News

விஜய் ரோட்டில் இறங்கிட்டாரு… புல்லரிக்கும் விசில் ரசிகர்கள்

Follow Us

அமித்ஷா கேட்பது 29…. இபிஎஸ் சொன்னது எவ்வளவு..?

விஜய்யின் தவெகவை எப்படியாவது தங்கள் பக்கம் வளைத்துப் போட்டுவிடலாம் என்று பாஜக எடுத்த பகீரத முயற்சி தோல்வியில் முடிந்துவிட்டது. எனவே, இன்று பியூஸ் கோயல் சென்னைக்கு வருவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், எடப்பாடிக்கு நேற்று டெல்லியில் இருந்து அழைப்பு வந்தது. இதையடுத்து நேற்று டெல்லிக்குப் போன எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்துவிட்டு சென்னைக்குத் திரும்பிவிட்டார். பாஜகவிற்கு கடந்த தேர்தலில் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இப்போது 24 தொகுதிகள் கொடுப்பதற்கு எடப்பாடி பழனிசாமி தயாராக இருக்கிறார். […]

சீமான் தேர்தல் வாக்குறுதிகள். இனி, தமிழகத்துக்கு 5 தலைநகரம்

  இதுவரை போட்டியிட்ட அத்தனை தேர்தல்களிலும் சீமான் தோல்வி அடைந்துவிட்டார் என்றாலும் முயற்சியைக் கைவிடாமல் இந்த தேர்தலில் தனியே நிற்கிறார். இந்த தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சி ஆட்சி செயற்பாட்டு வரைவு 2026 இன்று சீமானால் வெளியிடப்பட்டது. 49 தலைப்புகளில் 462 பக்க வாக்குறுதிகளை சீமான் வெளியிட்டார். அதில் ஏழ்மை ஒழிப்பு, விவசாயம், மக்கள் நலன் என்றெல்லாம் பேசும் சீமான், இந்த வெளியீட்டு விழாவை லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் சொகுசாக வைத்ததுதான் எல்லோருக்கும் ஆச்சர்யம். அவரது […]

பாஜகவுக்கு எத்தனை சீட்..? அமித்ஷாவுடன் இபிஎஸ் சந்திப்பு

பியூஷ் கோயல் இன்று சென்னைக்கு வந்து அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தையை முடிவு செய்வதற்கு எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லிக்குப் போயிருக்கிறார். தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார். விஜய் தனித்து நிற்பது உறுதியாகியிருப்பதால் தமிழகத்தில் நான்கு முனை போட்டி உறுதியாகியுள்ளது. தி.மு.க கூட்டணியில் ஓரளவிற்கு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் அ.தி.மு.க […]

கரூர் டிரோன் ஷாட் வெளியிட்டது யார்… விஜய் மீது எஃப்.ஐ.ஆர். உறுதி?

கரூர் கட்சி மீட்டிங்கில், ’ஜனநாயகன்’ திரைப்பட குழுவினர் கரூர் மற்றும் நாமக்கல் கட்சி கூட்டம் என இரு இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தியதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து விஜய் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் வாய்ப்பு உண்டு என்று கூறப்படுகிறது. அதேநேரம்,  தமிழக வெற்றிக் கழகத்தின் லைம் ஸ்ட்ரீம் வீடியோவில் பல அதிர்ச்சியூட்டும் உரையாடல்கள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது பாதுகாப்பு அதிகாரி விஜய்யிடம், ‘கடுமையான கூட்டத்தில் சிக்கியிருக்கிறோம், எனவே, ஐந்து நிமிடங்களுக்குள் பேச்சை முடித்துவிடுங்கள்’ என்று கூறுவது […]

இந்திய கம்யூனிஸ்ட்க்கு 5 தொகுதி… 50 கோடி..? என்னா பேச்சு பேசுனாங்க.

காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகள் கொடுத்துவிட்டு, எங்களுக்குக் குறைவாகக் கொடுக்க முடியாது என்றெல்லாம் வெளிப்படையாக கம்யூனிஸ்ட் கட்சிகள் பேசின. இந்த நிலையில், முதல்வர் மு க ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால் தான் தொகுதிகளை குறைத்துக் கொள்ள ஒப்புக்கொண்டோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் வீரபாண்டியன் கூறி கையெழுத்து போட்டுவிட்டார். திமுகவில் இதுவரை காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், மதிமுகவுக்கு 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2, கொமதேகவுக்கு 2 தொகுதிகள், மனிதநேய […]

கூட்டணியை கோட்டை விட்ட விஜய்… வேட்பாளர்கள் எங்கேப்பா..?

