News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

திருப்பதி பிரம்மோற்சவம் திருமலை திருப்பதி ஏழுமலையான் கருட சேவை இன்று நடைபெற்று நிகழ்ச்சி படங்கள்

திருப்பதி பிரம்மோற்சவம் திருமலை திருப்பதி ஏழுமலையான் கருட சேவை இன்று நடைபெற்று நிகழ்ச்சி படங்கள்  

உலகமே எதிர்பார்த்த நாள் இன்று! முக்கிய முயற்சியில் இஸ்ரோ!

நிலவின் தென்துருவத்தில் இன்று சூரிய ஒளி விழ உள்ளதால் உறக்கத்தில் இருக்கும் லேண்டரை மீண்டும் இயக்குவதில் இஸ்ரோ தனது முழு முயற்சியை மேற்கொண்டு வருவது உலகையே திரும்பி  பார்க்க வைத்துள்ளது. கடந்த ஜூலை 14ம் தேதி எல்.வி.எம்.3 ராக்கெட் மூலம் சந்திராயன் 3 விண்கலம் பகல் 2.35 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது கடந்த ஆகஸ்டு மாத்ம 23ம் தேதி மாலை 6.04 மணியளவில் புவி மற்றும் நிலவின் வட்டப்பாதையை கடந்து விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் […]

மறைந்த ராமஜெயத்தின் 62வது பிறந்தநாள் இன்று! கொலை வழக்கு கடந்து வந்த பாதை!

தமிழகத்தையே உலுக்கிய அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயத்தின் பிறந்தநாள் இன்று. அவரது மர்ம கொலை குறித்தும் எந்த முன்னேற்றமும் இல்லாத ராமஜெயத்தின் கொலை வழக்கு கடந்த வந்த பாதை குறித்தும் இந்த சிறப்பு தொகுப்பில் பார்க்கலாம். கடந்த 2012ம் ஆண்டு திமுக முதன்மைச்செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டார். நடைபயிற்சி மேற்கொண்டிருந்த காலை நேரத்தில் ராமஜெயம் படுகொலை செய்யப்பட்ட  நிலையில், அவரது உடல் திருவளர்சோலை அருகே கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை […]

சனாதன சர்ச்சை பேச்சு! அமைச்சர் உதயநிதி பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

சனாதன சர்ச்சை பேச்சு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், தமிழக அரசும் பதில் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் என்பது டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்றது. இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது என்றும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று தெரிவித்தார். அமைச்சர் உதயநிதியின் இந்த பேச்சுக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இருப்பினும் சனாதனத்தை எதிர்த்து என் குரல் […]

காவிரி விவகாரத்தில் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை! &அமைச்சர் துரைமுருகன்!

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்றக் கொண்ட உச்சநீதிமன்றம் 5ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு காவிரி நீர் வந்து சேரும் என்ற நம்பிக்கையை உச்சநீதிமன்றம் தற்போது அளித்துள்ளது. தமிழக அமைச்சர்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மைக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி 5 ஆயிரம் கன அடிநீரை திறந்துவிட […]

சபாநாயகர் அப்பாவு – அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு! பின்னணி தகவல்கள்!

துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாபுவிடம் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை மனு அளித்தனர். வருகிற அக்டோபர் மாதம் 9ம் தேதி சட்டசமன்ற கூட உள்ளது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எல்.ஏ.க்கள் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. மேலும் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை வழங்கப்பட வேண்டும் என்று […]

மகளிர் அணி நிர்வாகிகள் காலில் விழுந்த பிரதமர் மோடி! நன்றி தெரிவிக்கும் விழா!

டெல்லியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பிரதமர் மோடி தனக்கு நன்றி தெரிவித்து காலில் விழுந்த பெண்களின் காலில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தொடரில் மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றம் செய்யப்பட்டது. இந்தியா முழுவதும் பல்வேறு தரப்பினர் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். அதன்படி டெல்லியில் பா.ஜ.க […]

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பார்வையிட்ட தமன்னா குஷ்பு!

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை தமன்னா, குஷ்பு உள்ளிட்ட நடிகைகள் பார்வையிட்டு மெய்சிலிர்த்து போன சம்பவம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு கடந்த மே மாதம் திறக்கப்பட்டது. இருப்பினும் மழைக்கால கூட்டத்தொடர் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலேயே நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 18ம் தேதி சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல்நாள் அலுவல்கள் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலும் அடுத்தடுத்த நாள் சிறப்புக் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற […]

நாடாளுமன்ற சிறப்புக்கூட்டதொடர்! ஒரு நாள் முன்னதாக முடிவு!

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் 5 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு நாள் முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 18ம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கி 5 நாட்கள் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி அன்று மாலை நடந்த அமைச்சரவை கூட்டத்தில், மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் மகளிருக்கான 33% சதவீத இட ஒதுக்கீடு மசோதா குறித்து விவாதம் நடைபெற்றது. அடுத்தடுத்த நாட்களில் மகளிர் 33% இட […]

ராஜ்யசபாவை வழிநடத்திய தி.மு.க. எம்.பி.கனிமொழி சோமு! வரலாற்று சிறப்பு!

மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா தொடர்பான விவாதத்தில் மாநிலங்களவையின் மாற்றுத் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி. டாக்டர் கனிமொழி சோமு அவையை வழிநடத்தியது தமிழகத்தின் பெருமையை பறைசாற்றியுள்ளது.   மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் மசோதா என்ற பெருமை பெற்றது. செப்.21ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதாவுக்கு அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டதால் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநிலங்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா […]