Share via:
முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் கரூர் சம்பவம் குறித்து பொதுவெளியில் பேசத் தடை கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்த விவகாரம் திமுகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கரூர் வழக்கில் முதலமைச்சர் விஜய் குற்றம் சாட்டப்பட்ட நபர் என உச்ச நீதிமன்றத்தில் கூறிய போது அதற்கு நீதிபதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கூட விஜய் குற்றம் சாட்டப்பட்ட நபராக இல்லை என கண்டிப்பு காட்டியிருக்கிறார்கள்.
அதோடு திமுகவுக்கு உறைக்கும் வகையில் கேள்வி மேல் கேள்வி எழுப்பியிருக்கிறது. அதாவது, “ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் என்ன பேசணும்னு கோர்ட் எப்படி சொல்ல முடியும்?” என்று உச்சநீதிமன்றமே கேள்வி கேட்டிருக்கிறது. . அரசியல்ல விமர்சனம் வந்தால் அதுக்கு அரசியலிலே பதில் சொல்ல வேண்டும். கோர்ட்டை அரசியல் மேடையாக மாற்றக்கூடாது. உங்களுடைய சண்டைகளை வெளியே வைத்துக் கொள்ளுங்கள்!” திமுகவுக்கு உச்சநீதிமன்றம் காட்டம் காட்டியிருக்கிறது.
இனியாவது அடங்குங்க உடன்பிறப்புகளே.

