Share via:
ஒவ்வொரு இந்தியனும் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன்
விளம்பரம் செய்துவருகிறது என்றாலும் நால்வரில் ஒருவர் வாக்களிக்காமல் இருக்கிறார்கள்.
மற்ற மாநிலங்களை விட தமிழக நிலவரம் பரவாயில்லை என்றாலு இன்னமும் 75 சதவிகிதத்தையே இன்னமும்
தொடவில்லை என்பது வேதனை.
காலையிலே தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி
பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த், அஜித் என்று வரிசை கட்டி ஓட்டுப்போட்டு வருகிறார்கள்.
அதேநேரம், வாக்கு சாவடிகளில் கூட்டம் குறைவாகவே இருக்கிறது.
தமிழகத்தில் கடந்த 2009ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் 73.02
சதவீத வாக்குகள் பதிவாகின. அடுத்த 2014 லோக்சபா தேர்தலில் 73.74 சதவீத வாக்குகள் பதிவாகின.
கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 72.47 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த முறை 75 சதவிகித வாக்குகள் எப்படியும் வாங்கவேண்டும் என்பதே
ஆளும் கட்சியின் நோக்கமாக இருக்கிறது. அதாவது 75 சதவிகிதம் வாக்குகள் வாங்கினால் அது
தி.முக.வுக்கு சாதகமாக அமையும் என்று சொல்லப்படுகிறது. மிகவும் குறைவாக வாக்குப்பதிவு
என்றால் மக்களுக்கு ஆளும் கட்சி மீது கோபமாக அமையும் என்கிறார்கள்.
தமிழகத்தில் தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையிலே போட்டி
நிலவுவதால், இப்படி கணிக்க முடியாது என்றும் அரசியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.