News

Follow Us

தேர்தல் முடிந்தவுடனே ஜாலி வெளிநாட்டுக்குப் பறக்கப் போகிறார் என்றும் மாலத்தீவுக்குப் போகிறார் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் அவரது ஐந்து நாள் ஃபேமிலி டிரிப் தமிழ்நாட்டுக்குள்ளே முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

பிரதமர் மோடிக்கு சூடேற்றுவதற்காக மாலத்தீவு பறக்கிறார் என்று கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. இதற்கு தி.மு.க. சார்பில் எந்த பதிலும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 5 நாட்கள் குடும்பத்தினருடன் தங்கி ஓய்வெடுக்க முதல்வர் திட்டமிட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

இதற்காக திங்களன்று சென்னையில் இருந்து தனி விமானத்தில் குடும்பத்தினருடன் மதுரை வருகிறார். அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் வருகிறார். அங்கு தனியார் ஹோட்டலில் குடும்பத்தினருடன் மே 3-ம் தேதி வரை 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கிறார்.

கடந்த 2021-ல் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்ததும் குடும்பத்துடன் வந்து தங்கி ஓய்வெடுத்தது குறிப்பிடத்தக்கது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் ஓய்வெடுக்க வருகிறார். ஓய்வுக்காக வருவதால், கட்சியினர் யாரும் முதல்வரை சந்திக்க அனுமதி இல்லை. மே 3 அல்லது மே 4-ம் தேதி மீண்டும் சென்னை திரும்புவார் என்று திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link