5வது ஆம்புலன்ஸ் கொடுத்து மாஸ் காட்டிய நடிகர் பாலா… ஆனந்தக் கண்ணீரில் மலைக்கிராம மக்கள்

மிக்ஜாம் புயல் நேரத்தில் எத்தனையோ பெரிய நட்சத்திரங்கள் எல்லாம் வெளியே தலை காட்டாமல் முடங்கிக் கிடந்த நேரத்தில் தன்னால் முடிந்த உதவிகளை எல்லாம் செய்து மக்களிடம் நல்ல பெயர் வாங்கியவர் பிரபல சின்னத்திரை நடிகர் பாலா. அதன்பிறகும் உதவி செய்வதை பாலா நிறுத்தவே இல்லை. சரியான சாலை வசதியும் வாகன வசதியும் இல்லாமல் கஷ்டப்படும் மலைக் கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக்கொடுத்து மக்களின் துயர் துடைத்து வருகிறார். அதேபோன்று, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள மலைக்கிராமமான நெக்னா பற்றி […]
காரில் கஞ்சா கடத்திய கொடூர குற்றவாளிகள் 3 பேர் கைது. மடக்கிப் பிடித்த மடிப்பாக்கம் போலீஸ்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான குழுவினர் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்துபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் விரட்டிப் பிடித்து கைதுசெய்து வருகிறார்கள். மடிப்பாக்கம் எஸ்.7 காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவல்கள் அடிப்படையில் மடிப்பாக்கம் கைவேலி சந்திப்பில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது காரில் கஞ்சா கடத்திவந்த ரஞ்சன் கிஷோர் குமார், ஒத்தக்கண் அசோக், உதயகுமார் ஆகிய 3 பேரை […]
பாத்ரூமில் ரகசிய கேமரா… பிடிபட்ட வீட்டு உரிமையாளர்… வாடகை வீட்டுக்குப் போறவங்க உஷார்

சென்னையில் சொந்த வீடு இல்லாம வாடகைக்கு வீடு வீடா மாத்திட்டுப் போற மக்களே அதிகம் பேர் இருக்காங்க. அப்படி வாடகை வீட்டுக்குப் போன ஒரு பொண்ணுக்கு நடந்திருக்கிற கொடுமை ரொம்பவே அதிர வைக்குதுங்க. சென்னை ராயபுரத்துல ஒரு தம்பதி வாடகைக்கு வீடு எடுத்துட்டுப் போயிருக்காங்க. அந்த பொண்ணுக்கு பாத்ரூம் போய் குளிக்கிறப்ப ஏதோ ஒண்ணு தப்பா இருக்குதுன்னு தோணிக்கிட்டே இருந்திருக்கு. யாரோ நம்மள பார்க்கிறாங்கன்னு பொண்ணுங்களால ஈஸியா கண்டுபிடிச்சுட முடியும். அப்படித்தான் சந்தேகப்பட்டு பாத்ரூமை செக் பண்ணியிருக்காங்க. […]
KKK
மிக்ஜாம் புயல் பேரிடரால் பாதிக்கப்பட்ட விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் பாதிக்கப்பட்ட 5 ஆயிரம் குடும்பங்களுக்கு தி.மு.க. துணை பொது செயலாளர் கனிமொழி எம்.பி. நிவாரணப் பொருட்களை வழங்கினார். வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புZDFHSHZDGZHNZHNZFயல் காரணமாக கடந்த (டிசம்பர்) 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் அதிகனமழை பொழிந்தது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. பொது மக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் வீட்டு உபயோகப் பொருட்கள், சான்றிதழ்கள், புத்தகங்கள் […]
மலர்தூவி அஞ்சலி செலுத்திய கனிமொழி கருணாநிதி

திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி, எம்.பி.அவர்கள், திருமதி.ராஜாத்திஅம்மாள் அவர்களும் இன்று (30.01.2024) நேரில் சாலிக்கிராமத்தில் உள்ள கேப்டன் அவர்களது வீட்டிற்கு சென்று திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, கழக பொதுச்செயலாளர் திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்கள்.
பழனி முருகன் கோயிலில் மாற்று மதத்தினருக்குத் தடை… வேளாங்கண்ணி மாதா கோயில், நாகூர் தர்காவில் இந்துக்கள் நுழையலாமா..?

