News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நல்ல கூட்டணி யாருமே இல்லையா..?

நல்ல கூட்டணி யாருமே இல்லையா..? 2024 மக்களவைத் தேர்தலில் அனைத்து கட்சியினரும், ‘கள்ளக் கூட்டணி’ என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். கூட்டணியில் இருந்து வெளியே வந்த பிறகும் பிரதமர் மோடி மீது ஒரே ஒரு குற்றச்சாட்டு கூட எடப்பாடி பழனிசாமி பேசவே இல்லை. ஆகவே, அவர்களுக்குள் கள்ளக்கூட்டணி இருக்கிறது என்கிறார் முதல்வர் ஸ்டாலின். எடப்பாடி பழனிசாமியோ, ‘எதிர்கட்சியாக இருந்த நேரத்தில் கோ பேக் மோடி சொன்ன ஸ்டாலின் இப்போது கமான் கமான் என்று கூப்பிடுகிறார். டெல்லியில் போய் […]

துரை வைகோவை கதற வைக்கும் திராவிட மாடல்..!

பெரியண்ணன் மனப்பான்மையுடன் கூட்டணிக் கட்சிகளை அணுகுவதே தி.மு.க.வின் தேர்தல் ஸ்டைல். இந்த தேர்தலில் ம.தி.மு.க.வினர் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், தனிச்சின்னத்தில் நிற்கப் போகிறோம் என்று வைகோ உறுதிபட தெரிவித்துவிட்டார். அதன்படி திருச்சி  தொகுதி ஒதுக்கப்பட்டு, அங்கு துரை வைகோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டு விட்டார். திருச்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய தி.மு.க.வினர் ம.தி.மு.க.வை முடிந்த வரையிலும் அவமானப்படுத்துவது போலவே பேசினார்கள். நீங்கள் மக்களைத் தேடிப் போக வேண்டாம், நேருவை சுற்றிச்சுற்றி […]

மோடியின் அடுத்த டார்கெட் ராகுல் காந்தியா..?

எதிர்க் கட்சிகளே இல்லாமல் தேர்தலில் ஜெயித்துவிட வேண்டும் என்பது போன்று ஆளும் பா.ஜ.க. அரசு பல்வேறு அதிரடிகளை நிகழ்த்திவருகிறது. காங்கிரஸ் கூட்டணிக் கட்சித் தலைவரான ஹேமந்த் சோரன் முதல்வராக இருந்தபோதே கைது செய்தது. வேறு ஒருவரை முதல்வராக்கிவிட்டு அவர் ஜெயிலுக்குப் போனார்.அதேபோல் இண்டியா கூட்டணியில் தற்போது இணைந்து தீவிரம் காட்டி வரும் அரவிந்த் கெஜ்ரிவாலை மடக்குவதற்கு எத்தனையோ முறை முயன்றது. ஆனாலும், அவர் பா.ஜ.க.வுக்கு எதிராக உறுதியாக நின்ற காரணத்தால் அவரை அமலாக்கத்துறை மூலம் கைது செய்து […]

காட்டு யானைகளுடன் போட்டியிடும் கன்றுக்குட்டி

காட்டு யானைகளுடன் போட்டியிடும் கன்றுக்குட்டி மூன்றாவது முறையாக 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஜெயித்தே தீருவோம் என்று தேசியக் கட்சியான பா.ஜ.க. தீவிரமான பிரசாரத்திலும் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறது.  அதனை தடுத்து நிறுத்துவதற்காக மாநிலக்கட்சிகளின் துணையுடன் காங்கிரஸ் கட்சி களம் இறங்கியுள்ளது. குறிப்பாக நம் தமிழகத்தில் இரண்டு திராவிடக் கட்சிகளும் இந்த தேர்தலை தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் போராட்டத்தை தொடங்கியுள்ளன. இந்த நிலையில் கையில் இருந்த சின்னத்தையும் பறி கொடுத்துவிட்டு, வேறு ஒரு சின்னம் கிடைக்கவில்லை என்றாலும் […]

ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பழம்

பரபரப்பு அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியிருக்கும் முன்னாள் வி.ஐ.பி.களை எல்லாம் தேடிப்பிடித்து கட்சியில் சேர்த்துவருவதை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முழு நேரப் பணியாக செய்துவருகிறார். அதேபோல் லெட்டர் பேடு கட்சிகளையும் கூட்டணி சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டிவருகிறார். இந்த நிலையில்தான் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாருடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்வந்தார் அண்ணாமலை. சரத்குமாரின் பேரத்தைக் கேட்ட அண்ணாமலை, ஒட்டுமொத்தமாக கட்சிக்கே ரேட் பேசிவிட்டார். கட்சி நடத்துகிறேன் என்று ஒவ்வொரு தேர்தலுக்கும் பெரிய கட்சிகளைத் தேடிப் பிடித்து […]

இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு பா.ஜ.க. இறுதிச்சடங்கு..!

