மீண்டும் மீண்டும் ரெய்டு. திமுகவில் இருந்து விலகுகிறார் செந்தில்பாலாஜி..?

கடந்த ஆட்சியில் செந்தில்பாலாஜி மீது பாஜக தொடர் நடவடிக்கை மேற்கொண்டுசிறையில் தள்ளியது. அதேபோன்று இப்போது தவெக அரசு தொடர்ந்து செந்தில்பாலாஜி மீது அதிரடிநடவடிக்கைகள் எடுத்துவருகிறது. டாஸ்மாக் தொடங்கி அவர் வகித்த மின்சாரத்துறை வரையிலும் பல்வேறுவிவகாரங்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன. தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று தமிழகம் முழுவதும் 40 இடங்களில் லஞ்சஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டுவருகிறது. சென்னை பெருங்குடியில் 4 இடங்கள், அண்ணா நகரில்3 இடங்கள், திருவள்ளூர், செங்கல்பட்டு என லஞ்ச ஒழிப்புத்துறை […]
பஸ் கண்டக்டராக வடமாநில தொழிலாளர்கள்..? விஜய்க்குத் தெரியுமா?

முதல்வர் விஜய்க்குத் தெரியாமல் இந்த ஆட்சியில் எதுவும் நடப்பதில்லை என்று அமைச்சர்கள் நெஞ்சை நிமிர்த்தி பேசுகிறார்கள். ஆனால், போக்குவரத்துத் துறையில் வடமாநில தொழிலாளர்கள் பணி நியமனம் செய்யப்படுவதாக வரும் தகவல் அவருக்குத் தெரியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 1800 நடத்துநர் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வதற்கு உத்திரப்பிரதேச நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள தவெக அரசைக் கண்டித்து, இன்று போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்துவருகிறார்கள். ஏனென்றால், வட மாநிலத் தொழிலாளர்களுக்கு தமிழ் தெரியாது. ஓரளவு தமிழ் தெரியும் […]
விஜய் சல்யூட்டுக்கு பயந்துட்டீங்களா ஸ்டாலின்..? முரசொலி அக்கப்போர்

விஜய் ஆட்சியின் 100 நாள் சாதனைகள் மற்றும் சுதந்திர தின நாள் கொண்டாட்டத்திற்கு திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி, கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, விஜய்யின் அதிரடி அரசியலை ஸ்டாலினால் தாக்குப்பிடிக்க முடியாமல் தனிமனித தாக்குதல் மற்றும் நடிகை விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளதுள்ளார் என்று தவெகவினர் கிண்டல் செய்கிறார்கள். முரசொலி தலையங்கத்தில், ‘’சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றிய முதலமைச்சர் விஜய்யின் மானம் காற்றில் பறந்தது. வெட்கமோ, கூச்சமோ இல்லாமல் ஒரு நடிகையை முன்வரிசையில் உட்கார வைத்து, இருவரும் […]
டி.கே.சிவகுமாரை தட்டிக் கேட்பாரா விஜய்..? காவிரி, தமிழர் படுகொலை

கர்நாடக வனத்துறையினர் 3 தமிழர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரம் மற்றும் காவிரி நீர் பிரச்னை குறித்தும் சென்னைக்கு வரும் கர்நாடக முதல்வருடன் நேரில் எதிர்ப்பு தெரிவிப்பாரா விஜய் என்ற கேள்வி எழுந்துள்ளது. சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் ஹன்னூர் காட்டில் மான் வேட்டையில் ஈடுபட்டதாக மூன்று தமிழர்கள் கர்நாடக வனத்துறை காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதேநேரம், காணாமல் போன மாடுகளைத் தேடிச் சென்றவர்களை வனத்துறை காவலர்கள் சுட்டுவிட்டதாக தமிழர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதுகுறித்து கர்நாடக முதல்வரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, […]
திருமாவின் அடிதடி மாநாடு. திமுகவுக்கு சிறுத்தைகள் குட்பை

விடுதலை சிறுத்தைகள் புதிய இயக்கம் அல்ல, நிறைய கூட்டங்களை வெற்றிகரமாக நடத்தியவர்கள். ஆனால், தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டை ஒழுங்காக திட்டமிடாத காரணத்தால் கட்டுக்கடங்காத கூட்டம் காட்டுமிராண்டித்தனமாக மாறியது. வேறு வழியில்லாமல் தொண்டர்களை கட்டுப்படுத்த திருமாவே களத்தில் இறங்கி அடித்து, தள்ளவேண்டி இருந்தது. ஒரு கூட்டத்தை எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு உதாரணமாக விசிக தேசிய எழுச்சி மாநாட்டைக் கூறலாம் எனும் அளவுக்கு ஆகிவிட்டது. இதுகுறித்து பேசும் விசிகவினர், ‘’நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான கூட்டம் அதாவது ஏறக்குறைய […]
விஜய் 100 நாள் ஆட்சி. ஸ்பெஷல் வீடியோ. தமிழகத்தின் பொற்காலம்

