Share via:
காட்டு யானைகளுடன் போட்டியிடும் கன்றுக்குட்டி
மூன்றாவது முறையாக 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஜெயித்தே தீருவோம் என்று தேசியக் கட்சியான பா.ஜ.க. தீவிரமான பிரசாரத்திலும் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறது.
அதனை தடுத்து நிறுத்துவதற்காக மாநிலக்கட்சிகளின் துணையுடன் காங்கிரஸ் கட்சி களம் இறங்கியுள்ளது. குறிப்பாக நம் தமிழகத்தில் இரண்டு திராவிடக் கட்சிகளும் இந்த தேர்தலை தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் போராட்டத்தை தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் கையில் இருந்த சின்னத்தையும் பறி கொடுத்துவிட்டு, வேறு ஒரு சின்னம் கிடைக்கவில்லை என்றாலும் மக்கள் மீது இருக்கும் நம்பிக்கையில் தன்னந்தனியாக நாம் தமிழர் கட்சியும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
மதவெறியும் திராவிட வெறியும் பிடித்த இரண்டு யானைகளுக்கு நடுவில் நாம் தமிழர் கட்சியும் தனியே போராடுவது ஜனநாயக ரீதியில் பாராட்டுக்கு உரியது என்றாலும் பரிதாப்பபடாமல் இருக்கவும் முடியவில்லை.