Share via:
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்ற டயலாக் யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, நரேந்திர மோடிக்கு ரொம்பவே பொருத்தமாக இருக்கும். கடந்த 10 வருடங்களாக ஆட்சி செய்திருக்கும் நரேந்திர மோடி, அவரது ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்க முடியாமல் ஜெயலலிதாவின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்கிறார்.
2014 தேர்தலில் மோடியா லேடியா என்று கேட்டு தாமரையை தமிழ்நாட்டில் இருந்து ஓட வைத்தவர் அன்றைய முதல்வர் ஜெயலலிதா என்பதை பிரதமர் மோடி மறந்துவிட்டார். அவர் இறந்த பிறகு அந்த கட்சியை கைப்பற்றிய சசிகலாவை அகற்றுவதற்கு அவர் செய்த லீலைகளை எல்லாம் மறந்து தினகரனும், சசிகலாவும் பா.ஜ.க.வுடன் கூட்டு வைத்திருக்கிறார்கள் என்பது தான் ஆச்சர்யம்.
அதோடு, இப்போது அம்மா ஜெயலலிதாவை தி.மு.க. இழிவுபடுத்தியது ஆகவே, அதற்கு ஓட்டு போடாதீங்க என்று சொல்கிறார் நரேந்திர மோடி. அதோடு பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று ஒவ்வொரு கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறார். ஆனாலும் தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சியையும் ஜெயலலிதாவையும் காட்டி ஓட்டு வாங்க நினைக்கிறார் மோடி.
மற்ற மாநிலங்களில் நேற்று பேசியதை மாற்றி இன்று வேறு மாதிரி பேசினால் மக்கள் மறந்து கை தட்டலாம், ஓட்டு போடவும் செய்யலாம். ஆனால், இது தமிழகம். உங்க பப்பு வேகாது மோடிஜி.