News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

காற்றில் கீதமாக கரைந்துபோன பவதாரணிக்கு இத்தனை கொடூரமான நோயா..? நெஞ்சை உருக்கும் பவதாரணியின் சூப்பர்ஹிட் பாடல்கள்..!

தமிழர்களுக்கு இளையராஜாவின் இசை இல்லாமல் பகல் விடியாது, இரவு முடியாது. அந்த அளவுக்கு தமிழர்களின் ரத்தத்தோடு கலந்திருக்கிறது இளையராஜாவின் இசை. அந்த இசைஞானியின் வாரிசுகள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, பவதாரிணி. இந்த மூவரில் இளையவரான பவதாரணியின் மறைவு தமிழக இசை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இளையராஜாவின் மகளாக மட்டுமின்றி அற்புதமான பாடகராகவும் தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தைக் கவர்ந்த பவதாரணிக்கு இப்போது 47 வயது மட்டுமே ஆகிறது. கடந்த சில வருடங்களாக பவதாரணிக்கு உடல் நலத்தில் […]

நடிகர் விஜய் திடீர் தேர்தல் ஆலோசனை.. கட்சி மாறத் துடிக்கும் முக்கிய ஆளும் கட்சி வி.ஐ.பி.

தென் தமிழகத்தை மிரட்டிய மிக்ஜாம் புயல் மழையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிய அதிரடி காட்டிய நடிகர் விஜய், திடீரென இன்று மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் ஆலோசனை நடத்தியிருக்கிறார். விரைவில் அரசியல் இயக்கம் தொடங்கப்பட இருப்பதாக சொல்லப்படும் நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்டத் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுவை மாநிலங்களிலிருந்ந்தும் நிர்வாகிகள் வந்திருந்தார்கள். அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட நடிகர் விஜய் அவரவர் […]

பத்திரிகையாளர்கள் மீது அண்ணாமலை மீண்டும் அநாகரீகப் பாய்ச்சல்… மூத்த பத்திரிகையாளர்கள் அனைவரும் தி.மு.க.வின் வெங்காயங்களாம்

கார்த்திகை செல்வன் எடுத்த ஒரு பேட்டி குறித்து ’பல்லுபடாம…’ என்று சாதாரண நபர்கள் பேசுவதற்குக் கூசும் வார்த்தைகளை சகஜமாகப் பயன்படுத்தினார் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. இதற்கு கடுமையாக எதிர்ப்பு கிளம்பிய நேரத்தில், இதெல்லாம் கொங்கு பகுதியில் சாதாரணம் என்றும் இதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் பேசியிருந்தார் அண்ணாமலை. தேசியக் கட்சியின் தலைவராக இருக்கும் ஒருவர் அருவருக்கத்தக்க பேச்சை வெளிப்படுத்தியதைக் கண்டித்து மூத்த பத்திரிகையாளர்கள் ராம், குணசேகரன், அரவிந்தாக்‌ஷன், ஏ.எஸ்.பன்னீர்செல்வன், திருஞானம், கவிதா முரளீதரன் போன்ற […]

மோடி ஆசிர்வாதத்துடன் போயஸ் புது பங்களாவில் சசிகலா… தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்..?

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வெளியே வரும்போது போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் குடியேற ஆசைப்பட்டார் வி.கே.சசிகலா. ஆனால்,  எடப்பாடி பழனிசாமி அவரது ஆசையை கலைக்கும் வகையில் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றியது. அதோடு நீதிமன்ற உத்தரவுப்படி ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக்கிற்கு வேதா நிலையம் இல்லம் சென்றது. தீவிர அரசியலில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கப்போவதாக கூறி ஆன்மீக பயணம் கிளம்பினார். எடப்பாடிக்கு சிக்கல் […]

வைகோவுக்கு எம்.பி. சீட் இல்லை..! தி.மு.க. உறுதி… துரை வைகோ கூட்டணியில் இருந்து விலகுவாரா..?

கடந்த முறை மக்களவை தேர்தலில் ம.தி.மு.க.வுக்கு ஒரு சீட் கொடுக்கப்பட்டது. அதோடு மாநிலங்களவையும் வைகோவுக்கு ஒரு சீட் வழங்கப்பட்டது. அந்த சீட் தற்போது முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் மீண்டும் வைகோவை மாநிலங்களவைக்கு அனுப்பப்போவதில்லை என்பதை தி.மு.க. உறுதி செய்துவிட்டதாம். கடந்த முறை போன்று மக்களவைக்கு மட்டும் ஒரே ஒரு தொகுதி கொடுக்கப்படும் என்று தெரிகிறது. மாநிலங்களவை சீட் கிடைக்கவில்லை என்றால் தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து நீடிக்குமா என்பது கேள்விக்குரியாகியுள்ளது. இந்த நிலையில் சுதந்திர போராட்ட வீரர் […]

பலத்த சர்ச்சைகளுக்கு இடையில் கலைஞர் பெயரில் ஏறு தழுவுதல் அரங்கம் திறந்துவைப்பு..!

