News

விஜய் ரோட்டில் இறங்கிட்டாரு… புல்லரிக்கும் விசில் ரசிகர்கள்

Follow Us

தேர்தல் தேதி வந்தாச்சு. களை கட்டும் தேர்தல் மோதல்

அகில இந்தியாவும் ஆர்வமுடன் எதிர்பார்த்துவந்த தமிழகத்தின் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23 ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் டெல்லியில் அறிவித்தார். இந்தியத் தேர்தல் ஆணையம் 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதிகளை அறிவித்துள்ளது. அதன் விவரங்கள் இதோ: 1. அசாம் – வாக்குப்பதிவு நடைபெறும் தேதி: […]

கம்யூனிஸ்ட், வேல்முருகன் போர்க்கொடி… ஸ்டாலினுக்கு சிக்கலோ சிக்கல்.

ஒரே ஒரு இடம் என்று சொல்லப்பட்டதால் வேல்முருகனும் ஒரு இடத்தைக் குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால் கம்யூனிஸ்ட் கட்சிகளும் கடுமையான அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளன. இன்று தேர்தல் அறிவிப்பு வரும் என்பதால், இன்றைக்குள் கூட்டணியை ஸ்டாலின் முடிவு செய்வார் என்று சொல்லப்படுகிறது. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் 3 கட்டமாகவும் மார்க்சிஸ்ட் கட்சியுடன் 2 கட்டமாகவும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. கூடுதலான தொகுதிகளை இரு கட்சிகளும் கேட்டு வரும் சூழலில், தேமுதிக உள்ளிட்ட புதிய கட்சிகளின் வரவைக் காரணம் […]

தேர்தல் தேதி அறிவிப்பு. விஜய்க்கு குட்பை சொன்ன எடப்பாடி பழனிசாமி

இன்று மாலை தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான தேதி அட்டவணை வெளியிடப்படுகிறது.  இதையடுத்து திங்கள் முதல் தேர்தல் வரைமுறைகள் அமலுக்கு வந்துவிடும். இந்த நிலையில் விஜய்யுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பு விஜய் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்திவிட்டது. விஜய் இன்றும் நாளையும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் பாஜக தலைவர்களை சந்தித்துப் பேசி அதிமுக கூட்டணியில் இணைந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றைய தினம் சாணக்கியா விழாவில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமியிடம் […]

35 பெண்களை ஏமாற்றினாரா..? ராஜீவ்காந்தி மீது பகீர் புகார்

தி.மு.க வின் மாணவர் அணிச் செயலாளராகச் செயல்பட்டு வந்த ராஜீவ் காந்தியை திடீரென அந்தப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு,அவருக்கு கொள்கை பரப்பு இணைச் செயலாளர் என்ற பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அவர் மீது 35 பெண்கள் கூறிய பாலியல் குற்றச்சாட்டே காரணம் என்று கூறப்படுகிறது. நாம் தமிழர் கட்சியிலிருந்து தி.மு.க முகாமிற்கு வந்தார் ராஜீவ் காந்தி. தொடர்ந்து தி.மு.க-வுக்கு ஆதரவாக மேடைகளில் முழங்கிவந்தார். துணை முதல்வர் உதயநிதியின் ஆதரவாளராகவும் அமைச்சர் அன்பில் மகேஸ்க்கு நெருக்கமானவராக மாறினார். இதனால் கடந்த […]

தூத்துக்குடி நிர்பயாவுக்கு நீதி….?. திமுகவை மிரட்டும் அதிமுக போராட்டம்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு ரொம்பவே கெட்டுப்போய் கிடக்கிறது என்பதற்கு சான்றாகப் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இப்போது வேடநத்தம் மாணவி கொலையில் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாத நிலையை, அதிமுக அட்டகாசமாகப் பயன்படுத்திக்கொள்கிறது. இதையே தேர்தல் யுக்தியாக பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார். இதையடுத்து ளாத்திக்குளம் வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில், பாதிக்கபட்ட மாணவிக்கு உரிய நீதி வேண்டி,தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், பிரமாண்ட ஊர்வலம் நடத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தலையில் நடைபெற்ற […]

விஜய் கூட்டணி உறுதியாகிறதா..? எடப்பாடி முடிவு என்ன..?

