கமல்ஹாசனின் ஓசி பிரசாரம்… மக்கள் நீதி மய்யத்தினர் என்ன சொல்றாங்க..?

ஒரே ஒரு சீட் கூட வாங்காமல் இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு இலவசமாக பிரசாரம் செய்துவருகிறார் கமல்ஹாசன். நீண்ட நாட்களுக்குப் பிறகு தேர்தல் களத்திற்கு வந்திருக்கும் கமல் பேச்சு எப்படி என்று மக்கள் நீதி மய்யத்தினரிடம் பேசினோம். ‘’ஈரோடு, திருச்சி, பெரம்பலூர் தொகுதிகளில் கமல் பேசியது மிகவும் சிறப்பாக இருக்கிறது.. குறிப்பா மோடியை வெளித்து வாங்குகிறார். திருச்சியில் பேசியபோது, ’இந்திய தேசத்தின் பன்முகத்தன்மையைக் காக்கும் நேரம் இது. இந்த ஊரில் இருந்து இதைக் கூறுவது பெருமைக்குரியது. ஏனெனில், […]
அண்ணாமலைக்கு டோஸ் விடும் சீமான்… இரண்டு கட்சிகளும் தேர்தலில் தேறுமா..?

ஆளும் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தேர்தல் களத்தில் மோதிக்கொண்டிருக்கும் நேரத்தில் அண்ணாமலைக்கும் சீமானுக்கும் இடையில் காரசார மோதல் நடந்துகொண்டு இருக்கிறது. இதையடுத்து தமிழக தேர்தல் களம் நான்கு முனை போட்டி என்பதிலிருந்து நழுவி இரண்டு முனைப் போட்டியை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறது. சமீபத்தில் அண்ணாமலைக்கு எதிராகப் பொங்கினார் சீமான், ‘ அண்ணாமலை.. ஏதோ தமிழ்நாட்டுல ஆடிட்டு இருக்க. அதிகாரத் திமிருல ஆடுற. நீ உண்மையிலேயே வீரனாக இருந்தால், என் கருத்துக்கு எதிர் கருத்து கூறி மோதிப் பாரு. தைரியம் […]
தீப்பெட்டியால் துரை வைகோ வெற்றிக்கு ஆபத்தா..? திருச்சி தொகுதி கள நிலவரம்

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. சார்பில் வைகோவின் மகன் துரை வைகோ தீப்பெட்டி சின்னத்தில் நிற்கிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க.வில் – கருப்பையா பன்னீர்செல்வமும் பா.ஜ.க. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. – செந்தில்நாதனும் போட்டியிடுகிறார்கள். உதயசூரியன் சின்னத்தில் நின்றால் 100 சதவிகிதம் வெற்றி உறுதி என்று நேரு அழுத்தி அழுத்தி சொன்ன பிறகும் பம்பரம் என்பதில் வைகோ உறுதியாக இருந்தார். ஆனால், தேர்தல் கமிஷன் பஞ்சாயத்தால் பம்பரம் கிடைக்காமல் இப்போது தீப்பெட்டி சின்னத்தில் நிற்கிறார். […]
அண்ணாமலையின் கச்சத்தீவு ராஜதந்திரம் வீணாகிப் போச்சே… சீனாவின் அடாவடியால் அலறும் பா.ஜ.க.

தமிழகத்தில் ஆளும் தி.மு.க.வுக்கு எதிராக திடீரென கச்சத்தீவு விவகாரத்தை அண்ணாமலை பேசத் தொடங்கினார். அண்ணாமலையை அடுத்து வரிசையாக பா.ம.க.வின் ராமதாஸ், தினகரன் என்று ஆளாளுக்கு அதுகுறித்து பேசத் தொடங்கினார்கள். இவையெல்லாம் போதாது என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கரும் அவர் பங்குக்கு அடிமட்டத்துக்கு இறங்கிவந்து கச்சத்தீவு குறித்து ஒரு பேட்டி கொடுத்தார். இது மீனவர்களிடம் பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகும் என்று அண்ணாமலை நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் சீனாவின் அடாவடி செயல் ஒட்டுமொத்த பா.ஜ.க.வின் வீரத்தையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. இந்தியாவின் அங்கமான […]
விஜயகாந்த் ஆன்மாவுக்கு ஓட்டு போடுங்க… பிரேமலதா, விஜயபிரபாகரன் புது கண்ணீர் காமெடி

ரிஷிவந்தியம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட பிரேமலதா திடீரென கண்ணீர் சிந்தி உருக்கமாகப் பேசினார். இது விஜயகாந்த் தொகுதி என்பதால் என்னால் பேசவே முடியவில்லை, கண்ணீர் கொட்டுகிறது என்று அழுது, ‘விஜயகாந்துக்காக வாக்குப் போடுங்கள்’ என்று உருக்கமாகப் பிரசாரம் மேற்கொண்டார். அதே பாணியில் விஜயபிரபாகரனும் விஜயகாந்த் ஆன்மாவை வைத்து ஓட்டு கேட்டு வருகிறார். விஜயபிரபாகரன் நிற்பதால் விருதுநகர் தொகுதி திடீரென ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ளது. காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்.பி. மாணிக்கம் தாகூர் நிற்க அவருக்கு எதிராக அ.தி.மு.க. […]
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15-ம் தேதிவரை நீதிமன்ற காவல்

