Share via:
பா.ஜ.க. கூட்டணியில் வேட்பாளராக நிற்கும் பிரஜ்வல் ரேவண்ணாவின்
நூற்றுக்கணக்கான பாலியல் வீடியோக்கள் கர்நாடகா முழுவதும் பரவி வரும் நிலையில், அங்கு
பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அதுகுறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் போயிருப்பது
கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னாள் பிரதமர் தேவ கௌடாவின் பேரனும், முன்னாள் மந்திரி ரேவண்ணாவின்
மகனும், பாஜகவின் கூட்டாளியும், மோடியுடன் நெருங்கிய தொடர்புடையவருமான குமாரசாமியின்
மருமகன் பிரஜ்வல் ரேவண்ணாவே இந்த பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார்.
24 வயஹாகும் ரேவண்ணா இப்போது மீண்டும் ஹசன் தொகுதியில் எம்.பி.
தேர்தலில் போட்டியிடுகிறார். ஹாசன் தொகுதியில் வாக்குப் பதிவு நடைபெற்ற ஏப்ரல் 26-ம்
தேதி முதல் நாளில் இருந்தே நூற்றுக்கணக்கான பாலியல் வீடியோக்கள் (கிட்டத்தட்ட 200)
சமூக ஊடகங்களில் பரவி வைரலாகின.
இப்படிப்பட்ட நபருக்கா நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள்? என்ற
வாசகத்துடன் இந்த ஆபாச வீடியோக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதில் பெரும்பாலும் பெண்களை
இவர் வலுக்கட்டாயமாக துன்புறுத்துவதும் மற்றும் உடலுறவு கொள்ள கட்டாயப்படுத்துவது போல்
இருந்திருக்கிறது.
அவர் ஒரு பாலியல் வேட்டையாடிமட்டும் இல்லை, அனைத்தையும் படமாக்கியிருக்கிறார்.
இது வெறும் ‘குற்றச்சாட்டு’ இல்லை. பாலியல் துன்புறுத்தல் மற்றும் குறைந்தது 12 பெண்களை
பாலியல் பலாத்காரம் செய்ததற்கான அனைத்து ஆதாரங்களுடனும் வீடியோக்கள் தெளிவாக உள்ளன.
இந்த வீடியோக்கள் வெளியானதில் இருந்து அவர் தலைமறைவாகி விட்டார்.
நாட்டை விட்டே ஓடிவிட்டார் என்று தகவல் வருகிறது. இந்நிலையில் ஆபாச வீடியோ விவகாரம்
தொடர்பாக எஸ்ஐடி விசாரணை நடத்த முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
அவரது பாலியல் வேட்டையில் திருநங்கைகள், மாமன்ற உறுப்பினர்கள்,
கல்லூரிப்பெண்கள், அதிகாரிகளின் மனைவிகள், வீட்டு பணிப்பெண்கள் உதவி கேட்டு வந்த பெண்கள்,
பா.ஜ.க. மற்றும் ம.ஜ.த. பெண் நிர்வாகிகள், பணிமாறுதல் கேட்ட பெண் அதிகாரிகள் 68 வயது
மூதாட்டி என வெறித்தனமாக வேட்டையாடியிருக்கிறார்.
அடுத்த கட்ட தேர்தலுக்கு ஓட்டு வேட்டைக்கு வந்த மோடி இதுபற்றி
வாயைத் திறக்கவே இல்லை என்பது தான் பரிதாபம்.