Share via:
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெற முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது பாஜக. அதன்படி ஒவ்வொரு தொகுதியிலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அந்தந்த மாநில பாஜக தலைவர்களிடம் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்தியா கூட்டணி கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த சில நாட்களுக்கு முன்பு பிள்ளையார் சுழி போட்டுள்ளார். தொடர்ந்து இந்தியா கூட்டணி பலமிழந்து வருவது பாஜகவுக்கு மேலும் தெம்பூட்டும் வகையில் உள்ளது. எப்படியும் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்து ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என்பதில் பாஜக மும்முரமாக உள்ளது.
அப்படி நடக்கும் பட்சத்தில் தேர்தல் பணியாற்றியவர்களுக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.