News

Follow Us

நடிகர் மன்சூர் அலிகான் எங்கே இருந்தாலும் அங்கே குழப்பமும் கலாட்டாவும் நிச்சயம் இருக்கும். நாம் தமிழர் கட்சியில் இருந்த மன்சூர் கடந்த 2021ம் ஆண்டு அங்கிருந்து வெளியேறி தமிழ் தேசிய புலிகள் என்ற கட்சியைத் தொடங்கினார். இந்த கட்சின் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இதையடுத்து தன்னுடைய கட்சியின் பெயரை இந்திய ஜனநாயகப் புலிகள் என்று மாற்றினார். அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கு பேச்சுவார்த்தைக்குச் சென்றார். ஆனால், தொகுதிப் பங்கீடு உடன்பாடு அடையவில்லை என்ற கோபமானார். இந்த நிலையில் அந்த கட்சியில் இருந்து மன்சூரை நீக்கிவிட்டதாக அவசர செயற்குழு கூட்டி நடவடிக்கை எடுத்தது. ஆனாலும், வேலூர் தொகுதியில் பலாப்பழ சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டார்.

இப்போது தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியில் இணைய விண்ணப்பம் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து விண்ணப்பம் கொடுத்திருக்கிறார்.

தற்போது தேர்தல் நடைமுறை இருப்பதால் அதன்பிறகு மன்சூர் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கட்சியின் முக்கியமான பொறுப்புக்கு அவரை நியமிக்க செல்வப்பெருந்தகை தயாராக இருக்கிறாராம். இதையறிந்த மூத்த தலைவர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

கதர்களுக்குள் இனி சட்டை கிழிசல் தாராளமாக நடக்கும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link