News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

சாலி கிராமத்தில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய திரையுலகம்!

கேப்டன் மறைவைத் தொடர்ந்து அவரது இறுதி ஊர்வலகத்தில் கலந்து கொள்ள முடியாத திரைப்பிரபலங்கள் தற்போது சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர். தேமுதிக தலைவரும், பிரபல நடிகருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த (2023) டிசம்பர் 28ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து திரையுலகினர், அரசியல் கட்சித் தலைவர்கள் பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக வந்து கண்ணீர்விட்டு அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து அவரது  உடல் தேமுதிக அலுவலகத்தில் தமிழக அரசின் […]

தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படும் விஜயகாந்த் படங்கள்… தியேட்டரை நோக்கி படையெடுக்கும் ரசிகர்கள்

நீண்ட காலமாக உடல் நலமின்றி விஜயகாந்த் மரணம் அடைந்திருந்தார் என்றாலும், அவருக்கு சென்னையில் குவிந்த கூட்டமும் தினம் தினம் அவரது சமாதிக்கு வந்து சேரும் மக்கள் எண்ணிக்கையும் இன்னமும் குறையவே இல்லை. இந்த நிலையில் விஜயகாந்த் நடித்த பழைய படங்களை தூசு தட்டி திரையில் வெளியிடும் வேலைகள் ஜரூராக நடந்துவருகின்றன. இப்போதே தென் தமிழகத்தின் பெரும்பாலான தியேட்டர்களில் விஜயகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. வெளியூர்களில் திரையிடப்படும் படங்களை பார்ப்பதற்கு ரசிகர்கள் படையெடுத்து வருகிறார்கள். […]

லூலு மாலுக்கு போகிறதா கோயம்பேடு நிலம்..? சீமான் அதிரடி குற்றச்சாட்டு

மெரினாவில் கருணாநிதிக்கு பேனா சிலை வைக்கப்படும் என்று தி.மு.க. அறிவித்த போதும், பரந்தூர் விமான நிலையத்துக்கும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த சீமான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கும் எதிராக பேட்டி கொடுத்தார். சீமான் பேசுகையில், ‘’400 கோடி ரூபாயில் கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் வேண்டும் என்று நாங்கள் கேட்டோமா? அதற்காக போராட்டம் நடத்தினோமா? மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு நிறைய விமானங்கள் வருகிறது. அதனால் 5000 ஏக்கர் கையகப்படுத்தி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று நாங்கள் தெருவில் […]

ராமர் கோயில் திறப்புவிழாவில் ரஜினி, இளையராஜாவுடன் துர்கா ஸ்டாலின்..?

ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் ஸ்ரீ ராம் ஜென்மபூமி கோவில் திறக்கப்படுகிறது. இந்த கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 16ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை பிரமாண்டமாக நடைபெறுகிறது. இங்கு ஸ்ரீராமர் தவிர அன்னபூரணி, அனுமன், மகரிஷி வால்மீகி, வசிஷ்டர், விஸ்வாமித்திரர், அகஸ்தியர், நிஷாத் ராஜ், ஷப்ரி போன்ற கோவில்களும் இந்த வளாகத்தில் கட்டப்பட உள்ளன. இங்குள்ள தூண்களில் சூரியன், சிவன், பார்வதி, விநாயகர் சிலைகள் மற்றும் மந்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த கும்பாபிஷேக விழாவிற்காக 460 கைவினைஞர்கள் […]

அமெரிக்காவுக்கு தப்பியோடி டிமிக்கி கொடுத்த நிதி மோசடி கிரிமினல் … தட்டித் தூக்கிய மத்திய குற்றப்பிரிவு போலீஸ்

சென்னை மயிலாப்பூரில் இயங்கிவந்த உமா மகேஸ்வரி மில்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிந்த 289 ஊழியர்களுக்கு கன்ஸ்யூமர் டியூரபில் லோன் பெற்று, அதனை திருப்பி செலுத்தாமல் 98.47 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ராமநாதன், வள்ளியம்மாள், ராம்மோகன், ரமேஷ், லட்சுமணன், நல்லகண்ணு ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் புலன் விசாரணை முடிந்து இறுதியறிக்கை கூடுதல் சிறப்பு பெருநகர குற்றவியல் சிசிபி வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 12 ஆண்டுகளாக மேற்கண்ட […]

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா! ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேரில் அழைப்பு!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்குமாறு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில், ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இம்மாதம் (ஜனவரி) 22ம் தேதி நடைபெற உள்ளது. விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சிறப்பாக செய்து வருகிறது. மேலும் அன்று நண்பகல் 12.20 மணியளவில் கோவில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது. ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய […]

கூட்டுக்குடிநீர் பாதாள சாக்கடை திட்டப்பணிகள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

ரூ.1,933.69 கோடி மதிப்பிலான கூட்டுக்குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக தலைமை செயலகத்தில் இருந்த படியே சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பிலான திட்டப்பணிகளை திறந்து வைத்தார். அதன்படி சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 204 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவிலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் […]

மிக்ஜாம் புயல் நிவாரணப்பணி: முதலமைச்சரிடம் திருவாவடுதுறை ஆதீனம் காசோலை வழங்கினார்!

மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக, திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நிதி வழங்கினார். கடந்த டிசம்பர் மாதம் 3  மற்றும் 4 (2023) ஆகிய தேதிகளில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்கள் பெரியளவில் சேதத்தை சந்தித்தது. பொது மக்களின் குடியிருப்புகளுக்குள் மழை வெள்ள நீர் புகுந்து அவர்களின் அனைத்து பொருட்களையும் சேதப்படுத்தியது. இதைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் […]

தமிழக அரசின் பங்கு ஈவுத்தொகை ஒப்படைப்பு! அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்!

தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகத்தின் 2022& 23ஆம் நிதியாண்டிற்கான அரசின் பங்கு ஈவுத்தொகையாக ரூ.18 கோடியே 61 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் கே.என்.நேரு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகத்தின் 2022- 23ஆம் நிதியாண்டிற்கான அரசின் பங்கு ஈவுத்தொகையாக ரூ.18 கோடியே 61 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் கே.என்.நேரு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். இந்த […]

கனிமொழி எம்.பி. பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்!

கனிமொழி எம்.பி. இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சரும் அவரது சகோதரருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. துணை பொது செயலாளருமான கனிமொழி இன்று (ஜன.5) பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தனது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சகோதரரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தென்மாவட்டங்களை புரட்டிப் போட்ட பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார். தொடர்ந்து […]