News

Follow Us

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. தலைமையகத்தில் சென்னை மாவட்ட நிர்வாகிகளை சந்தித்துப் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரிடம் எல்லா நிர்வாகிகளும் விசுவாசமாக இருந்தார்கள். அதனால் கட்சி தொடர்ச்சியாக ஜெயித்துக்கொண்டு இருந்தது. 

நீங்கள் யாருமே இப்போது எனக்கு விசுவாசமாக இல்லை. தேர்தலுக்கு யாரெல்லாம் வேலை செய்யலைன்னு எனக்கு ரிப்போர்ட் வந்திருக்கு. இனியாவது எனக்குத் துரோகம் செய்யாம விசுவாசமா இருங்க…’ என்று பாடம் எடுத்திருக்கிறார்.

இதை கேட்ட நிர்வாகிகள், ‘பதவி கொடுத்த சசிகலாவுக்கு நம்ம எடப்பாடி பழனிசாமி விசுவாசமா இல்லை, ஆட்சியைக் காப்பாத்தின மோடிக்கு நம்ம எடப்பாடி பழனிசாமி விசுவாசமா இல்லை. ஆனா, அவரெல்லாம் விசுவாசத்தைப் பத்தி நமக்கு பாடம் எடுக்கிறாரு… இவர் செஞ்சா அது ராஜதந்திரம்… அத நாம செஞ்சா துரோகமா..? நல்லாத் தான் காமெடி செய்றாரு’ என்று சிரித்திருக்கிறார்கள். 

பழைசை மறக்காதீங்க எடப்பாடி பழனிசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link