News

Follow Us

மெகா திருடர்களுக்கு எல்லாம் சல்யூட் அடித்து மரியாதையாக அனுப்பிவைப்பதும், குட்டியூண்டு பிக்பாக்கெட் திருடர்களை கட்டி வைத்து உரிப்பதும் போலீஸாருக்கே உள்ள தனித்திறமை. 

அதேபோல் பிரதமர் பதவியில் இருக்கும் மோடி போன்ற நபர்கள் நாட்டில் மதக்கலவரம் உண்டாக்கும் அளவுக்குப் பேசினாலும் அதை கண்டும் காணாதவர் போன்று இருக்கும் போலீஸ், லோக்கலில் சாதாரணமாகப் பேசினாலும், அது சட்டம் ஒழுங்கு பிரச்னை என்று முட்டியை பெயர்த்துவிடுவார்கள்.

வழக்கமாக கோடையில் வெயில் அடிக்கும், தார் ரோட்டில் அனல் பறக்கும். இதுபோன்ற தருணங்களில் கோடையின் கொடுமையை தீர்ப்பதுபோன்று மீம்ஸ் போட்டு ரசிப்பார்கள். அதற்காக சிலர் ரோட்டில் ஆம்லேட் போட்டு அதை வீடியோ எடுத்து பகிர்வதும் உண்டு. அதை ஏதோ நாட்டின் ஒருமைப்பாட்டுக்குத் தீமை விளைவிப்பது போன்று போலீஸார் விரட்டிப் பிடிக்கிறார்கள். அதே ரோட்டில் ஊழல் செய்யும் காண்ட்ராக்ட்காரர்கள் பற்றி கண்டுகொள்வதே இல்லை.

இப்படி ஆட்சிக்கு ஏற்ப ஏவல்தனம் செய்வது தான் போலீஸாரின் பணியா…?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link