Share via:
தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் நல்ல பெயர் கொடுத்துவந்த நேரத்தில்
ஜாபர் சாதிக் போதைப் பொருளுடன் பிடிபட்டது பெரும் பரபரப்பைக் கொடுத்தது. போதை தி.மு.க.
என்று பா.ஜ.க.வினர் கடுமையாக பிரசாரம் செய்தனர்.
இந்த நிலையில் குஜராத்திலும், ராஜஸ்தானிலும் மிகப்பெரிய போதைப்பொருள்
தயாரிப்புக் கூடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆலைகளில் இருந்து ஏராளமான போதைப்பொருட்களும், அதனை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களும்
கைப்பற்றப்பட்டுள்ளன.
அண்மைக்காலமாக இந்தியா முழுவதும் போதைப்பொருட்களின் புழக்கம்
பல மடங்கு அதிகரித்துள்ளது. வட மாநிலங்களிலும், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும்
கஞ்சா, ஹெராயின் என உள்நாட்டு போதைப்பொருட்கள் முதல் மெத்தபேட்டைமைன் வரையிலான வெளிநாட்டு
போதைப்பொருட்களும் அதிக அளவில் புழங்கி வருகிறது.
சென்னையில் அண்மையில் 2,500 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக திமுக முன்னாள் பிரமுகர் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். இது தமிழக
அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ந்நிலையில், வட மாநிலங்களில் போதைப்பொருட்களை சட்டவிரோத கும்பல்கள்
அதிக அளவில் தயாரிப்பதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு (என்சிபி) தகவல் கிடைத்தது.
இதன்பேரில், போதைப்பொருள் தடுப்பு பிரிவும், குஜராத் தீவிரவாத தடுப்புப் படையும் இணைந்து
தேடுதல் வேட்டையில் இறங்கின. இதில் குஜராத் தலைநகர் காந்திநகரில் ஒரு மிகப்பெரிய போதைப்பொருள்
தயாரிப்பு தொழிற்சாலையும், அம்ரேலி பகுதியில் ஒரு தொழிற்சாலையும் இயங்குவதும் கண்டறியப்பட்டுள்ளது.
இங்கிருந்து போதைப் பொருளை தமிழகத்திற்கு அனுப்பி தி.மு.க.வினரை
சிக்கவைப்பதற்கு அண்ணாமலை பிளான் செய்வதாக தி.மு.க.வினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்று கேள்வி மேல்
கேள்வி எழுப்புகிறார்கள்.