லஞ்சத்தை ஒழிக்க விஜய் சூப்பர் திட்டம். போதைக்கு முற்றுப்புள்ளி

அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதைத் தடுப்பதற்கு ஒரு சூப்பர் திட்டத்தைக் கொண்டுவந்து மகத்தான சாதனை படைத்திருக்கிறார் முதல்வர் விஜய் தமிழக அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மாவட்ட ஆய்வுக்கு வரும்போது அவர்களுக்கான செலவுகளை நாங்களே செய்கிறோம். அந்த செலவுகளை ஈடுகட்டுவதற்காக வேறு வழியின்றி லஞ்சம் வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்று சில அதிகாரிகள் வெளிப்படையாக புகார் கூறியிருந்தனர். இந்த புகாரில் இருந்த உண்மை தெரியவந்ததும், அந்த செலவுகளை அரசே ஏற்கும் வகையில் தவெக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. […]
அண்ணாமலை கட்சி அம்புட்டுத்தானா..? மீண்டும் லண்டன் பயணம்?

அது ஒரு காலம். சோஷியல் மீடியாவில் எப்போதும் அண்ணாமலை பற்றியே பேச்சாக இருந்தது. விஜய் வந்தபிறகு அந்த நிலை மாறிவிட்டது. தினமும் அண்ணாமலை பேசுகிறார் என்றாலும், அதை கேட்கத்தான் ஆட்கள் இல்லை. இந்த நிலையில் தனிக் கட்சி தொடங்குவது தள்ளிப்போவதாகத் தெரிகிறது. பாஜகவில் இருந்து வெளியேறிய அண்ணாமலை, “வீ த லீடர்ஸ்” என்ற புதிய அமைப்பை தொடங்கி அதை அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான திட்டத்தில் இருந்தார். அமைப்பு தொடங்கிய முதல் நாளிலேயே 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்தனர். […]
எடப்பாடி வேண்டுகோளை நிராகரித்த அமித்ஷா… அதிமுக கூட்டணி மாற்றம்?

திருவண்ணாமலைக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசிய நிலையில், அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின்றன. அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாலே எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் தொடர்ந்து அதிமுகவுக்கு இடைஞ்சல் செய்துகொண்டு இருக்கிறார்கள். எப்படியாவது தங்களை அதிமுகவில் இருந்து எடப்பாடி நீக்கிவிட்டால் தவெக ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக தொடரலாம் என்று ஆசைப்படுகிறார்கள். கட்சியில் இருந்து நீக்கவில்லை என்றால் பழைய பதவி வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனவே, தினமும் ஒரு தகவல் […]
விஜய் 100 நாள் ஆட்சிக்கு எத்தனை மார்க்..? ஆய்வு ரிப்போர்ட்

விஜய் ஆட்சிக்கு வந்து 100வது நாளைத் தொடப்போகிறார். புதிய மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்த மக்களுக்கு மாற்றமும், நம்பிக்கையும் கிடைத்திருக்கிறதா என்று மக்களின் உண்மையான மனநிலையைப் பிரதிபலிக்கும் பக்கா ரிப்போர்ட் வேண்டுமென்று உளவுத்துறையையும் தனியார் நிறுவனங்களையும் உசுப்பிவிட்டுள்ளார் நடிகர் விஜய். நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது என்றாலும் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் துணையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. மே 10ம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக் […]
நீட், வெளிநாட்டு நிதிக்கு தனித்தீர்மானம். விஜய்யிடம் திமுக சரண்டர்

கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும்’ என்ற தீர்மானம் சட்டப்பேரவையில் நேற்று நிறைவேறிய நிலையில், இன்று நீட் தீர்மானம் நிறைவேறுகிறது. நீட் ரகசியம் தெரியும் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக, நீட்டை ஒழிப்பதற்கு எந்தவொரு முயற்சியும் செய்யவே இல்லை. ஆனால், ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்கும் நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக விஜய் தனித் தீர்மானம் கொண்டுவருவது அரசியல் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. இன்று நீட் […]
காவிரியில் காங்கிரஸைக் காப்பாற்ற எம்.பி.க்கள் கூட்டம்..? விஜய் பாலிடிக்ஸ்

