News

சீமான் மானம் காற்றில் பறக்குது. மீண்டும் விஜயலட்சுமி ருத்ரதாண்டவம்.

Follow Us

பெரியண்ணன் மனப்பான்மையுடன் கூட்டணிக் கட்சிகளை அணுகுவதே தி.மு.க.வின் தேர்தல் ஸ்டைல். இந்த தேர்தலில் ம.தி.மு.க.வினர் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால், தனிச்சின்னத்தில் நிற்கப் போகிறோம் என்று வைகோ உறுதிபட தெரிவித்துவிட்டார். அதன்படி திருச்சி  தொகுதி ஒதுக்கப்பட்டு, அங்கு துரை வைகோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டு விட்டார். திருச்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய தி.மு.க.வினர் ம.தி.மு.க.வை முடிந்த வரையிலும் அவமானப்படுத்துவது போலவே பேசினார்கள்.

நீங்கள் மக்களைத் தேடிப் போக வேண்டாம், நேருவை சுற்றிச்சுற்றி வந்தாலே ஜெயித்து விடலாம் என்றும் உதயசூரியன் சின்னத்தில் நில்லுங்கள் என்றும் பொதுமேடையில் வைத்து நெருக்கடி கொடுத்தார்கள். இதையெல்லாம் கேட்டு கலங்கிய துரை வைகோ, ‘செத்தாலும் தனிச்சின்னம்’ என்று அறிவித்தாலும் ஒரு சீட்டுக்காக இப்படியெல்லாம் கேவலப்பட வேண்டியிருக்கிறதே என்று கணகள் கலங்கிவிட்டார்.

கூட்டணிக் கட்சிகளுக்கு மரியாதை கொடுக்காமல் விரட்டுவது தான் திராவிட மாடலா என்பதை ஸ்டாலினே விளக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link