Share via:
கடந்த தேர்தலில் எடப்பாடிக்கு ஆதரவாக பேசிவந்த செந்தில் இப்போது
எதிர்முகாமில் பேசிக்கொண்டு இருக்கிறார். நட்சத்திரங்களில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக
குரல் கொடுத்துவருவது நடிகை விந்தியா மட்டுமே. அவர் ஸ்டாலின், உதயநிதி என்று அத்தனை
பேரையும் கடுமையாகத் தாக்கி பேசிவருகிறார்.
இப்போது அவருக்கு கை கொடுக்க நடிகர் கார்த்திக்கை கடைசி கட்டத்தில்
இறக்கி விட்டுள்ளனர். தேர்தல் நேரங்களில் மட்டும் களத்தில் எட்டிப் பார்க்கும் கார்த்திக்
அதன்பிறகு காணாமல் போய்விடுவார். ஒரு காலத்தில் தென் மாவட்டங்களில் கார்த்திக்குக்கு அமோக வரவேற்பு இருந்தது.
அவரது தந்தை முத்துராமன்
தன்னை தேவர் குல பிரதிநிதியாக சினிமாவில் அடையாளம் காட்டிக் கொண்டார். தொடர்ச்சியாக
அம் மக்களை சந்தித்து வந்தார். அதனால் அவர் படத்திற்கு ஒரு மினிமம் கேரண்டியாக கூட்டம்
வந்தது. முத்துராமன் மகன் என்பது அடுத்த பிரதிநிதியாகவே அம் மக்களை பார்க்க வைத்தது.
கார்த்திக் தன்னால்
சினிமாவில் ஜெயிக்க முடியும் என்ற நிலையில் இருந்தவரை அவர் இந்த ஜாதி அரசியல் வேண்டாம்
என்று தான் இருந்தார். இனி தன்னால் நாயகனாக வெற்றி பெற முடியாது என்ற நிலையில் இதை
எடுத்தார். ஆனால், அவருக்குக் கிடைத்த வரவேற்பை தக்க வைத்துக்கொள்ள அவரது உடலும் பழக்க
வழக்கங்களும் ஒத்துழைக்கவில்லை.
ஆகவே, தேர்தலுக்குத்
தேர்தல் பெட்டி வாங்கிக்கொண்டு பிரசாரம் செய்யும் காமெடி நடிகர் போன்று மாறிவிட்டார்.
அவர் இப்போது அ.தி.மு.க.வை ஆதரித்து மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர்,
திருச்சி, கோவைக்கு சுற்றுப்பயணம் போட்டிருக்கிறார்கள்
இந்த தேர்தலில் என்னவெல்லாம்
பேசப் போகிறாரோ..?