நாட்டில் ஊழல் ஒழியாதா? அரசு அதிகாரிகள் மக்களுக்குப் பயப்படமட்டார்களா ? நேர்மையான நிர்வாகம் கிடைக்காதா என்பது காலம் காலமாக தமிழக மக்கள் எதிர்பார்த்த மாற்றம். அந்த மாற்றங்களை எதிர்பார்த்த மக்களுக்கு விடையாக வந்தார் விஜய். தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்களை நிறைவு செய்துள்ளது; மக்களின் நாடித் துடிப்பை அறிந்து புதிய சிந்தனைகளுடன் பல திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் புகழ்ந்துள்ளார். லஞ்சம் கேட்டால் கொடுக்கதீங்க என்று சொன்ன முதல் முதல்வர் […]
உதயநிதி கைக்குப் போகும் திமுக..? கட்சி சீரமைப்புத் திட்டங்கள்

எதிர்பாராத தோல்வியினால் துவண்டு போயிருக்கும் திமுகவுக்கு உற்சாகம் தரும் வகையில் உட்கட்சித் தேர்தல் மற்றும் சீரமைப்புத் திட்டங்கள் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டச் செய்லாளர்கள் எண்ணிக்கை நூறுக்கும் மேல் உயர்த்தப்பட உள்ளது. இதில், உதயநிதி ஆதரவாளர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என்பதால் சீனியர்கள் அலறுகிறார்கள். இதுகுறித்துப் பேசும் திமுகவினர், ‘’விரைவில் திமுக செயற்குழு குழுவை கூட்ட திட்டமிட்டுள்ளது திமுக தலைமை. இதில் 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அலங்காரப் பதவிகள் மட்டுமே இருக்கும். சென்னையில் பகுதி செயலாளர்கள், பிற மாவட்டங்களில் […]
வைரலாகும் விஜய் – த்ரிஷா ஸ்பெஷல் சல்யூட்

முதல்வர் விஜய் இன்று முதன்முறையாக ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றி வைத்தார். இதையடுத்து அணிவகுப்பு ஊர்வலத்தில் கம்பீரமாக வலம் வந்தார். கேலரியில் அமர்ந்திருந்த விஜபிகளுக்கு சல்யூட் அடித்தபடி வந்தார். விஜய்யைப் பார்த்த பெற்றோர் சந்திரசேகர் – ஷோபா கைகூப்பி வணக்கம்வைத்தனர். அவர்களுக்கு சல்யூட் வைத்த விஜய், தனக்காக எழுந்து நின்ற த்ரிஷாவைப் பார்த்ததும் ஸ்பெஷல் சல்யூட் அடித்தார். த்ரிஷா அந்த சல்யூட்டுக்கு தன்னுடைய ஸ்டைலில் ஒரு சல்யூட் அடித்தார். விஜய் அதைப் பார்த்து புன்னகை பூத்தார். இதை பார்த்த […]
விஜய் வழங்கிய தகைசால் தமிழர் விருது. ஒரே கல்லில் மூன்று மாங்காய்

தகைசால் தமிழர் விருது என்பது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தமிழ் இனத்தின் மேம்பாட்டிற்கும் பாடுபட்ட பெருமக்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது. விஜய் ஆட்சியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது இன்று சுதந்திரதின விழாவில் வழங்கப்பட்டது. இவர் டாக்டர் ராமதாஸின் சம்பந்தி. அதாவது கிருஷ்ணசாமி மகள் சௌமியாவைத்தான் அன்புமணி ராமதாஸ் திருமணம்முடித்திருக்கிறார். இந்த விருது மூலம் காங்கிரஸ் கட்சியையும் பாமகவையும் தங்கள் பக்கம் இழுத்துள்ள விஜய், இந்த அரசை தாங்கிப்பிடிப்பது போன்று […]
கோட்டையில் கொடி ஏற்றிய விஜய்…. அட்டகாச அறிவிப்புகள்

சென்னை கோட்டையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று கொடியேற்றினார். காவல் துறை அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். கொடி வணக்கம் செலுத்தினார். இன்று விஜய் நிகழ்த்திய சுதந்திரதின உரையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. என் நெஞ்சில் குடியிருக்கும் என்று வழக்கமான அவரது டிரேட் மார்க் வசனத்துடன் பேச்சைத் தொடங்கினார் விஜய். அவர் பேசுகையில், ‘’இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றும் பெருமையை எனக்கு வழங்கிய உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், ஜென்ஸி இளைஞர்களுக்கும் எனது […]