யூனியன் பிரதேசமான டெல்லியின் முதல்வராக பதவி வகித்து வரும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன்படி கடந்த மாதம் (மார்ச்) 21ம் தேதி அவரை கைது செய்தது. இதைத்தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மார்ச் 28ம் தேதிவரை அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன் பின்னர் அந்த காவல் தற்போது ஏப்ரல் 1ம் தேதி […]
தி.மு.க.வை மிரட்டும் கச்சத்தீவு..? அண்ணாமலைக்காக களம் இறங்கும் ஜெய்சங்கர்

தேர்தல் பிரசாரத்தின் போது திடீரென 1974ம் ஆண்டு நடைபெற்ற கச்சத்தீவு விவகாரத்தைப் பற்றி பேசிய அண்ணாமலை, ‘கருணாநிதி தமிழர்களுக்கு தெரிந்தே துரோகம் இழைத்தார்’ என்று பேசினார். இதையடுத்து இரண்டு ஆதாரங்களை வெளியிட்டார். இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஜெயசங்கர் இன்று கச்சத்தீவு பற்றி பேசியிருக்கிறார். தமிழ்நாட்டு மீனவர்களுக்கு கச்சத்தீவில் மீன் பிடிக்க உரிமை உள்ளது என்று கூறியிருக்கிறார். தற்போது மீனவர்கள் பிரச்னை உச்சத்தில் இருக்கும்போது, தி.மு.க. வாக்குவங்கியை உடைப்பதற்காகவே இது திட்டமிட்டு எடுக்கப்பட்டுள்ளதாக பா.ஜக.வினர் கூறுகிறார்கள். இந்த […]
அண்ணாமலை நல்ல ஜாதி என்றால் எல்.முருகன் கெட்ட ஜாதியா..? பிரதமர் மோடியின் பேச்சுக்கு தி.மு.க. கண்டனம்

தனியார் தொலைக்காட்சிக்க்ப் பேட்டியளித்த பிரதமர் மோடி, அண்ணாமலை பற்றிய கேள்விக்கு, அவர் நல்ல பணியில் இருந்து கட்சிக்கு வந்தார். அவர் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டால் தி.முக.வுக்குப் போயிருப்பார். ஆனால், அவர் பா.ஜ.க.வுக்கு வந்தார். அவர் நல்ல ஜாதியைச் சேர்ந்தவர் என்று பேசியது கடும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ஒரு பாரதப்பிரதமர் ஜாதி பற்றி பேசலாமா என்று தி.மு.க.வினர் கடுமையாக கண்டனம் தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து தி.மு.க.வினர், ‘அதென்ன நல்ல ஜாதியில் பிறந்தவர்?? அப்போ மற்ற சாதியினர் எல்லாம் கெட்ட ஜாதியா?? […]
பைனாகுலர் சரவணன் காமெடி… ஒரே ஒரு சத்தியம் கேட்கும் மக்கள்

அரசியலில் காமெடி செய்வதில் அ.தி.மு.க.வினரை யாரும் அடித்துக்கொள்ளவே முடியாது. செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், ராஜேந்திர பாலாஜி என்று ஆளாளுக்கு அவ்வப்போது குண்டக்க மண்டக்க பேசி நிறைய கண்டெண்ட் தருவார்கள். அந்த வகையில் இப்போது மதுரை வேட்பாளர் சரவணன் சேர்ந்திருக்கிறார். ரொம்பவும் புத்திசாலி போன்று கையில் பைனாகுலர் வைத்துக்கொண்டு, ‘மதுரை எம்.பி. வெங்கடேசன் என்ன செய்தார் என்று தேடித் தேடிப் பார்க்கிறேன், எதுவுமே தெரியவில்லை’ என்று மேடையில் ஏறி பேசினார். அந்த நேரத்தில் அவர் பைனாகுலர் மூடியை […]
தாமரையிலிருந்து தாவிய தடா பெரியசாமி… கேசவ விநாயகம் திருவிளையாடல் காரணமா..?

சீட் கிடைக்கவில்லை என்ற காரணத்தைக் காட்டி பா.ஜ.க.வின் மாநில பட்டியலின பிரிவு தலைவராக பதவி வகித்து வந்த தடா பெரியசாமி, இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். கடந்த 1992ம் ஆண்டு அரியலூர் மருதையாற்று பாலம் குண்டு வெடிப்பு வழக்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பெரியசாமி கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டார். பின்னர் 3 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்றம் இவரை நிரபராதி என தீர்ப்பளித்து விடுதலை செய்தது. இதைத் […]

