News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

’எலும்பு’ எம்.எல்.ஏ. கைது. ஸ்டாலினுக்கு விஜய் எச்சரிக்கை

லண்டனில் இருந்து நேற்று இரவு சென்னைக்குத் திரும்பிய முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை தரும் விதமாக, ‘எலும்பு இருக்காது, உடைத்து அனுப்புவோம்’ என்று முதல்வர் விஜய் பற்றி பேசிய விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. BNS 351(3) – கடுமையான குற்ற மிரட்டல் (Criminal Intimidation): BNS 352 – அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் நோக்கில் திட்டமிட்டு அவமதித்தல் (Intentional insult […]

அமைச்சர் ரமேஷ் பதவி விலகுவாரா..? போட்டுத்தாக்கும் திமுக மூர்த்தி

பழனி முருகன் கோவில் 100 கோடி ரூபாய் சொத்து விற்பனை விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் பதவி விலகி விசாரனையை எதிர் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பழனியில் ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் முறைகேடு வழக்கில், நிலத்தை விற்ற முருகதாஸ் சாமிகள், வாங்கிய சேதுபதி, வெள்ளத்துரை ஆகிய மூவரும் தலைமறைவாகியுள்ளனர். பழனி மலை அடிவாரத்தில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது […]

சோனம் வாங்சுக்கை அப்புறப்படுத்திய போலீஸ்… பாஜக அராஜகம்

நீட் வினாத்தாள் கசிவு ஊழலுக்குக் காரணமான கல்வி மாஃபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்க முதுகெலும்பு இல்லாத மோடி அரசுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தியிருக்கிறது ஆளும் பாஜக அரசு. 20 நாட்களாக ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், டெல்லி காவல்துறையினரால் சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இது குறித்து பேசுபவர்கள், ‘’நியாயமான எதிர்ப்புக் குரல்களை லத்திகள் மூலமும், அராஜகக் கைதுகள் மூலமும் நசுக்கப் […]

நேற்று சங்கர் இன்று களஞ்சியம். சீமான் கூடாரத்தை காலியாக்கும் விஜய்

விஜய் அரசியலுக்கு வந்த நேரத்தில் தம்பி என்று பாசமாக அழைத்தார். அவர் கூட்டணிக்கு வரவில்லை என்றதும் கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த தேர்தலில் வழக்கம்போல் ஒரு இடத்திலும் ஜெயிக்காமல் நாம் தமிழர் வாஷ் அவுட் ஆனது. அதிமுகவில் இருந்து ஆட்களைப் பிடித்துவரும் விஜய் இப்போது சீமான் கட்சி நிர்வாகிகளையும் இழுக்கத் தொடங்கியிருக்கிறார். விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியதாக நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை செயலாளர் சி.சங்கரை சீமான் கடுமையாக திட்டியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவர் […]

சிலுவையுடன் விஜய்..? இதுதான் சமத்துவமா முதல்வரே..?

முதல்வர் விஜய் எப்போதும் அருகில் ஒரு சிலுவை வைத்திருக்கிறார். ஜோசப் விஜய் என்பதால் அவர் சிலுவை வைத்திருக்கிறார். ஆனால், ஒரு முதல்வர் இப்படி வெளிப்படையாக சிலுவை வைத்திருக்கலாமா என்று திமுகவினர் கேள்வி எழுப்புகிறார்கள். இது குறித்து பேசுபவர்கள், ‘’அரசு அலுவலகங்களில் விதிகளை முதல்வர் விஜய் உள்பட அனைவரும் பின்பற்ற வேண்டும். தமிழ்நாடு முதல்வர் விஜய் அவர்கள் கிருஸ்தவராக இருக்கலாம். அவரை சர்ச்சுக்கு செல்லலாம். அது அவரது தனிப்பட்ட அடிப்படை உரிமை. ஆனால் அரசு அலுவலகத்தில் மதம் சார்ந்த […]

செளமியாவுக்கு அமைச்சர் பதவி.? ஓவர் ஜால்ரா அன்புமணி

நேரு உள் விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவுடன் பேட்மிண்டன் விளையாடிய அன்புமணி, இன்று அளவுக்கு மீறி விஜய்க்கு ஜால்ரா போட்டுள்ளார். இதையொட்டி, செளமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று அன்புமணி, ‘’தி.மு.க ஆட்சியில் 5 வருடம் சென்னையை நாசப்படுத்திட்டாங்க.. அதுக்கெல்லாம் சேகர்பாபு என்ற ஒரு ஆள் தான் காரணம்.. அதனால் இன்று அனுபவிக்கிறார்கள்.. அவர் என்ன பெரிய ஆளுமை மிக்கவரா..? மேயர் பதவி எவ்வளவு அதிகாரமிக்க பதவி.. ஆனால் பிரியாவை […]

ஃபாரின் சரக்கு, ரெஸ்டோ பார்…. விஜய் சூப்பர் மாற்றம்

டாஸ்மாக்கில் 54 புத்தம் புதிய சரக்குகள் அறிமுகப்படுத்தப்படுவதுடன் உணவுடன் கூடிய ரெஸ்டோ பார் திறக்கும் புத்தம் புதிய மாற்றத்துக்கு விஜய் உத்தரவிட்டுள்ளதாக வரும் தகவல்கள் அதிர வைக்கின்றன. மாற்றம், மாற்றம் என்று சொன்னது இதைத்தானா என்று கொதிக்கிறார்கள். கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ‘ரெஸ்டோ பார்’ எனப்படும் உணவகத்துடன் கூடிய மதுக்கூடங்கள் உள்ளன. இதேபோல, தமிழ்நாட்டில் ரெஸ்டோ பார்களை அனுமதிப்பது குறித்து, டாஸ்மாக் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த மதுக்கூடங்களுக்கு சிறப்பு வரி விதித்து வருவாயை […]

பழனி 100 கோடி மோசடிக்கு சிபிஐ விசாரணை..? ஒன்று சேரும் எதிர்க்கட்சிகள்

பழனி முருகன் கோவில் சொத்து முறைகேடு வழக்கை மாநில சிபிசிஐடி விசாரிப்பது நியாயமான பதிலைத் தராது, இதில் நேர்மையான விசாரணை நடைபெற சிபிஐ விசாரிக்கவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாக எதிர்ப்புக்குரல் எழுப்பியிருந்தார். இந்த நிலையில் டாக்டர் கிருஷ்ணசாமி, ‘’இரவுகளில் கன்னக்கோல் போடுவதைப் பற்றியும், வீடு புகுந்து திருடுவதைப் பற்றியும், பிக்பாக்கெட் அடிப்பதைப் பற்றியும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், பட்டப்பகலில் முருகன் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தையே பத்திரப்பதிவு செய்து கொள்ளையடிப்பது எப்படிச் சாத்தியமாயிற்று? பழனி முருகன் கோவிலுக்கு […]