காவிரியில் போதிய தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அதைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் தொகுதி வரையறைக்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தியிருப்பது, காவிரி பிரச்சனையில் காங்கிரஸை காப்பாற்றும் நாடகம் என்று திமுக குற்றம் சாட்டியுள்ளது. அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் என்று அறிவித்துவிட்டு, தனக்கு ஆதரவளித்த கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். கூட்டத்தில் கலந்துகொண்ட திருமா, ப.சிதம்பரம், துரை வைகோ போன்ற பிரதிநிதிகள் உள்ளே என்ன நடந்தது என்று சொன்ன செய்திகளும், பேட்டிகளும் […]
இதுக்குத்தானா ஆசைப்பட்டாய் விஜயபாஸ்கர்..? தவெக டம்மி பதவி புலம்பல்

அதிமுக ஆட்சி காலத்தில் மட்டுமின்றி திமுக ஆட்சியிலும் புதுக்கோட்டை மாவட்டத்தைத் தன் கையில் வைத்திருந்த சி.விஜயபாஸ்கருக்கு தவெகவில் டம்மி பதவி கொடுத்திருப்பதாக புலம்பல் சத்தம் கேட்கிறது. அ.தி.மு.க-விலிருந்து விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற சி.விஜயபாஸ்கர், அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இதையடுத்து விஜயபாஸ்கருக்கு கட்சியில் மிகப்பெரும் பதவி கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்ட தவெக அமைப்பு செயலாளராக சி.விஜயபாஸ்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். […]
பழனி கோவில் நிலத்திற்கு சிபிஐ விசாரணை..? திட்டமிட்ட கொலை..?

பழனி கோவில் நில முறைகேடு விவகாரம்.. நடுநிலையுடன் வழக்கை நடத்த சிபிஐ வசம் வழக்கை ஒப்படைக்க வேண்டும்.. அஇஅதிமுக 07/08/2026.. பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் நிலம் முறைகேடாக பத்திரபதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இதில் நேற்று சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் தலைமறைவாக இருந்த பத்திர எழுத்தாளர் ஜெயப்பிரகாஷ் என்பவர் நேற்று சரணடைந்தார். இந்நிலையில் […]
லாட்டரி நன்கொடை… போதைக்கு பதில் சொல்வாரா ஆதவ்..?

லாட்டரி நடத்துபவரிடம் எதற்காக நன்கொடை பெற்றீர்கள் என்று ஆதவ் அர்ஜூனா எழுப்பிய விவகாரம், அவருக்கே சிக்கலாக மாறிவருகிறது. நேற்றைய தினம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திமுகவினரைப் பார்த்து ஏன் சாராய ஃபேக்ட்ரி நடத்துகிறார்கள் என்று கேள்வி கேட்டார். உடனே திமுகவினர், ‘நீங்கள் ஏன் லாட்டரி தொழில் நடத்துகிறீர்கள்?’ என்று கேட்டனர். அதற்கு பதில் அளிப்பதாகச் சொல்லி, லாட்டரி தொழில் நடத்துபவர்களிடமிருந்து 900 கோடி ரூபாய் ஏன் நன்கொடை பெற்றீர்கள் என ஆதவ் அர்ஜுனா மீண்டும் கேள்வி கேட்டார். […]
விஜய்க்கு கனிமொழி அழைப்பு… ஸ்டாலினிடம் மிகப்பெரும் மாற்றம்

தொகுதி மறுவரையறைக்கான கலந்தாய்வுக் கூட்டத்திற்கு திமுகவுக்கு விஜய் அழைப்பு விட்டிருக்கும் நிலையில், விஜய்யை மத்திய அமைச்சரை சந்திக்க அழைத்திருக்கிறார் கனிமொழி. அதேநேரம், கனிமொழிக்கு ஸ்டாலின் கொடுத்துவரும் மதிப்பு உயர்ந்துள்ளதாக திமுகவினரே தெரிவிக்கிறார்கள். இன்று கனிமொழி, ‘’தொகுதி மறுவரையறை எனும் ஆபத்தை முதன்முதலில் எடுத்துரைத்து எச்சரித்தவர் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின்தான். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தி, தமிழகத்தின் கோரிக்கைகளைத் தீர்மானங்களாக நிறைவேற்றினார். அதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் கட்சித் […]

