News

Follow Us

டெல்லியில் 23 பொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றி, உடனடியாக போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மோடிக்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு கரம் நீட்டும் ஸ்டாலின் தமிழக விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்டு கைது செய்தவர் என்பது தான் பெரும் அதிர்ச்சி.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்துக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சித்த தமிழக அரசை எதிர்த்து, 161 நாட்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்திவந்தனர் விவசாயிகள். இந்த நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளையும், முன்னணி நிர்வாகிகளையும் கடந்த 4ம் தேதி கைது செய்து பல்வேறு சிறைகளில் அடைத்துள்ளது. திடீரென நேற்று ஏழு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளியானது. 

முதல்வருக்கு தெரிந்து நடந்ததா இல்லையா என்று பல்வேறு அழுத்தங்கள் வந்த நிலையில், இந்த குண்டர் சட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஆனால், போராடினால் குண்டர் சட்டத்தில் கைது செய்வோம் என்று மிரட்டியிருக்கும் ஸ்டாலின் அரசின் நிஜ முகம் எதுவென புரியாமல் விவசாயிகள் விழிக்கிறார்கள்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பிறகு வேறு பேச்சு என்பதெல்லாம் ஸ்டாலினுக்குப் புதுசு இல்லையே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link