Share via:
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடரில்
இன்று நகராட்சி நிர்வாகம் – செய்தித்துறை, தமிழ் வளர்ச்சி, பள்ளிக் கல்வி, உயர்கல்வித்துறை
தொடர்பான விவாதம் நடைபெறுகிறது.
இன்றைய தினம் முதல்வர் விஜய், ‘’மீனம்பாக்கம்
விமானம் நிலையம் ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளை கையாள்கிறது. தொழில் வளர்ச்சிக்கும்
சரக்கு போக்குவரத்துக்கும் இன்னொரு விமானம் நிலையம் தேவை. விவசாயிகள் பாதிக்கப்படாத
வண்ணம் இன்னொரு விமானநிலையத்துக்கான இடம் எடுக்கப்பட வேண்டும்.
ஆனால், முந்தைய அரசு பரந்தூர் – ஏகனாபுரத்தில்
விவசாய நிலங்களை அழித்து விமான நிலையம் கட்ட திட்டமிட்டது. நான் பரந்தூருக்கு நேரில்
சென்று மக்களின் கோரிக்கைகளை கேட்டேன். விவசாயிகளுடன் என்றும் நிற்பேன். இரண்டாவது
விமான நிலையம் தேவை. அதற்கு விவசாய நிலங்கள் பாதிக்கப்படாத மாற்று இடம் தேர்வு செய்யப்படும். பரந்தூர் விமான நிலையம் திட்டம் கைவிடப்படுகிறது..’’
என்று தெரிவித்தார்.
இதையடுத்து முதலமைச்சர் விஜய் விதி எண்
110ன் கீழ், ‘’அன்னப்பூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஆண்டுக்கு
3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். சிலிண்டருக்கான தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
வரும் பொங்கல் பண்டிகை அன்று திட்டம் தொடக்கம். ஆண்டுக்கு தோராயமாக 4000 கோடி ரூபாய்
ஒதுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
அதேபோல், ‘’மகளிர் கட்டணமில்லா பேருந்துகளில்
நகர, மாநகர பேருந்துகளில் 40 கி.மீக்கு மிகாமல் மட்டுமே பயணம் கொடுக்கப்படுகிறது. அதை
விரிவுப்படுத்தப் போகிறோம். அக்டோபர் 2 ஆம் தேதி முதல் இந்த வெற்றிப்பயணத் திட்டம் தொடங்கப்படும்.
சாதாரண பேருந்துகள் மட்டுமில்லாமல் எக்ஸ்பிரஸ்,
எல்.எஸ்.எஸ், டீலக்ஸ் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் புறநகர் பேருந்துகள்,
மலைப்பகுதியில் செல்லும் பேருந்துகளிலும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது. இந்தத் திட்டத்தில்
பயனடைய எந்தத வருமான உச்சவரம்பு தகுதியும் கிடையாது. வெற்றிப்பயணத் திட்டத்துக்காக
ஆண்டுக்கு 6,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்..’’ என்று அறிவிப்பு வெளியிட்டு அசத்தியிருக்கிறார்.
