!

தமிழகத்தில் இன்னும் 12 வாரங்களுக்குள் ஆட்டோ கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி என்பவர் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி ஆட்டே கட்டணத்தை மாற்றி அமைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு குறித்த விசாரணை தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு தொடங்கியது. தமிழக அரசு […]
காவிரி விவகாரம்! கர்நாடக முதலமைச்சர் எம்.பி.க்களுடன் டெல்லி பயணம்!

காவிரி விவாகரம் தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சி எம்.பி.க்களுடன் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று டெல்லி செல்கிறார். தமிழகத்திற்கு கர்நாடகாவிற்கும் இடையிலான காவிரி விவகாரம் எந்த தலைமுறையில்தான் விடிவுக்கு வரும் என்பது பொதுமக்களின் விடைதெரியாத கேள்வியாக உள்ளது. அந்தந்த காலகட்டங்களில் ஆட்சியில் இருக்கும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் காவிரி நீர் குறித்த பிரச்சினைக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து புதுடெல்லியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், மத்திய நீர்வளத்துறை மந்திரி […]
அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் வீட்டில் ரெய்டு! முக்கிய பின்னணி!

அமைச்சர் செந்தில்பாலாஜியின் முன்னாள் உதவியாளர் வீட்டிற்குள் புகுந்த வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மேற்கொண்டதாக எழுந்த புகாரின் பேரில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14ம்தேதி கைது செய்யப்பட்டார். அவரது கைது சட்டப்படியானது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் […]
ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் எம்.பி.யுமான ரவீந்திரநாத் மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் தேனி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். ரவீந்திரநாத்குமாருக்கும் ஆனந்தி என்பவருக்கும் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ரவீந்திரநாத்குமாருக்கும், அவரது மனைவி ஆனந்திக்கும் இடையில் சமீபகாலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் விரைவில் விவாகரத்து செய்துவிட்டு பிரியப் […]
பிரபல தயாரிப்பாளரை மணக்கும் திரிஷா! வெளிவந்த ரகசிய தகவல்கள்!

தமிழ் திரையுலகில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவரின் இளமை மாறாத தோற்றம் 40 வயதை தாண்டியும் இவரை கதாநாயகியாக ரசிகர்கள் மனதில் இருக்க செய்துள்ளது. ஆரம்ப காலத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த திரிஷா இடையில் இருக்கும் இடமே தெரியாமல் இருந்தார். அதைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தை தொடர்ந்து தற்போது கோலிவுட்டில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது நடிகை திரிஷா லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜயுடன் […]
ரஜினிகாந்த் – பி.சி.சி.ஐ. செயலாளர் திடீர் சந்திப்பு! முக்கிய பின்னணி இதோ!

உலகக்கோப்பை 2023ம் ஆண்டுக்கான கோல்டன் டிக்கெட்டை பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து வழங்கினார். 13வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அடுத்த மாதம் (அக்டோபர்) 5ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19ம் தேதி வரை நடக்கிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டி தொடரை காண கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். ஏற்கனவே 8வது முறையாக ஆசியக் கோப்பை தொடரின் […]

