Share via:
தமிழ் நாடு பற்றி பேசும் நேரத்தில் எல்லாம், ‘எனக்கு தமிழ் மொழி பிடிக்கும்’, ‘தமிழ் தாய் மொழியாக இல்லையே என்று வருத்தப்படுகிறேன்’ ‘தமிழ் என் உயிர் மூச்சு’ என்றெல்லாம் பேசுகிறார் மோடி.
அதேநேரம், தமிழ் மொழி வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்குவது இல்லை. தமிழ் அறிஞர்களுக்கு விருது கொடுப்பதில்லை. செத்துப்போன மொழியான சமஸ்கிருதத்துக்கு அள்ளிக்கொடுக்கும் மோடி தமிழ் மொழிக்கு கிள்ளிக்கூட கொடுப்பதில்லை.
அலுவல் மொழியாக தமிழ் இடம் பெறும் என்று அறிவிக்கவில்லை. தமிழை இந்தியாவின் ஆட்சி மொழி ஆக்குவதற்கு எந்த முயற்சியும் எடுப்பதில்லை. நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக மாற்றுவதற்கு முயற்சி எடுக்கவில்லை. தமிழ் அகழ்வாராய்ச்சிக்கு நிதி ஒதுக்குவது இல்லை.
இதுவெல்லாம் போகட்டும் தமிழ்நாட்டு மக்கள் பெருவெள்ளத்தில் கதறித் துடித்த நேரத்தில் எட்டிப் பார்க்கவில்லை, ஒரு ரூபாய் நிதியுதவியும் கொடுக்கவில்லை. அடிக்கல் நாட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையைக் கூட கட்டிக் கொடுக்கவில்லை. ஆனால், தமிழ் மீது காதல், கத்தரிக்காய் என்று நீலிக்கண்ணீர் வடிப்பதை மட்டும் குறைக்கவே இல்லை. எங்க தமிழ்த் தாயை விட்ருங்க மோடிஜி… அவர் நிம்மதியா இருக்கட்டும்.