Share via:
யூனியன் பிரதேசமான டெல்லியின் முதல்வராக பதவி வகித்து வரும் அரவிந்த் கெஜ்ரிவால் மீது டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதன்படி கடந்த மாதம் (மார்ச்) 21ம் தேதி அவரை கைது செய்தது.
இதைத்தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மார்ச் 28ம் தேதிவரை அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன் பின்னர் அந்த காவல் தற்போது ஏப்ரல் 1ம் தேதி வரை (இன்று) நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, வருகிற 15ம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதன் காரணமாக அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட உள்ளார். இது பா.ஜ.க.வின் திட்டமிட்ட சதி என்று ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.