Share via:
பரபரப்பு அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியிருக்கும் முன்னாள் வி.ஐ.பி.களை எல்லாம் தேடிப்பிடித்து கட்சியில் சேர்த்துவருவதை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முழு நேரப் பணியாக செய்துவருகிறார். அதேபோல் லெட்டர் பேடு கட்சிகளையும் கூட்டணி சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டிவருகிறார்.
இந்த நிலையில்தான் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாருடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்வந்தார் அண்ணாமலை. சரத்குமாரின் பேரத்தைக் கேட்ட அண்ணாமலை, ஒட்டுமொத்தமாக கட்சிக்கே ரேட் பேசிவிட்டார்.
கட்சி நடத்துகிறேன் என்று ஒவ்வொரு தேர்தலுக்கும் பெரிய கட்சிகளைத் தேடிப் பிடித்து சீட் வாங்குவதற்கு நொந்து நூடுல்ஸ் ஆகியிருந்த சரத்குமார், இந்த பொன்னான வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். இரவு 2 மணிக்கு சித்தி ராதிகாவிடம் பர்மிஷன் வாங்கி, 2.30 மணிக்கு ஒப்புதல் கொடுத்துவிட்டார். ஆக, அண்ணாமலையின் பழைய பாத்திர வியாபாரத்தில் சமத்துவ மக்கள் கட்சியும் சங்கமம் ஆகிவிட்டது.