பா.ஜ.க. வேட்பாளர் தேவநாதன் யாதவ் இந்துக்கள் பணத்தை சுருட்டிட்டாரா..? ஆட்டம் காணும் மயிலாப்பூர் நிதி நிறுவனம்

கண்ட கண்ட நிதி நிறுவனங்களிலும் பணத்தை முதலீடு செய்யாதீர்கள் என்று எத்தனை எடுத்துச்சொன்னாலும் மக்கள் கேட்பதே இல்லை. வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடு செய்துவிட்டு பின்னர் லபோதிபோவென வயிற்றில் அடித்துக்கொள்கிறார்கள். அப்படியொரு சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறது, தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட் என்ற நிதி நிறுவனம். இந்த நிதி நிறுவன பணத்தை தேர்தல் செலவுக்காக பா.ஜ.க. வேட்பாளர் தேவநாதன் யாதவ் சுருட்டிவிட்டார் என்று பரபரப்பு கிளம்பியிருக்கிறது. சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872ம் ஆண்டு […]
அமைச்சர் துரைமுருகன் மகனுக்கு மீண்டும் சிக்கல்… வேலூர் தேர்தல் தள்ளிப் போகுமா..?

மக்களவைத் தேர்தலில் தி.மு.க.வினரே அதிருப்தி அடைந்திருக்கும் ஒரு வேட்பாளர் என்றால், அவர் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் மட்டும்தான். அப்பாவின் செல்வாக்கில் காய் நகர்த்தி சீட் வாங்கிவிட்டு மக்களை கண்டுகொள்ளவே செய்யாதவர். கடந்த தேர்தலில் இவரது வேலூர் தொகுதியில் எக்கச்சக்கமாக பணம் புரண்டோடியதால் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு தனியாக நடத்தப்பட்டது. இந்த நிலையில், இந்த தேர்தலிலும் அப்படியொரு சூழல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், மீண்டும் அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமானவர் வீட்டில் […]
தி.மு.க.வின் சிற்றரசு, இயக்குனர் அமீர் வீடுகளில் ரெய்டு.! உதயநிதிக்கு குறி வைக்கிறதா அமலாக்கத்துறை..?

மக்களவைத் தேர்தல் நேரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியே இருக்கக்கூடாது என்று திட்டமிட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை மீது தி.மு.க.வினர் குற்றம் சாட்டிவரும் நிலையில், இன்று சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிற்றரசு மற்றும் இயக்குனர் அமீர் உள்ளிட்ட பலர் இடங்களில் ரெய்டு நடைபெறுகிறது. இது பா.ஜ.க. அரசை கடுமையாக விமர்சனம் செய்யும் உதயநிதிக்கு சிக்கல் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. டெல்லியில் 2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் மத்திய […]
இன்ஸ்டாகிராமுக்கு பா.ஜ.க. தடை..? சீமான் நெத்தியடி

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும் நாம் தமிழர் சீமானுக்கும் நாளுக்கு நாள் மோதல் வலுப்பெற்று வருகிறது. மூன்றாவது இடம் யாருக்கு என்பதற்கான மோதல் இதுவென சொல்லப்படும் நிலையில் செய்தியாளர்களிடம் இன்ஸ்டாகிராம் பற்றி பேசி பரபரப்பு கிளப்பியிருக்கிறார் சீமான். சீமான் செய்தியாளர்களிடம், ‘இப்போது சுமார் 3 கோடியே 90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இப்போதுதான் ஒரு இடத்தில் பிடித்திருக்கிறார்கள், அப்படி என்றால் மற்ற இடங்களில் பணம் கொடுக்கவில்லையா? பணம் செல்லவில்லை என்று அர்த்தமா? ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களை […]
நெல்லையில் தேர்தல் நிறுத்தம்..? நயினார் நாகேந்திரனுக்கு அண்ணாமலை ஆப்பு?