நூலகம் கட்டுவதாக இருந்தாலும் சரி, பஸ் ஸ்டாண்ட் கட்டுவதாக இருந்தாலும் சரி அதற்கு கலைஞர் கருணாநிதி பெயரை சூட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது ஆளும் தி.மு.க. அரசு. இந்த நிலையில் மதுரையில் தொடங்கப்படும் ஏறு தழுவுதல் அரங்கிற்கு கலைஞர் பெயரை சூட்டக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் நிறையவே அழுத்தம் கொடுத்துவந்தனர். ஆனால், அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல் அட்டகாசமாக திறப்புவிழா நடத்தி ஏழு தழுவுதலை தொடங்கி வைத்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். உலகின் முதல் பிரம்மாண்டமான ஏறுதழுவுதல் அரங்கம் என்று இதனை […]

நைஜீரிய கொக்கைன் கடத்தல் கும்பலை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்… சந்தீப் ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டு..!

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்துபவர்களையும், கள்ளத்தனமாக விற்பனை செய்பவர்களையும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுக்கு இணங்க, காவல் குழுவினர் தீவிரமாகக் கண்காணித்து விரட்டிப்பிடித்து கைது செய்து வருகிறார்கள்.  சமீபத்தில் குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்களை சட்டத்துக்குப் புறம்பாக பதுக்கி வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்தவர்கள் என 63 நபர்களை கைது செய்து 1,788 கிலோ குட்கா புகையிலையைக் கைப்பற்றி அதிரடி காட்டியது.  இதன் தொடர்ச்சியாக அண்ணாநகர் காவல் மாவட்ட […]

தமிழகம் வருகிறது ஜெயலலிதா நகைகள்..! பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுமா..?

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு, அவரது வீட்டில் ரெய்டு செய்யப்பட்டது. அங்கு நிறைய நிறைய தங்க, வெள்ளி நகைகள் எடுக்கப்பட்டன. இந்த வழக்கில் இறுதி தீர்ப்புக்கு முன் ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால், சசிகலா மட்டுமே தண்டனை கிடைத்து சிறையிலிருந்து வெளியே வந்தார். நீதிமன்றத்தின் வசமிருக்கும் ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் இட்டு, அந்த பணத்தின் மூலம் ஜெயலலிதா கட்ட வேண்டிய தண்டத் தொகையை கட்ட வேண்டும் என்று ஒரு கருத்து நிலவி வந்த நிலையில் ஒரு புதிய […]

சீமானுக்குத் தெரியாமல் கட்சி விழாக்களில் கலந்துகொள்கிறாரா கயல்விழி..? நாம் தமிழர் இயக்கத்துக்குள் சலசலப்பு

தி.மு.க.வின் வாரிசு அரசியலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வளர்ச்சி அடைந்துள்ள நாம் தமிழர் கட்சி நிகழ்ச்சிகளில் சீமானின் மனைவி கயல்விழி வம்படியாக திணிக்கப்படுவதாக வரும் செய்திகளால், தம்பிகள் கடும் வருத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். தி.மு.க.வுக்கு இளைஞர் அணி மூலம் கட்சிக்குள் நுழைந்த ஸ்டாலின் தலைவராக மாறினார். அதேபோல் இளைஞர் அணி மூலம் நுழைந்த உதயநிதியும் அடுத்த தலைவராக மாறிவிட்டார். அதே வழியில் வழக்கறிஞர் பாசறையைச் சேர்ந்த சீமானின் கயல்விழி பொதுக்குழு மீட்டிங்கில் கலந்துகொண்டதை தி.மு.க.வினர் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்கள். […]

ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணத்துக்கு ரெடி… அமைச்சர்கள் மீட்டிங்கில் கடும் எச்சரிக்கை

தமிழகத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு சமீபத்தில் நடைபெற்று சுமார் 6.64 லட்சம் கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 28ம் தேதி ஸ்டாலின் வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்குப் பயணமாகும் ஸ்டாலின் அங்கு தொழிலதிபர்களுடன் கலந்துரையாடவும், முதலீடுகளை ஈர்ப்பதற்கும் ஏற்பாடுகள் நடத்தப்பட்டுள்ளன. சுமார் 10 நாட்கள் பயணம் முடிந்து பிப்ரவரி முதல் வாரத்தில் நாடு திரும்புகிறார். இந்த நிலையில் இன்று காலை […]