Share via:
2024 மக்களவைத் தேர்தல் நிறைய அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை மக்களுக்கு அடையாளம் காட்டியிருக்கிறது. அதாவது ஒவ்வொரு அரசியல்வாதிகளும் அவரவர் சொத்துக்களை காப்பாற்றவும், அவரை சேர்ந்தவர்கள் நல்வாழ்வுக்காகவுமே அரசியல் செய்கிறார்கள். அதற்காக ஆளுக்கொரு சித்தாந்தத்தைக் கையில் எடுத்துக்கொள்கிறார்கள்.
ராமர் கோயிலையும் இந்துக்களின் காவி நிறத்தையும் காட்டி இந்தியா முழுவதையும் அப்படியே விழுங்கி, அதை அதானிக்கும் அம்பானிக்கும் கொடுப்பதற்கு பா.ஜ.க. அரசு தீவிரம் காட்டி வருகிறது என்றால், தமிழகத்தில் ஆரியத்தை எதிர்பதாக திராவிடத்தின் பெயரைச் சொல்லி குடும்ப அரசியல் கொடி கட்டி பறக்கிறது.
இந்தியா முழுவதும் காட்டிய வித்தை நரேந்திரமோடிக்கு தமிழகத்தில் மட்டும் செல்லுபடியாகவில்லை. ஏனென்றால், இங்கே எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா வழியில் ஸ்டாலினின் திராவிட வித்தையில் மக்கள் ஏற்கெனவே மயங்கிக் கிடக்கிறார்கள்.
பா.ஜ.க.வின் குஜராத் மாடலைவிட தமிழக மாடலே போதும் என்று நினைக்கிறார்கள். அதனால் வெளியூர் ஆட்டக்காரரான மோடிக்கு இங்கே செல்வாக்கு எடுபடவில்லை. இரண்டு அரசியல்வாதிகளாலும் மக்களுக்கு நன்மை இல்