பழனி முருகன் கோயிலுக்கு இந்து அல்லாதவர்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பழனி கோயிலில் இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை வைக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது, மாற்று மதத்தை சார்ந்தவர்கள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால் தனி பதிவேடு வைக்க வேண்டும் என்றும் சாமி மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என பதிவேட்டில் உறுதிமொழி எடுத்த பின் கோயிலுக்குள் செல்லலாம் […]
மக்கள் திருந்தவே மாட்டாங்களா…? தமிழகத்தை சுருட்டும் மைவி3 ஆட்ஸ் சீட்டிங்

சதுரங்க வேட்டை படம் வெளியான பிறகு, மக்களை அத்தனை எளிதாக ஏமாற்ற முடியாது என்றே பலரும் நினைத்தார்கள். ஆனால், ஆசையைத் தூண்டிக்கொண்டே இருந்தால் ஏமாற்றிகொண்டே இருக்கலாம் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டி கோவையை கலக்கியிருக்கிறது மைவி3 ஆட்ஸ் நிறுவனம். திடீரென கோவை மாவட்டம் நீலாம்பூர் அருகே புறவழிச் சாலையில் இந்த நிறுவனத்திற்கு ஆதரவாக திரண்டனர். இவர்களில் பெரும்பாலோர் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை வெள்ளக்கிணறு […]
பல்டி அடிப்பதில் நிதிஷ்குமார் பலே சாதனை..! பீகார் கேலிக்கூத்து.

’இந்தி மொழியைக் கத்துக்கோங்க’ என்று இண்டியா கூட்டணியில் இருந்துகொண்டே குழப்பம் விளைவித்த நிதிஷ்குமார் இப்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துகொண்டு 9வது முறையாக முதல் மந்திரி பொறுப்புக்கு வந்திருப்பது இந்தியா முழுக்க ஆச்சர்ய அலையை எழுப்பியிருக்கிறது. ஒரு மனிதர் பதவிக்காக எத்தனை முறை பல்டி அடிக்க முடியும் என்பதில் நிதிஷ் பலே சாதனை படைத்துவிட்டார் என்று அத்தனை கட்சியினரும் அவரை கிண்டல் செய்துவருகிறார்கள். ஆனால், அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் நிதிஷ். பீகாரில் நிதிஷின் […]
வெளிநாட்டு ஃபேஸ்புக் காதலியின் விசித்திர சீட்டிங்… அம்பலப்படுத்திய கரூர் சைபர் கிரைம் போலீஸ்

வெளிநாட்டுப் பெண் ஒருவர் காதலிப்பதாகச் சொன்னதை நம்பி 12.5 லட்சம் ரூபாய் ஏமாந்துபோயிருப்பதை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கி. பிரபாகர் தலைமையிலான சைபர் கிராம் போலீஸ் தகவல் கொடுத்து எச்சரிக்கை செய்திருக்கிறது. வெளிநாட்டுப் பெண் அனுப்பிய நட்புக் கோரிக்கையை ஏற்று பழகி வந்திருக்கிறார். இணையத்தில் இவர்களுடைய காதல் எல்லையை மீறிப் போயிருக்கிறது. உனக்காக பரிசுகள் அனுப்புகிறேன் என்று அவ்வப்போது வெளிநாட்டில் இருந்து சின்னச்சின்ன பரிசுகளை அனுப்பியிருக்கிறேன். வெளிநாட்டுப் பெண்ணின் காதல், அவ்வப்போது பரிசு என்று […]
ஆயுர்வேத மருந்தைச் சொல்லி நைஜீரியர்கள் ஹைடெக் மோசடி… கரூர் சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

ஏமாத்தணும்னா அவங்க ஆசையைத் தூண்டனும் என்பது போன்று ஆயுர்வேத மருந்து வாங்கிக் கொடுத்தால் பணம் தருகிறோம் என்று 45 லட்சம் ரூபாய் அளவுக்கு புதிய வகையில் மோசடி நடந்திருப்பதை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கி. பிரபாகர் தலைமையிலான சைபர் கிராம் போலீஸ் கண்டுபிடித்திருக்கிறது. இணையம் மூலம் அறிமுகமான வெளிநாட்டு நபர் ஒருவர் இந்தியாவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில் கிடைக்கும் ஆயுர்வேத மருந்துகளை வாங்க விரும்புகிறேன். நான் இந்தியாவுக்கு வரும்போது அதற்குரிய பணத்தை […]

