Share via:
0
Shares
இரண்டரை ஆண்டுகளாக ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் நீடித்து
வந்த மோதல் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. தந்தையின் திருமணநாளை யொட்டி தைலாபுரத்திற்கு
குடும்பத்துடன் வந்த அன்புமணிக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து அன்புமணியைக் கண்ணீர் மல்க கட்டியணைத்து, வாழ்த்தினார்
ராமதாஸ். அன்புமணி, செளமியா இருவரும் ராமதாஸ் – சரஸ்வதி அம்மாள் காலில் விழுந்து ஆசிர்வாதம்
பெற்றார்கள்.
அன்புமணியை ஆரத்தழுவி ராமதாஸ் ஆனந்தக் கண்ணீர் விட்டதையடுத்து
இவர்களுக்குள் நடந்த மோதல் முடிவுக்கு வந்துவிட்டது. இதுநாள் வரை இரண்டு பக்கமும் குதித்துக்கொண்டும்,
மோதிக்கொண்டும் இருந்த நிர்வாகிகள் இப்போது அரண்டுபோயிருக்கிறார்கள்.
முதல் ஆப்பு ஜி.கே.மணிக்குத்தானா..?
Tagged latest
