News

Follow Us


 ரத்னம் படம் கட்டப்பஞ்சாயத்துக்கு விஷால் ஆடியோ எச்சரிக்கை… ஸ்டாலினுக்கும்

கலெக்டருக்கும் புகார்

வழக்கமாக விஷால் மீது எல்லோரும் வைக்கும் ஒரு குற்றச்சாட்டு என்னவென்றால்,
‘எப்ப போன் செஞ்சாலும் எடுக்கவே மாட்டார்’ என்பது தான். இப்போது அதே குற்றச்சாட்டை
விஷால் திருச்சி தஞ்சை ஏரியா தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் மீது வைத்திருக்கிறார்.

இதற்காக ஆடியோ வெளியிட்டு செகரட்டரி சிதம்பரம், பிரசிடென்ட் மீனாட்சி
ஆகிய இருவருக்கும் கடுமையாக எச்சரிக்கை கொடுத்திருக்கிறார். விஷால் பணம் தர வேண்டியது
இருக்கிறது என்று யாரோ ஒருவர் லெட்டர் கொடுத்த காரணத்துக்காக ரத்னம் படம் வெள்ளியன்று
வெளியாவதை தடுக்க நினைக்கிறீர்கள். இதன் மூலம் கட்டப்பஞ்சாயத்து செய்து, எங்கேயும்
இந்த படத்தை திரையிடக் கூடாது என்று ஆதாரமில்லாமல் 6 மணி நேரமாக என் போனை எடுக்கவே
இல்லை.

இதனால் உங்கள் கட்டப்பஞ்சாயத்து குறித்து முதல்வர், கலெக்டர்,
எஸ்.பி. என எல்லோருக்கும் இந்த ஆடியோ பதிவு அனுப்புகிறேன். படம் ரிலீஸ் ஆகவில்லை என்றால்
என்னுடைய பாணியில் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியிருக்கிறார்.

விஷால் உண்மையைத்தான் சொல்கிறாரா… விஷாலுக்கே இந்த கதியா என்றெல்லாம்
சினிமா ரசிகர்கள் குழம்பி நிற்கிறார்கள். அரசியலுக்கு வரப்போவதாக அறிவிப்பு செய்திருக்கும்
விஷாலுக்கு இந்த வகையில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களா என்றெல்லாம் கேள்வி எழுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link