நெல்லை தொகுதியை சரத்குமாருக்குத் தரவேண்டும் என்பது தான் பா.ஜ.க.வின் கணக்காக இருந்தது. ஆனால், மத்திய அமைச்சர் கனவில் இருந்த நயினார் நாகேந்திரன் இதனை முறியடிக்கும் வேலையில் இறங்கினார். எனவே, கட்சி அறிவிக்கும் முன்னரே தானே தேர்தல் பிரசாரத்தை தொடங்கியே விட்டார் நயினார் நாகேந்திரன். ‘அண்ணா, இன்னும் வேட்பாளர் பரிசீலனை நடக்கவே இல்லை, அதற்குள் நீங்களே கட்சிக் கட்டுப்பாட்டை மீறலாமா?’ என்று அண்ணாமலை கேள்வி கேட்ட நேரத்தில், ‘நீங்க எதுக்காக இப்படி கேட்குறீங்கன்னு தெரியும், நான் இந்த தொகுதியை […]
விக்கிரவாண்டி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார்!

விக்கிரவாடிண் தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் தி.மு.க.வினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட அத்தியூர் திருவாதி பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. அமைச்சர் பொன்முடியின் நெருங்கிய நண்பரான புகழேந்திக்கு வயது 71. தி.மு.க.வின் 1973 காலகட்டத்திலேயே கட்சியின் கிளை செயலாளராக பணியாற்றி அதன் பின்னர 1980 முதல் 1986 வரையிலான காலகட்டத்தில் தி.மு.க. மாவட்ட பிரதிநிதியாக செயல்பட்டார். 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் […]
விந்தியாவுக்கு கை கொடுக்க கார்த்திக் வந்தாச்சு… குஷியில் அ.தி.மு.க.

கடந்த தேர்தலில் எடப்பாடிக்கு ஆதரவாக பேசிவந்த செந்தில் இப்போது எதிர்முகாமில் பேசிக்கொண்டு இருக்கிறார். நட்சத்திரங்களில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவருவது நடிகை விந்தியா மட்டுமே. அவர் ஸ்டாலின், உதயநிதி என்று அத்தனை பேரையும் கடுமையாகத் தாக்கி பேசிவருகிறார். இப்போது அவருக்கு கை கொடுக்க நடிகர் கார்த்திக்கை கடைசி கட்டத்தில் இறக்கி விட்டுள்ளனர். தேர்தல் நேரங்களில் மட்டும் களத்தில் எட்டிப் பார்க்கும் கார்த்திக் அதன்பிறகு காணாமல் போய்விடுவார். ஒரு காலத்தில் தென் மாவட்டங்களில் கார்த்திக்குக்கு அமோக வரவேற்பு இருந்தது. […]
ஜெயலலிதாவின் ஆத்மா பன்னீருக்கு கொடுத்த தண்டனை… எடப்பாடி பழனிசாமி திகில் அட்டாக்

முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மீது அட்டாக் செய்துவந்த எடப்பாடி பழனிசாமி திடீரென பன்னீர்செல்வம் மீது பாய்ந்திருக்கிறார். ஈரோட்டில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய விவகாரம் வைரலாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடியில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “அதிமுகவை வீழ்த்த, திமுக தலைவர் எத்தனையோ அவதாரங்களை எடுத்துவிட்டார். திமுக எடுத்த அத்தனை அவதாரங்களையும் மக்களின் துணையோடு தவிடுபொடியாக்கிய கட்சி அதிமுக. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சியில் […]
கனிமொழி ஆதரவாளருடன் மல்லுக்கட்டும் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் – தென்காசியில் வெற்றி யாருக்கு

தி.மு.க.வின் சிட்டிங் எம்.பி.யான தனுஷ் எம்.குமாருக்குத்தான் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், ராணி ஸ்ரீ குமார் என்ற புதுமுகத்துக்கு தென்காசியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மயக்கவியல் நிபுணராகப் பணியாற்றி வரும் ராணி முதன்முறையாக தேர்தலில் போட்டியிட உள்ளார். இவ கனிமொழி ஆதரவாளர் என்ற ஒரே தகுதியில் சீட் வாங்கியிருக்கிறார். அதேநேரம் ராணி ஸ்ரீகுமார் பாரம்பர்ய தி.மு.க குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரின், பெரியப்பா பே.துரைராஜ், சங்கரன்கோவில் தொகுதியிலிருந்து ஏற்கெனவே இரண்டு முறை சட்டமன்ற […]
பெண்களுக்கு நிதி, மாணவர்களுக்கு செல்போன், நீட் விலக்கு… திராவிட மாடலில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

தமிழகத்தில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை ஒட்டியே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியாகியிருக்கிறது. இதனை காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவரான முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் வெளியிட்டனர். தேசிய அளவில் சாதிவாரி, சமூக – பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை […]

