வைரலாகும் மாணவிகள் மது வீடியோ..? விஜய் என்ன நடவடிக்கை?

தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இதையடுத்து பள்ளி தலைமையாசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார். தக்கலை போலீசார் மாணவர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ், ‘’பள்ளிகளில் மாணவிகள் மது அருந்தும் அவலம் தொடர்கிறது: மது எளிதாக கிடைப்பதை தடை செய்ய வேண்டும்! கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நீட், ஜே.இ.இ., கியூட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்கச் சென்ற மாணவிகள் சிலர் வகுப்பறையில் அமர்ந்து […]
விஜய்க்கு ரிலாக்ஸ் நியூஸ்… கரூர் பணி ஆணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை ரத்து செய்த மதுரை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு, இன்று உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது விஜய்க்கு பெருத்த ரிலாக்ஸ் என்று கருதப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி நடந்த விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் பலியான 31 […]
விவசாயிகள் போராட்டத்தில் எடப்பாடி. வேலுமணி டீமில் தங்கமணி ஜம்ப்

இன்று விவசாயிகள் கடன் தள்ளுபடி, மின் கட்டணம், மேகதாது அணை மற்றும் காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று விஜய் அரசுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், இந்த போராட்டத்தில் தங்கமணி கலந்துகொண்டது அதிமுவினரை குஷிப்படுத்தியிருக்கிறது. இன்று பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் சுமை, பாசன நீர் பற்றாக்குறை, காவிரி நீர் […]
கருணாநிதி, ஜெ. ஸ்டாலினால் முடியாததை சாதிப்பாரா விஜய்..? புதிய தலைமைச்செயலகம்.

கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் இருந்தே தலைமைச் செயலகத்தை மாற்றும் முயற்சி நடந்துவருகின்றன. குயீன் மேரீஸ் கல்லூரியை ஜெயலலிதா மாற்ற நினைத்தார். அண்ணா சாலையில் கருணாநிதி அமைத்தார். ஸ்டாலினும் பல்வேறு முயற்சிகள் எடுத்தார். இந்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இந்த நிலையில், விஜய் காலத்தில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதல் நடவடிக்கையாக முதல்வர் அறை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்படும் பணி தொடங்குகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் ஜார்ஜ் கோட்டையில் இருந்து நாமக்கல் கவிஞர் மாளிகை பத்தாவது […]
மாணவர் அமுதன் கொடூர கொலை… போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

கோவையில் இந்துஸ்தான் கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட வழக்கில், போதைப்பொருள் கும்பல் குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததால், இருபதுக்கும் மேற்பட்டோரால் இரும்பு ராடு, கத்தி போன்ற ஆயுதங்களால் அடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையை, மாணவர்களுக்குள் நடந்த கோஷ்டி மோதல் என்று அமைச்சர் ராஜ்மோகன் வழக்கை திசை திருப்பும் வகையில் பேசுவதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம் செய்துவருகிறார்கள். இந்த விவகாரத்தில் மாணவர்களுக்கிடையே ஏற்கெனவே இருந்த மோதல், செல்போன் பறிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளின் தொடர்ச்சியாக, இந்தத் […]
காவல் துறையில் அதிரடி மாற்றங்கள்.. லஞ்சம், போதை, டிரான்ஸ்ஃபர்

விஜய் ஆட்சியில் காவல் துறையின் கைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன. அதனால், ஊழல், லஞ்சத்துக்கு எதிராக காவல் துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஏற்கெனவே பொதுமக்கள் லஞ்சப் புகார்களை ‘7871723000’ என்ற எண்ணில் வாட்ஸ்அப் அல்லது நேரடியாகத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு பலத்த வரவேற்பு கிடைத்தது இந்நிலையில் காவல் துறையினருக்கும் அதிகாரிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தல்களை காவல் ஆணையர் அமல்ராஜ் வழங்கியுள்ளார். அதில் அவர், ‘’எந்தவொரு சூழலிலும் நான் லஞ்சம் வாங்க […]
தவெக 100 நாட்களுக்குள் 104 புரிந்தணர்வு ஒப்பந்தங்கள். ஸ்பீடு விஜய்

இன்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில், வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாடு சென்னை கிண்டியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் துறை தலைவர்கள் பங்கேற்கின்றனர். முதலமைச்சர் முன்னிலையில் பல முக்கிய தொழில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. தமிழ்நாடு அரசு சார்பில் இன்று நடைபெறும் வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாடு 2026 மூலம் 97 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. இதன் மூலம் ₹67,452 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, […]
காளியம்மாளுக்கு புதிய பதவி. ரொம்ப லேட் எடப்பாடி

நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள், நேரடியாக விஜய்கட்சிக்குப் போகப்போகிறார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில்எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அப்போதே, எம்.எல்.ஏ. சீட் அல்லது மாவட்டத்தில் ஒரு முக்கிய பதவிஎன்று நிபந்தனை வைத்து சேர்ந்ததாக சொல்லப்பட்டது. ஆனால், மயிலாடுதுறை தொகுதியை எதிர்பார்த்தகாளியம்மாளுக்கு சீட் கொடுக்கப்படவில்லை. எனவே அப்செட் மோடில் இருந்தார். இந்த நிலையில் நீண்ட காலத்திற்குப் பிறகு காளியம்மாள் கழக செய்திதொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு, கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் […]
ஜே.சி.டி.பிரபாகரனுக்கு ஜே… விஜய் சபாநாயகருக்கு அனைத்துக் கட்சிகளும் பாராட்டு

சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகரனை முதல்வர் விஜய் அமரவைத்த நேரத்தில், இவர் எப்படி அவையை சமாளிப்பார் என்று குரல்கள் எழுந்தன. ஆனால், யார் தவறு செய்தாலும் திருத்துவதிலும், எல்லோருக்கும் வாய்ப்பு கொடுப்பதிலும் விஜய் அரசுக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுத்திருக்கிறார் ஜே.சி.டி.பிரபாகரன். இன்று அவையில், பாஜக உறுப்பினரின் குரல் ஒலிக்கவில்லை என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய நிலையில், ‘அப்படி எல்லாம் சொல்லக்கூடாது’ என்று சொல்லி அந்த பேச்சை அவை குறிப்பிலிருந்து நீக்கினார் அவைத்தலைவர் ஜே.சி.டி. பிரபாகர். ஒரு […]
தொகுதி வரையரை மசோதா… விஜய்யிடம் சரண்டரான உதய்

தொகுதி வரையறை தொடர்பாக முதல்வர் விஜய் கூட்டத்துக்கு வராமல் டிமிக்கி கொடுத்த திமுகவின் நிலைப்பாட்டை அறிவதற்கு இன்று சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதில் வேறுவழியின்றி விஜய் தீர்மானத்தை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் உதயநிதி. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் தனி தீர்மானத்தை கொண்டு வந்து உரையாற்றினார். அப்போது அவர், “2011 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை கூடாது. சமீபத்தில் சென்னை கலைவாணர் அரங்கில் தமிழகத்தின் மக்களவை எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. […]

