Share via:
0
Shares
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் காஞ்சிபுரம் சங்கரமடத்தில் சாமி தரிசனம் செய்தார்.
காஞ்சீபுரத்திற்கு சென்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவி லட்சுமியுடன் காஞ்சிகாமகோடி பீடத்தில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார்.
தமிழ்நாடு நலன் வேண்டி ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி லட்சுமி ரவி, ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தில் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டதற்கு பின்னர், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் சிவபெருமானை வழிபட்டனர்.
அதைத்தொடர்ந்து ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் ரவி, சனாதன தர்மம் குறித்து உரை நிகழ்த்தி சனாதன தர்மத்தை பரப்புமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்
Tagged latest