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போன்று தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று அறிவித்துவிட்டார்கள். அதாவது, கூட்டணிக்கு யாரும் வரவில்லை என்பதுதான் அர்த்தம். இதுகுறித்து ஆதவ் அர்ஜூனா, ‘’நீங்க 90 நான் 90, நீங்க இரண்டரை ஆண்டு முதலமைச்சர் நாங்கள் இரண்டரை ஆண்டு முதலமைச்சர் என ஆஃபர் கொடுத்தார்கள். எனக்கு ஆஃபர் தேவை இல்லை, தமிழக மக்களின் உண்மையான நம்பிக்கையை மதச்சார்பற்ற சமூக நீதி அரசை தமிழக வெற்றிக்கழகம் உருவாக்கும் […]

எடப்பாடியை டென்ஷனாக்கிய நயன்தாரா…  சண்முகத்தை அடுத்து சீனிவாசன்

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி சார்பில், திமுகவிடம் இருந்து தமிழகத்தை மீட்கும் போராட்டத்தை அனைத்துக் கூட்டணிக் கட்சித்தலைவர்களும் இணைந்து மேற்கொண்டனர்.  சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையிலும், தஞ்சையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையிலும், கடலூரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலும், மதுரையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையிலும் நடைபெற்றது. இதேபோன்று, விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அதிமுக அமைச்சரும், மாநிலங்களவை எம்பியுமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். சி.வி.சண்முகம் பேசுகையில், […]

ரஜினியிடம் விஜய் மன்னிப்பு கேட்பாரா..?  ஆதவ் எஸ்கேப்

தேர்தல் நேரத்தில் தேவையில்லாமல் ரஜினியை பகைத்துக்கொள்ள வேண்டாம், ஆதவ் மன்னிப்பு கேட்டுவிடலாம் என்று விஜய்யிடம் தவெக இரண்டாம் கட்டத்தலைவர்கள் கூறியிருக்கிறாகள். அதற்கு அவர், ‘உண்மையைப் பேசியதற்கு மன்னிப்பு கேட்கணும்னா, அதை நானே மேடையில் ரஜினியிடம் கேட்டுவிடுகிறேன்’ என்று எக்குத்தப்பாக பதில் கூறினாராம். இதையடுத்து இந்த விஷயத்தி ஆதவ் அர்ஜூனா எஸ்கேப் ஆகிவிட்டார். சமீபத்தில் ஆதவ் அர்ஜுனா, ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் திமுக தான்.  விஜய்யை அப்படி யாரும் பயமுறுத்திவிட முடியாது என்று பேசினார். இதற்கு பல்வேறு தலைவர்கள் […]

திமுக கூட்டணியில் காங்கிரஸ் அக்கப்போர். புதுவை தேர்தல் புயல்

தமிழகத்தில் தொகுதி பேரத்தை காங்கிரஸ் கட்சி முடித்துவிட்டாலும், இன்னமும் எந்தெந்த தொகுதி யாருக்கு என்பது முடிவுக்கு வரவில்லை. அதற்குள் பாண்டிச்சேரி பஞ்சாயத்து கொடி கட்டிப் பறக்கிறது. பாண்டிச்சேரியில் வரும் ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் என்பதால் அவசரமாக முடிவெடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நீண்ட இழுபறிக்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டசபை தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் யார் தலைமையில் கூட்டணி என்று திமுகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் போட்டி நிலவுகிறது. 30 […]

விஜய்க்கு டெல்லியில் வெற்றி..? பீதி கிளப்பும் சர்வே ரிசல்ட்

சிபிஐ அலுவலக விசாரணையை தள்ளிப்போட விஜய் முயற்சி செய்தார். ஆனால், விடாப்பிடியாக அழைத்து சுமார் 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் கரூர் பிரச்சாரத்திற்கு தாமதமாக வந்தது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் உள்ளிட்டோர் வழங்கிய பதில்களில் இருந்த முரண்பாடு குறித்து விஜய்யிடம் விசாரணை நடத்தியதாக தகவல்கள் சொல்லப்படுகிறது. மேலும் ஒரு நாள் விசாரணை இருக்கலாம் என்று சொல்லப்பட்ட நிலையில், நேற்றைய தினமே முடித்துக்கொள்ளப்பட்டது. இதையடுத்து டெல்லி சிபிஐ […]