News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

கைது ஆகிறாரா நயன்தாரா..? வில்லங்கமாகும் அன்னபூரணி அசைவம் விவகாரம்

நயன்தாராவின் 75வது திரைப்படமான அண்ணபூரணி திரைப்படம் பரபரப்பாக வெளியானது. திரையரங்குகளில் வரவேற்பு பெற்ற இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் 29ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.  ஐயங்கார் வீட்டு பெண்ணான நயன்தாரா அசைவம் சமைக்க விரும்பும் சமைக்க கலைஞராக இருப்பார். அவருக்கு உறுதுணையாக இருக்கும் ஃபர்ஹான் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெய் நடித்திருப்பார். அவர் நயன்தாராவை அசைவம் சாப்பிட வைப்பதற்காக, ராமர் கூட அசைவம் சாப்பிட்டிருக்கிறார் என்று கூறுவார்.  இந்த விவகாரம் தமிழகத்தில் பெரிதாக எந்த எதிர்ப்பும் […]

கார்த்தி சிதம்பரத்துக்கு அண்ணாமலை பாராட்டு..! ’காவி’ மாணவிகளிடம் ஆவேசம்…

என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடைப்பயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அமைந்திருக்கும் அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அண்ணாமலை வருகைக்காக அத்தனை மாணவிகளும் காவி நிறத்தில் சேலை கட்டி அமர வைக்கப்பட்டிருந்தனர். இந்த கூட்டத்தில் ஆவேசமாகப் பேசிய அண்ணாமலை, ’பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பெரும்பான்மையான வீடுகள் குடும்பத் தலைவிகள் பெயரிலேயே பதிவு செய்யப்பட்டிருப்பது, புகையற்ற சமையலுக்காக இலவச சமையல் எரிவாயு […]

ஓசூரில் எடப்பாடி பழனிசாமியை அடித்து, துவைத்து, தொங்கப்போட்ட ஓபிஎஸ்..!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடியை ஏர்போர்ட்டில் சந்தித்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வம் இப்போது முன்னிலும் வேகமாக எடப்பாடி பழனிசாமியை தாக்கிப் பேசத் தொடங்கியிருக்கிறார். அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட கழக ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பி.எஸ். பேசியதில் அனல் தெறித்தது. ’’தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட நம் கழகத்தில் தொண்டர்கள் தான் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும் என்று சட்ட விதிகளை உருவாக்கினார் புரட்சித் தலைவர். புரட்சித் தலைவி அம்மா அவர்களும் அந்த விதிகளை பின்பற்றினார். ஆனால் இப்பொழுது […]

அப்பாவை பிடிக்கும் என்ற 4 வயசு பிள்ளையை கழுத்தை நெரித்துக்கொன்ற ’பாசக்கார’ அம்மா

தாய்ப்பாசத்துக்கு நிகராக இந்த உலகில் வேறு எதுவுமே இல்லை என்று கூறப்படுகிறது. அதேநேரம், பெற்ற தாயே பிள்ளைகளை கொல்லும் அவலமும் நடக்கத்தான் செய்கிறது. நன்கு படித்து நல்ல வேலையில் இருக்கும் ஒரு பெண் செய்திருக்கும் பகீர் கொலையால் இந்தியாவே அதிர்ந்து நிற்கிறது. பெங்களூரை சேர்ந்த ஸ்டார்ட் ஆப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுசனா சேத், சுசனாவுக்கும் வெங்கட்டுக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தை பிறந்த […]

14 சிட்டிங் எம்.பி.க்கள் அவுட்… ஸ்டாலினுக்கு நோட் போட்டிருக்கும் சபரீசன்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 தொகுதியையும் தி.மு.க. கைப்பற்ற வேண்டும் என்ற வேகத்தில் இருக்கிறது. இந்த லட்சியத்தை அடையவேண்டும் என்றால் கடந்த தேர்தலில் நின்று ஜெயித்த 14 பேருக்கு இந்த தேர்தலில் சீட் கொடுக்கக்கூடாது என்று கட்சி நிர்வாகத்தை மறைமுகமாக நடத்திவரும் சபரீசன் நோட் போட்டு ஸ்டாலினுக்குக் கொடுத்திருக்கிறார். இந்த 14 தொகுதிகளிலும் எம்.பி.க்களுக்கு எதிராக மக்கள் மனநிலை இருப்பதால், இப்போதே இதில் முடிவெடுத்தால் மட்டுமே, புதிய வேட்பாளர்களைத் தேர்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்க […]

தேனியில் டிடிவி.தினகரன் போட்டி..! பன்னீருக்கு அடுத்த ஆப்பு… கொதிக்கும் மன்சூர் அலிகான்

