News

Follow Us

இந்தியாவுக்காக மல்யுத்தப் போட்டியில் வென்று பரிசு வாங்கி ஆனந்தக் கண்ணீர் விட்ட சாக்‌ஷி மாலிக், அதன்பிறகு பா.ஜ.க.வுக்கு எதிராக நடத்திய போராட்டத்தின் விளைவாக நாள் தோறும் கண்ணீர் சிந்த வேண்டியதாயிற்று.

பல நாட்கள் போராட்டம் நடத்தியும் அவர்களுடைய கோரிக்கை பரிசீலனை செய்யப்படவில்லை. இந்த நிலையில், அவர் ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்பதைக் காட்டும் வகையில் பிரிஜ் பூஷனுக்குப் பதிலாக அவரது மகனுக்குப் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சாக்‌ஷி மாலிக், “நாங்கள் அனைவரும் எங்கள் தொழிலை பணயம் வைத்து, வெயிலிலும் மழையிலும் பல நாட்கள் தெருக்களில் தூங்கினோம். இன்று வரை பிரிஜ் பூஷன் கைது செய்யப்படவில்லை. நாங்கள் எதையும் கோரவில்லை. நீதியை மட்டுமே கோருகிறோம். கைது செய்வதை விடுங்கள், இன்று பிரிஜ் பூஷனின் மகனுக்கு சீட் கொடுத்து நாட்டின் கோடிக்கணக்கான மகள்களின் மன உறுதியை உடைத்துள்ளீர்கள்” என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் பிரிஜ் பூஷன் மகன் போட்டியிடும் தொகுதியில் நேரடியாக களத்தில் இறங்கி எதிர்ப்பு பிரசாரம் செய்வதற்கு சாக்‌ஷி தயாராவதாகத் தெரியவந்திருக்கிறது. பா.ஜ.க.வுக்கு நேரமே சரியில்லைப்பா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link