தாயை கொலை செய்த மகன்! எதற்காக தெரியுமா?

ஸ்மார்ட் போன் வாங்க பணம் தர மறுத்த தாயை, சொந்த மகனே கொலை செய்த சம்பவம் மராட்டிய மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த கமலாபாய் என்ற 47 வயது பெண்மணிக்கு திருமணமாகாத ராம்நாத்குலாப்ராவ் பத்வைக், தீபக் பத்வைக் என்ற 2 மகன்கள் உள்ளனர். கமலாபாய் தன்னுடைய மூத்த மகனான ராம்நாத் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது தாய்க்கு திடீரென்று உடல்நிலை சரியில்லை என்று ராம்நாத் தனது தம்பியான தீபக்கிற்கு போன் செய்துள்ளார். […]
ககன்யான் திட்ட முதற்கட்ட சோதனை வெற்றி! உற்சாகத்தில் விஞ்ஞானிகள்!

ககன்யான் திட்ட மாதிரி முதல் கட்ட சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளதாக அறிவித்துள்ள இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. இதே போன்ற முயற்சியை இதற்கு முன்னதாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளதால் இந்தியாவின் அடுத்தகட்ட நகர்வுகளை அந்நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்நிலையில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில், மனிதர்களை விண்ணுக்கும் அனுப்பும் […]
முற்றும் மோதல்! 41 தூதர்களை திரும்பப் பெற்ற கனடா!

இந்தியாவில் இருந்து 41 தூதர்களை திரும்பிப் பெற்றுவிட்டதாக கனடா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது இந்திய- கனடா நாட்டிற்கு இடையிலான மோதல் முற்றுகிறது என்பதை வெளிக்காட்டுகிறது. கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப்சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டது முதல் இந்தியா &கனடா நாட்டுக்கு இடையிலான நட்புறவு கேள்விக்குறியானது. அதனால் கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்திய தூதரக உயர் அதிகாரி ஒருவர் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு பிறப்பித்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்திய அரசு, இந்தியாவில் பணியாற்றி […]
உலகக்கோப்பை 2023: பாகிஸ்தான் அணியை வீழ்த்திய ஆஸ்திரேலியா!

உலகக்கோப்பை 2023 தொடரின் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 62 ரன்கள் வித்தியாசத்தி வெற்றி பெற்றுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் போட்டித் தொடரில் நேற்றைய (அக்.20) ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி முதலில் விளையாடி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 367 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 305 ரன்களில் சுருண்டு தோல்வியை தழுவியது. இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு […]
சாலையோரம் உணவருந்திய அண்ணாமலை! சிலிர்க்கும் தொண்டர்கள்!

திருப்பூர் மாவட்டத்தில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் போது நள்ளிரவு நேரத்தில் சாலையோரம் காரில் அமர்ந்தபடி அண்ணாமலை உணவு அருந்திய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இது பா.ஜ.க.வினர் மத்தியில் பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி திருப்பூர் மாவட்ட பகுதிகளான பல்லடம், அவுநாசி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற யாத்திரையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் […]
நடிகை ஜெயபிரதாவுக்கு 6 மாத சிறை! பரபரப்பு தகவல்கள்!

நடிகையும் பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்த ஜெயப்பிரதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஜெயப்பிரதா. இவர் தமிழில் நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி, கடைசியாக தசாவதாரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமல்லாமல் கடந்த 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. உறுப்பினராக […]
ராஜஸ்தானில் இன்று பிரியங்கா காந்தி பரப்புரை! தொண்டர்கள் உற்சாகம்!

ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பரப்புரையாற்ற உள்ளார். சத்தீஸ்கர், மிசோரம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வருகிற நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் நிச்சயமாக அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் அதிரடியாக தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளன. அந்த வகையில் 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்திற்கு வருகிற […]
ஒரே நேரத்தில் ஒலித்த லட்சக்கணக்கான செல்போன்கள்! மக்கள் அதிர்ச்சி!

ஒரே நேரத்தில் ஒலித்த லட்சக்கணக்கான செல்போன்கள்! மக்கள் அதிர்ச்சி! லட்சக்கணக்கானவர்களின் செல்போன்கள் ஒரே நேரத்தில் ஒலித்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட செல்போன் சேவைகளை பயன்படுத்துவோர்களின் செல்போன்கள் இன்று காலை 11.27 மணியளவில் எம்ர்ஜென்சி அலர்ட் என்ற பெயரில் ஒலிக்க ஆரம்பித்தது. இந்த எச்சரிக்கை ஒலி தன்னுடைய செல்போனில் மட்டும்தான் வருகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அடுத்தடுத்த செய்தி என்னவென்றால் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானவர்களின் செல்போனில் ஒலித்தது. இது குறித்து […]
தெலுங்கானாவில் பா.ஜ.க.வால் எப்படி சமூக நீதி வழங்க முடியும்? -ராகுல்காந்தி

தெலுங்கானா சட்டமன்ற தேர்தலுக்கான பிரசார பீரங்கியாக மாறிய ராகுல்காந்தியை தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்று அவரின் பிரசாரத்தை ஆர்வமுடன் கேட்டனர். சத்தீஸ்கர், மிசோரம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வருகிற நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் நிச்சயமாக அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் அதிரடியாக தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளன. அந்த வகையில் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி மற்றும் […]
உச்சநீதிமன்றத்திற்கு வெளியே நடந்த விபரீதம்! அதிர்ச்சி தகவல்!

உச்சநீதிமன்றத்திற்கு வெளியே தன்பாலின தம்பதி மோதிரம் அணிந்து நிச்சயதார்த்தம் செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பளித்தது. அயல்நாடுகளில் தன் பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளார்கள் என்று தொடர்ந்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. அந்த சுவடு மறையாத சூழ்நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சி சம்பவம் […]