எடப்பாடியால் கழட்டிவிடப்பட்ட டிடிவி தினகரனும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதாக மேடைக்கு மேடை கூறப்பட்டு வந்தது. அதோடு இவர்கள் இருவரையும் பா.ஜ.க. கூட்டணியில் இணைத்துக்கொள்ளும் என்றும் நம்பிவந்தனர். இன்னமும் இந்த கூட்டணி உறுதியாவதற்கு முன்னரே உடைந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் தேனி தொகுதியில் டிடிவி தினகரன் நிற்பதற்கு ஆசைப்படுவதுதான். தற்போது இந்த தொகுதியின் எம்.பி.யாக பன்னீரின் மகன் ரவீந்திரநாத் இருந்துவருகிறார். வரும் தேர்தலிலும் பா.ஜ.க. துணையுடன் எப்படியும் மகனை ஜெயிக்க வைத்துவிடுவது என்ற ஆசையில் […]

கூட்டணி நஹி… பணம் நஹி… மா.செ. மாற்றம் நஹி…! குழப்பத்தில் முடிந்த எடப்பாடி பழனிசாமி மீட்டிங்

அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற்றது. சில மாவட்டச் செயலாளர்களை தேர்தல் நேரத்தில் மாற்றப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அப்படி எதுவும் நடக்கப்போவதில்லை என்று தெரிந்துவிட்டது. இன்று கூட்டத்தில் பேசிய எடப்பாடி, ‘’நமது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்குள் நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் பேசித் தீர்த்துகொண்டு ஒற்றுமையாக லோக்சபா தேர்தல் பணிகளை கவனியுங்கள். யாரையெல்லாம் வேட்பாளராக நிறுத்தலாம் என்று பெயர் பட்டியலை இப்போதே எனக்கு […]

அடுத்து மசூதிக்குள் நுழைகிறாரா அண்ணாமலை..? சூடு பிடிக்கும் நெற்றியில் திருநீறுடன் மாதா சிலைக்கு மாலை விவகாரம்

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் பி.பள்ளிப்பட்டு பகுதியில் தேவாலய சிலைக்கு அண்ணாமலை மாலை அணிவிக்க முன்வந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாதாவுக்கு அண்ணாமலை மாலை போடுவதை தடுத்த கிருஸ்துவ இளைஞர்களுக்கும் சர்ச் வாசலிலே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அண்ணாமலையை உள்ளே செல்லக்கூடாது என்று எகிறிய இளைஞர்களிடம், ‘அடுத்து நான் பத்தாயிரம் பேரோடு வந்து மாலை போட்டால் என்ன செய்வீர்கள்’ என்று கேட்டு மிரட்டியதும் போலீஸ் வந்து சம்பந்தப்பட்ட இளைஞர்களை அப்புறப்படுத்தியுள்ளது. இதையடுத்து ஆதரவாளர்களுடன் […]

தவழ்ந்து தவழ்ந்து முதல்வர் ஆன கதையை எடப்பாடி பேசியதற்கு இதுதான் காரணமா..? பாயத் தயாராகும் பா.ஜ.க.

எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சியினர் அத்தனை பேரும், அவர் சசிகலா காலில் விழுந்து தவழ்ந்து சென்று பதவி வாங்கியவர்கள் என்று கிண்டல் செய்வது வழக்கம். இந்த விவகாரம் குறித்து முதன்முறையாக எடப்பாடி பழனிசாமியே வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதுரையில் நடத்தப்பட்ட மதச்சார்பின்மை மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, ‘’நான் முதல்வர் ஆவேன் என்று கனவில் கூட நினைத்து பார்த்தது கிடையாது. உங்களை போலத்தான் நானும் அமர்ந்து இருந்தேன். ஆனால் அப்படியே […]

ஸ்டாலினை விமர்சனம் செய்த காளியப்பன் கைது… கொந்தளிக்கும் நாம் தமிழர் இயக்கம்

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாகவும், அநாகரிகமாகவும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்த குற்றச்சாட்டில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த நாம் தமிழர் சமூக ஊடகப் பிரிவு உறுப்பினர் காளியப்பன் கைது செய்யப்பட்டிருப்பது சீமான் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து நாம் தமிழர் சாட்டை துரைமுருகன், ’முதல்வரின் உருவப்படத்திற்கு செருப்பு மாலை போட்டு ஒப்பாரி வைத்த கன்னட அமைப்பினரை கண்டிக்க கூட வக்கற்ற திமுக! உதயநிதியின் தலைக்கு 10 கோடி விதித்த வடநாட்டு சாமியாரை […]