News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

பழனி முருகன் கோயிலில் மாற்று மதத்தினருக்குத் தடை… வேளாங்கண்ணி மாதா கோயில், நாகூர் தர்காவில் இந்துக்கள் நுழையலாமா..?

பழனி முருகன் கோயிலுக்கு இந்து அல்லாதவர்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பழனி கோயிலில் இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை வைக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது, மாற்று மதத்தை சார்ந்தவர்கள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால் தனி பதிவேடு வைக்க வேண்டும் என்றும் சாமி மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என பதிவேட்டில் உறுதிமொழி எடுத்த பின் கோயிலுக்குள் செல்லலாம் […]

மக்கள் திருந்தவே மாட்டாங்களா…? தமிழகத்தை சுருட்டும் மைவி3 ஆட்ஸ் சீட்டிங்

சதுரங்க வேட்டை படம் வெளியான பிறகு, மக்களை அத்தனை எளிதாக ஏமாற்ற முடியாது என்றே பலரும் நினைத்தார்கள். ஆனால், ஆசையைத் தூண்டிக்கொண்டே இருந்தால் ஏமாற்றிகொண்டே இருக்கலாம் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டி கோவையை கலக்கியிருக்கிறது மைவி3 ஆட்ஸ் நிறுவனம். திடீரென கோவை மாவட்டம் நீலாம்பூர் அருகே புறவழிச் சாலையில் இந்த நிறுவனத்திற்கு ஆதரவாக திரண்டனர். இவர்களில் பெரும்பாலோர் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை வெள்ளக்கிணறு […]

பல்டி அடிப்பதில் நிதிஷ்குமார் பலே சாதனை..! பீகார் கேலிக்கூத்து.

’இந்தி மொழியைக் கத்துக்கோங்க’ என்று இண்டியா கூட்டணியில் இருந்துகொண்டே குழப்பம் விளைவித்த நிதிஷ்குமார் இப்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துகொண்டு 9வது முறையாக முதல் மந்திரி பொறுப்புக்கு வந்திருப்பது இந்தியா முழுக்க ஆச்சர்ய அலையை எழுப்பியிருக்கிறது. ஒரு மனிதர் பதவிக்காக எத்தனை முறை பல்டி அடிக்க முடியும் என்பதில் நிதிஷ் பலே சாதனை படைத்துவிட்டார் என்று அத்தனை கட்சியினரும் அவரை கிண்டல் செய்துவருகிறார்கள். ஆனால், அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் நிதிஷ். பீகாரில் நிதிஷின் […]

வெளிநாட்டு ஃபேஸ்புக் காதலியின் விசித்திர சீட்டிங்… அம்பலப்படுத்திய கரூர் சைபர் கிரைம் போலீஸ்

வெளிநாட்டுப் பெண் ஒருவர் காதலிப்பதாகச் சொன்னதை நம்பி 12.5 லட்சம் ரூபாய் ஏமாந்துபோயிருப்பதை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கி. பிரபாகர் தலைமையிலான சைபர் கிராம் போலீஸ் தகவல் கொடுத்து எச்சரிக்கை செய்திருக்கிறது. வெளிநாட்டுப் பெண் அனுப்பிய நட்புக் கோரிக்கையை ஏற்று பழகி வந்திருக்கிறார். இணையத்தில் இவர்களுடைய காதல் எல்லையை மீறிப் போயிருக்கிறது. உனக்காக பரிசுகள் அனுப்புகிறேன் என்று அவ்வப்போது வெளிநாட்டில் இருந்து சின்னச்சின்ன பரிசுகளை அனுப்பியிருக்கிறேன். வெளிநாட்டுப் பெண்ணின் காதல், அவ்வப்போது பரிசு என்று […]

ஆயுர்வேத மருந்தைச் சொல்லி நைஜீரியர்கள் ஹைடெக் மோசடி… கரூர் சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

ஏமாத்தணும்னா அவங்க ஆசையைத் தூண்டனும் என்பது போன்று ஆயுர்வேத மருந்து வாங்கிக் கொடுத்தால் பணம் தருகிறோம் என்று 45 லட்சம் ரூபாய் அளவுக்கு புதிய வகையில் மோசடி நடந்திருப்பதை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கி. பிரபாகர் தலைமையிலான சைபர் கிராம் போலீஸ் கண்டுபிடித்திருக்கிறது. இணையம் மூலம் அறிமுகமான வெளிநாட்டு நபர் ஒருவர் இந்தியாவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில் கிடைக்கும் ஆயுர்வேத மருந்துகளை வாங்க விரும்புகிறேன். நான் இந்தியாவுக்கு வரும்போது அதற்குரிய பணத்தை […]

