News

Follow Us

கூட்டணிக் கதவுகள் மூடப்பட்டு விட்டன, பா.ஜ.க.வுடன் இனி கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி இப்போது மேடைக்கு மேடை பேசத் தொடங்கியிருக்கிறார். ஆனால், இதை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், எடப்பாடி பழனிசாமி கண்டிப்பாக பா.ஜ.க. கூட்டணிக்கு வந்துவிடுவார் என்று பா.ஜ.க. பெருந்தலைகள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதேநேரம், அ.தி.மு.க.வில் அத்தனை அணிகளும் ஒன்றாக இணைந்துவிடும் என்று சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் இப்போதும் நம்புகிறார்கள்.

இந்த நிலையில், கூட்டணி வைக்கவில்லை என்றால் வலிமையாக தி.மு.க.வுக்கு எதிராக அத்தனை கட்சிகளும் அம்பலப்பட்டுப் போகும் என்பதாலே மீண்டும் மீண்டும் பா.ஜ.க. எடப்பாடிக்கு தூண்டில் வீசுகிறது. மோடியுடன் கூட்டணி இல்லை என்று சொல்லும் எடப்பாடி பழனிசாமி இதுவரை மோடியை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை என்பதுதான், இத்தனை யூகங்களுக்கும் காரணமாக இருக்கிறது.

திட்டுங்க பழனிசாமி திட்டுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link