News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

கங்கை அமரனுக்கு சனாதனத் திமிர்… வைரமுத்து ஆதரவாளர்கள் கும்மாங்குத்து

பாடலுக்கு இசையா, இசைக்குப் பாட்டா என்று பேசியிருந்த வைரமுத்துக்கு எதிராக இளையராஜாவின் தம்பி கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தார். அவர், ’நாங்க கொடுத்த பிச்சைதான் வைரமுத்துவோட வாழ்க்கை!.. இப்படியெல்லாம் பேசுனா அவ்வளவுதான்!.. நான் ஒரே ஒரு தம்பி தான்.. என்ன நடக்கும்னே தெரியாது. வைரமுத்து நல்ல மனிதர் இல்லை… புத்தியும் இல்லை. வைரமுத்துவுக்கு கர்வம் தலைக்கேறிடுச்சு… என்றெல்லாம் விளாசியிருந்தார். நாங்க வாய்ப்பு தரவில்லை என்றால் வைரமுத்து ஜீரோ என்று கூறியிருந்ததற்கும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. பஞ்சு அருணாசலம் வாய்ப்பு […]

கோவிஷீல்டு போட்டவங்க அச்சப்படாதீங்க, இத்தனை காலத்துக்குப் பிறகு பாதிப்பு வராது

கோவிஷீல்டு மருந்து என்றாலே அது பக்கவிளைவு கொண்டது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்பது தான் இப்போது மருத்துவர்கள் கூறிவரும் கருத்து. பக்கவிளைவுகள் இல்லாத மருந்து என எதுவும் இருக்காது. எல்லா மருந்துகளிலும் அதனால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள் பற்றிய குறிப்புகள் இருக்கும். பலருக்கு ஒத்துப்போகும் மருந்து சிலருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். வலிநிவாரணிகளை எடுத்துக் கொள்பவர்கள், மயக்கமாக உள்ளது, உறக்கம் வருகிறது என்பார்கள். முடி உதிர்தல், எடை குறைதல், தோல் அரிப்பு, வயிற்று வலி, வாய் உலர்தல், மலச்சிக்கல் […]

கோவிஷீல்டு தடுப்பூசியில் பக்கவிளைவுகள்… அதிர்ச்சி தரும் அறிக்கை

கொரோனா காலத்திற்குப் பிறகு இளவயதில் மாரடைப்பு போன்ற ரத்த நோய்களால் மரணம் அடைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டு போட்டவர்களுக்கே இந்த பாதிப்பு அதிகம் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால், மத்திய அரசு அதனை மறுத்துவந்தது. இந்த நிலையில், கோவிஷீல்டு கரோனா தடுப்பூசியால் அரிதாக சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதனை உருவாக்கிய ஆஸ்ட்ரஜெனக்கா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரிட்டன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கோவிஷீல்டு பாதிப்புகள் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஸ்ட்ராஜெனக்கா […]

நிர்மலா தேவி குற்றவாளி என்றால், யாருக்காக குற்றம் செய்தார்.?

ஒரு காலத்தில் தமிழகத்தையே உலுக்கிய நிர்மலா தேவி செக்ஸ் குற்றச்சாட்டு வழக்கில், கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியராக பணியாற்றிவந்தவர் நிர்மலாதேவி. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், உயர்கல்வித்துறையிலும் பெரும் செல்வாக்குடன் இருந்தவர். இவர், தேவாங்கர் கல்லூரியில் சில மாணவிகளுக்கு ஆசைவார்த்தைகளைக் கூறி உயர்கல்வித்துறைப் புள்ளிகளுக்குப் பாலியல்ரீதியாக அவர்களைப் பயன்படுத்த முயன்றதாகப் புகார் எழுந்தது. அதன்படி, பேராசிரியை […]

3,000 ஆபாச வீடியோக்கள்… பாலியல் கிரிமினல் பிரஜ்வலை காப்பாற்றுகிறாரா மோடி..?

நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை பிரஜ்வல் ரேவண்ணா சீரழித்திருக்கிறார் பத்து நாட்களுக்கு முன்பு கூட அவருக்காக பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கிறார் அந்த நபர் மிகக் கொடூரமான குற்றச் செய்துவிட்டு இன்று தலைமுறைவாகி இருக்கிறார் ஆனாலும் பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தொடர்ந்து மௌனம் சாதிப்பது ஏன் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியிருக்கிறார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா (33), ஹாசன் […]

இளையராஜாவின் ஆணவத்துக்கு வைரமுத்து நேரடி பதில்

தான் இசையமைத்த அத்தனை பாடலும் எனக்கே சொந்தம் என்று நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார் இளையராஜா. நான் எல்லோருக்கும் மேலானவன் என்றும் வாதம் வைத்திருக்கிறார். இது, இளையராஜாவின் ரசிகர்களையும் நெளிய வைத்திருக்கிறது. ஏனென்றால் சினிமா என்பது பணம் போட்ட தயரிப்பாளரின் சொத்து. அவர் அதை யாருக்கும் விற்கவோ குத்தகைக்கு விடவோ உரிமை உண்டு. அந்த சினிமாவைற்கு, இசை, எழுத்து, காட்சி அமைப்பு, நடிப்பு, இன்னபிற செயல்களை செய்தவர் அனைவரும் ஊதியம் பெற்று உழைத்தவரே… அவர்கள் யாருக்கும் அதில் எந்த பாத்தியமும் […]

மோடி அரசுக்கு எடப்பாடி பழனிசாமி லைட்டா ஒரு விமர்சனம்

கூட்டணியில் இருந்து வெளியே வந்தபிறகும் மத்திய அரசு மீது எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சனம் வைப்பதே இல்லை என்பது மீண்டும் ஒரு முறை நிருபணம் ஆகியிருக்கிறது. மிக்ஜாம் புயலுக்குக் கேட்ட நிவாரணத் தொகையை மோடி அரசு வழங்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி அனைத்துக் கூட்டணிக் கட்சியினரும் கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார்கள். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி, ‘அவங்க எப்பவும் அப்படித்தான்’ என்பது போன்று விமர்சனத்தை முடித்துக்கொண்டார். சேலம் மாவட்டம், இடைப்பாடியில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து […]

பாட்டியையும் விட்டுவைக்காத ரேவண்ணா… கர்நாடகாவை நாறடிக்கும் பாலியல் வீடியோக்கள்

பா.ஜ.க. கூட்டணியில் வேட்பாளராக நிற்கும் பிரஜ்வல் ரேவண்ணாவின் நூற்றுக்கணக்கான பாலியல் வீடியோக்கள் கர்நாடகா முழுவதும் பரவி வரும் நிலையில், அங்கு பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அதுகுறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் போயிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாள் பிரதமர் தேவ கௌடாவின் பேரனும், முன்னாள் மந்திரி ரேவண்ணாவின் மகனும், பாஜகவின் கூட்டாளியும், மோடியுடன் நெருங்கிய தொடர்புடையவருமான குமாரசாமியின் மருமகன் பிரஜ்வல் ரேவண்ணாவே இந்த பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார். 24 வயஹாகும் ரேவண்ணா இப்போது […]

குஜராத்தில் போதை ஃபேக்டரி… அண்ணாமலை அசைன்மென்ட்..?

தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் நல்ல பெயர் கொடுத்துவந்த நேரத்தில் ஜாபர் சாதிக் போதைப் பொருளுடன் பிடிபட்டது பெரும் பரபரப்பைக் கொடுத்தது. போதை தி.மு.க. என்று பா.ஜ.க.வினர் கடுமையாக பிரசாரம் செய்தனர். இந்த நிலையில் குஜராத்திலும், ராஜஸ்தானிலும் மிகப்பெரிய போதைப்பொருள் தயாரிப்புக் கூடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆலைகளில் இருந்து ஏராளமான போதைப்பொருட்களும், அதனை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அண்மைக்காலமாக இந்தியா முழுவதும் போதைப்பொருட்களின் புழக்கம் பல மடங்கு அதிகரித்துள்ளது. வட மாநிலங்களிலும், […]

ஸ்டாலினுக்கு அஞ்சு நாள் லீவு… ஃபேமிலி டிரிப்

தேர்தல் முடிந்தவுடனே ஜாலி வெளிநாட்டுக்குப் பறக்கப் போகிறார் என்றும் மாலத்தீவுக்குப் போகிறார் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் அவரது ஐந்து நாள் ஃபேமிலி டிரிப் தமிழ்நாட்டுக்குள்ளே முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடிக்கு சூடேற்றுவதற்காக மாலத்தீவு பறக்கிறார் என்று கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. இதற்கு தி.மு.க. சார்பில் எந்த பதிலும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 5 நாட்கள் குடும்பத்தினருடன் தங்கி ஓய்வெடுக்க முதல்வர் திட்டமிட்டிருப்பது உறுதியாகியுள்ளது. இதற்காக திங்களன்று சென்னையில் இருந்து தனி விமானத்தில் […]