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திடீரென இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை பா.ஜ.க. அரசு அமல்படுத்தியிருக்கிறது. நம் இந்திய நாட்டில் மட்டுமே ஜாதி, மதம் என மக்களைப் பிரிக்காத குடியுரிமைச் சட்டம் இருக்கிறது. இந்த சட்டத்தில் திருத்தம் செய்திருக்கிறது மத்திய அரசு.  இந்த சட்டத்திருத்தம் அண்டை நாடுகளில் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் வெளிப்படையாக அழைப்பு கொடுக்கிறது. அதே நேரம் உள்நாட்டில் உள்ள முஸ்லிம்களுக்கு நேரடியான அச்சுறுத்தலையும், அவமானத்தையும் கொடுக்கிறது. இந்த சட்டம் நேரடியாக முஸ்லிம்களுக்கு எதிரானது, இலங்கைத் […]

சிறுத்தை எப்பொழுது சிறுத்தையாக மாறும்

தி.மு.க. கூட்டணியில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எந்த சத்தமும் போடாமல் இரண்டு சீட்டுக்கு சம்மதம் தெரிவித்து கையெழுத்து போட்டுவிட்டார்கள். ஆனால், திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகளால் இன்னமும் உடன்பாட்டுக்கு வர முடியவில்லை. இரண்டு தனித் தொகுதிகள் ஒரு பொதுத்தொகுதி என்று கேட்டு வருகிறார் திருமாவளவன். தங்கள் கட்சி மிகப்பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது, எல்லா காலகட்டத்திலும் தி.மு.க.வுக்கு துணையாக நிற்கிறது. எனவே, இரண்டு சீட் போதாது என்று திருமாவளவன் கோரிக்கை வைக்கிறார். இதெல்லாம் நிஜம், நியாயம் என்றாலும் தி.மு.க இந்த […]

விவசாயிகளுக்கு எதிராக வில்லத்தனம்

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்து 10 வருடங்கள் நிறைவடையப் போகிறது. இந்த காலகட்டத்தில் சீனப் படைகள் பல முறை நமது எல்லைக்குள் வந்து ஆக்கிரமிப்பு செய்தது மட்டுமின்றி, நமது நிலங்களையும் பறித்துக்கொண்டது. இதுவரை சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து ஒரே ஒரு முறை கூட பிரதமர் பேசியதே இல்லை. அதேநேரம், விவசாயிகள் டெல்லியை நோக்கி வருகிறார்கள் என்று செய்தி கேட்டதுமே, தன்னுடைய ஆட்சியின் வீரியத்தைக் காட்டத் தொடங்கியிருக்கிறார். விவசாயிகள் வரும் பாதைகளை அடைத்து வைப்பது, ரோடுகளில் ஆணிகளை […]

கதவு திறந்திருக்கு…. வீட்டை காணோமே பாஸ்..?

கூட்டணிக் கதவுகள் திறந்தே கிடக்கின்றன என்று ஒவ்வொரு மீட்டிங்கிலும் மீண்டும் மீண்டும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தாலும், அ.தி.மு.க. கதவுகள் திறக்கப்படவே இல்லை. அண்ணாமலை மாற்றப்படாத பட்சத்தில் பா.ஜ.க.வுடன் பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை என்பது எடப்பாடி பழனிசாமியின் கணக்கு. ஆனால், அண்ணாமலையை மாற்றுவதற்கு அமித் ஷாவின் ஈகோ இடம் கொடுக்கவில்லை. ஆகவே, இரண்டு பக்கமும் கண்ணாமூச்சு ஆட்டம் தொடர்ந்து நடக்கிறது. எதிர்முகாம் தி.மு.க.வில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடமே ஒதுக்கி தேர்தல் வேலையைத் தொடங்கிவிட்டார்கள். […]

அதிமுகவுக்கு கூட்டணி அம்பு..

கூட்டணிக் கதவுகள் மூடப்பட்டு விட்டன, பா.ஜ.க.வுடன் இனி கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி இப்போது மேடைக்கு மேடை பேசத் தொடங்கியிருக்கிறார். ஆனால், இதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், எடப்பாடி பழனிசாமி கண்டிப்பாக பா.ஜ.க. கூட்டணிக்கு வந்துவிடுவார் என்று பா.ஜ.க. பெருந்தலைகள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதேநேரம், அ.தி.மு.க.வில் அத்தனை அணிகளும் ஒன்றாக இணைந்துவிடும் என்று சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் இப்போதும் நம்புகிறார்கள். இந்த நிலையில், கூட்டணி வைக்கவில்லை என்றால் வலிமையாக தி.மு.க.வுக்கு எதிராக அத்தனை கட்சிகளும் அம்பலப்பட்டுப் […]