இணையத்தில் சீனர்களின் கோல்டு லோன் மெகா மோசடி… கண்ணி வைத்துப் பிடித்த கரூர் சைபர் கிரைம் போலீஸ்

கரூர் மாவட்டம், கரூர் சைபர் கிரைம் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களில் காணாமல் போன 54 லட்சம் ரூபாய் மதிப்பிலான 311 மொபைல் போன்கள் மற்றும் இணையதள மோசடிகளில் பாதிக்கப்பட்ட தொகை 1 கோடியே 7 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கி. பிரபாகரால்  பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டது. அதோடு இணையதளத்தைப் பயன்படுத்தி நடந்திருக்கும் சீட்டிங் குறித்து அதிர்ச்சி தகவல்களையும் கரூர் மாவட்ட காவல் துறையினர் பகிர்ந்துகொண்டனர். தன்னை தங்க […]

தமிழகத்தில் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்

இன்று தமிழகத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த சீனிவாச பெருமாள் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., ஆகவும் திருப்பூர் மாவட்ட எஸ்.பி., ஆக அபிஷேக் குப்தாவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும்…. தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி., – பகோர்லா செபாஸ் கல்யாண், சிஐடி பாதுகாப்பு பிரிவு எஸ்.பி., – சக்திவேல், சென்னை கொளத்தூர் துணை கமிஷனர் – […]

சென்னை இரண்டாவது தலைநகர்… ஆளுநர் பதவிக்கு ஆப்பு… திருமாவளவனின் தீர்மானங்கள் செல்லுபடி ஆகுமா..?

இந்தியா கூட்டணியில் பல்வேறு சிக்கல்கள் எழுந்திருக்கும் நிலையில், திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநாடு பா.ஜ.க.வுக்கு தமிழகத்தில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘எனக்கு திருமாவளவன் சட்டக் கல்லூரி மாணவராக திமுக மாணவர் அணியில் பணியாற்றிய காலத்தில் இருந்தே தெரியும். அப்போதே மேடைகளில் அவரது பேச்சு, கொள்கை கர்ஜனையாக இருக்கும். நாள்தோறும் கொள்கை வலு பெரும் இளம் காளையாக தான் இன்று ஜனநாயகம் காக்கும் இந்த மாநாட்டை […]

ரஜினி மேடையில் விஜய்க்கு செம மாஸ்… சர்ச்சையான ரஜினியின் சங்கி முத்திரை

எனக்கு காவி கலர் பூசப்பார்க்கிறாங்க, நான் அதுல சிக்க மாட்டேன் என்று சொன்ன ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தார். சமீபத்தில் ராமர் கோயில் விழாவில் அமர்ந்து பெருமிதப்பட்டு திரும்பியிருக்கிறார். ஆகவே, ரஜினியை சங்கி என்று அவரது ரசிகர்களே வேதனையுடன் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். ரஜினிக்கு சங்கி முத்திரை குத்தப்பட்டுவிட்டதால், பொதுஜன ஆதரவை இழந்துவிட வாய்ப்பு இருக்கிறது, வசூல் பாதிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால், லால் சலாம் ஆடியோ விழாவில், ‘ரஜினி சங்கி இல்லை’ என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் […]

குடியரசு தின விழாவில் கவர்னரை வைத்துக்கொண்டே பல சம்பவங்கள் செய்த ஸ்டாலின்..!

சென்னை, காமராசர் சாலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும் முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டார்கள். இதில் பல்வேறு நிகழ்வுகள் கவர்னரை திட்டமிட்டு சம்பவம் செய்யப்பட்டதாகவே கருதப்படுகிறது. குறிப்பாக தஞ்சாவூர் – தென்னக பண்பாட்டு மையம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்திகளை இருவரும் பார்வையிட்டனர். இந்தியா முழுக்க பேசுபொருளாக இருந்த மணிப்பூர் கலவரத்தை பிரதமர் சென்று பார்வையிடவே இல்லை. இதனை வலியுறுத்தும் வகையில் மணிப்பூர் மாநில கலைக் குழுவினரின் […]