பாஜகவை பாசிசம் என்று வர்ணித்த விஜய், இப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையாலாமா என்பது குறித்து விவாதம் நடத்தத் தொடங்கியிருக்கிறார்.   கடந்த காலங்களில் அதிமுகவும், பாஜகவும் அழைத்தபோது மறுத்த விஜய், இப்போது தானாகவே முன்வந்து கூட்டணிக்கு வருவதற்கு முக்கிய காரணம், வேட்பாளர் தேர்வு குறித்த சிக்கல்கள் என்கிறார்கள். கட்சித் தலைமையின் நிபந்தனைப்படி, வேட்பாளர்கள் குறைந்தபட்சம் 5 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும், அதற்கான ஆதாரத்தையும் காட்ட வேண்டும் என்பதால், மா.செக்கள் ஆட்களைத் திரட்ட முடியாமல் […]

எம்.ஜி.ஆர். பெயரில் சசிகலா புதிய கட்சி. ஜெயலலிதாவை மறந்துவிட்டாரா..?

தேர்தல் வருவதையொட்டி தினம் ஒரு கட்சி உருவாகிவருகிறது. சமீபத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், பெங்களூரு புகழேந்தி, ஆம்ஸ்ட்ராங் மனைவி ஆகியோர் கட்சி ஆரம்பித்தார்கள். அந்த வரிசையில் இன்று சசிகலாவும் தேர்தலுக்குப் புதிய கட்சியைத் தொடங்கிவிட்டார். ஏற்கெனவே சசிகலா வீட்டில் தினகரன், திவாகரன், சின்ன எம்.ஜி.ஆர். சுதாகரன் ஆகியோர் கட்சி தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் வரிசையில் இப்போது சசிகலா இன்று அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்று ஒரு கட்சியைத் தொடங்கியிருக்கிறார். மதுரையைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் […]

ரஜினியை விட விஜய்க்கு தைரியம் அதிகமா..? த்ரிஷாவுக்காக ஆதவ் பேச்சு

ரஜினியை திமுக மிரட்டி அரசியலுக்குள் நுழையவிடாமல் தடுத்துவிட்டது. ஆனால், விஜய்யை அப்படி செய்ய முடியாது. விஜய் யாருக்கும் பயப்பட மாட்டார் என்று ஆதவ் அர்ஜூனா பேசிய விவகாரத்தின் பின்னணியில் த்ரிஷா விவகாரம் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதேநேரம், விஜய் பேசியதன் அடிப்படையிலே ஆதவ் இப்படி பேசியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால், ரஜினியை எல்லா வகையிலும் முந்திவிட்டதாக காட்டவேண்டும் என்கிற எண்ணம் விஜய்க்கு இருக்கிறது. அதன் ஒரு வெளிப்பாடுதான் “லியோ” சினிமா விழாவில் வம்படியாக விஜய் “காட்டுல காக்கா கழுகு […]

மீண்டும் அதிமுகவில் இணைந்த காளியம்மாள். எந்த தொகுதி.. என்ன பதவி?

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் இன்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். விஜய் கட்சிக்குப் போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ‘’2026 தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் மக்கள் நிறைய பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். விலைவாசி உயர்வு முதல் சட்டம் ஒழுங்கு வரை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பிரச்சினைகளை சந்தித்துக்கொண்டே இருக்கிறார்கள். மக்கள் ஏமாற்றப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். […]

வைகோவை சுருட்டிய ஸ்டாலின். திகிலில் திருமா

ஒரு காலத்தில் ஜெயலலிதா கட்சியில் 35 தொகுதிகள் வாங்கிய மதிமுக இன்று திமுகவில் 4 தொகுதிகள் வாங்கும் அளவுக்கு சுருங்கிவிட்டது. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல், ‘’தி.மு.க கூட்டணியில் எங்களால் எந்த பிரச்சினையும் வராது. புதிய கட்சிகள் வரவால் கடந்த தேர்தலில் போட்டியிட தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது’’ துரை.வைகோ பேசியிருப்பதை அவர் கட்சியினரே எதிர்க்கிறார்கள். மதிமுகவின் வரலாறு சுவாரஸ்யமானது. திமுகவுக்கு மாற்றாக வைகோ விளங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனால், 2006 […]