News

Follow Us

சென்னையில் சொந்த வீடு இல்லாம வாடகைக்கு வீடு வீடா மாத்திட்டுப் போற மக்களே அதிகம் பேர் இருக்காங்க. அப்படி வாடகை வீட்டுக்குப் போன ஒரு பொண்ணுக்கு நடந்திருக்கிற கொடுமை ரொம்பவே அதிர வைக்குதுங்க.

சென்னை ராயபுரத்துல ஒரு தம்பதி வாடகைக்கு வீடு எடுத்துட்டுப் போயிருக்காங்க. அந்த பொண்ணுக்கு பாத்ரூம் போய் குளிக்கிறப்ப ஏதோ ஒண்ணு தப்பா இருக்குதுன்னு தோணிக்கிட்டே இருந்திருக்கு. யாரோ நம்மள பார்க்கிறாங்கன்னு பொண்ணுங்களால ஈஸியா கண்டுபிடிச்சுட முடியும். அப்படித்தான் சந்தேகப்பட்டு பாத்ரூமை செக் பண்ணியிருக்காங்க.

அந்த பாத்ரூமுல பேனா போன்ற ஒரு பொருள் செட் ஆகியிருந்திருக்குது. அதை எடுத்து கணவரிடம் காட்டியிருக்காங்க. அதை சோதிச்ச பிறகுதான், அது ஒரு ரகசிய கேமரான்னு தெரிய வந்திருக்குது. அந்த வீட்டு உரிமையாளரின் மகன் இப்ராஹிம் என்பவர்தான் இந்த ஸ்பை பேனா மூலமா வாடகைக்கு வர்ற பொண்ணுங்களை படம் எடுத்தது உறுதியாகிடுச்சு.

இந்த இப்ராஹிம் முதுநிலை பல் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஞ்ஞானப் புரட்சியை இப்படி தப்புத்தப்பா பயன்படுத்துறவங்களை சும்மாவே விடக்கூடாதுன்னு மக்கள் கொந்தளிக்கிறாங்க. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link