Share via:
முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மீது அட்டாக் செய்துவந்த
எடப்பாடி பழனிசாமி திடீரென பன்னீர்செல்வம் மீது பாய்ந்திருக்கிறார். ஈரோட்டில் நடந்த
பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய விவகாரம் வைரலாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடியில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில்
எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “அதிமுகவை வீழ்த்த, திமுக தலைவர் எத்தனையோ அவதாரங்களை
எடுத்துவிட்டார். திமுக எடுத்த அத்தனை அவதாரங்களையும் மக்களின் துணையோடு தவிடுபொடியாக்கிய
கட்சி அதிமுக. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சியில் எத்தனை
பிரச்சினைகள் ஏற்பட்டது, என்பதை அனைவரும் அறிவர்.
இந்த இயக்கத்தை அழிக்க ஸ்டாலின் போட்ட திட்டங்கள் அத்தனையும்,
மக்களின் துணையோடு தூள் தூளாக்கப்பட்டது. அந்த நேரத்தில், ஆளுநரின் உத்தரவின்பேரில்,
சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். பேரவைத் தலைவர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை
நிரூபிக்க ஆணையிட்டார். அதன்படி அதற்கான வாக்கெடுப்பு நடந்தபோது, என்னென்ன கூத்து நடந்தது
என்பது அனைவரும் அறிவர்.
அன்று அதிமுகவுக்கு எதிராக வாக்களித்தவர்கள் யார் என்பதும் தெரியும்.
அன்றைய தினமே, எம்ஜிஆர்,ஜெயலலிதாவின் ஆத்மா ஒருவருக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று
எண்ணியது. அந்த தண்டனை இன்றைக்கு கொடுக்கபப்டடு விட்டது. இந்த இயக்கத்துக்கு யார் துரோகம்
செய்தாலும், இப்போது ஒருவர் இருக்கிறாரே, அவருக்கு கிடைத்த பரிசுதான் கிடைக்கும். இந்த
இயக்கம் தெய்வ சக்தி உள்ள இயக்கம்.
தெய்வ சக்தி உள்ள தலைவர்கள் தோற்றுவித்து, கட்டிக்காத்த இயக்கம்.
இந்த இயக்கத்துக்கு யார் துரோகம் செய்தாலும் அவர்கள் தானாக அழிந்து போவார்கள்…’’ என்று
சாபம் கொடுத்தார்.