Share via:
கடந்த தேர்தலில்
விஜய் சைக்கிள் ஓட்டிக்கொண்டு ஓட்டு போடுவதற்கு வந்ததை பார்த்த ரசிகர்கள், ‘பெட்ரோல்
விலை ஏறுனதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிற மாதிரி சைக்கிள்ல வந்திருக்கிறார், அதனால் இது
தி.மு.க. ஆதரவு நிலைப்பாடு’ என்று குதித்தார்கள்.
அதே ரசிகர்கள் இப்போது
நாம் தமிழரின் புதிய சின்னமான ஒலிவாங்கிக்கு விஜய் ஆதரவு கொடுத்துவிட்டார் என்று சொல்கிறார்கள்.
அதை கேட்டு நாம் தமிழர் சீமானின் அன்புத் தம்பிகள் அத்தனை பேரும் ஆனந்தத்தில் இருக்கிறார்கள்.
விஜய்யின் புதிய
படமான கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனப்படும் கோட் படத்தில் விசில் போடு என்ற பாடல் அறிமுகம்
செய்யப்பட்டது. அந்த பாடலில், ‘மைக்கைக் கையில் எடுக்கட்டுமா..?’ என்று ஒரு வரி வருகிறது.
இதை கையில் எடுத்துக்கொண்டே சீமானின் ரசிகக் கண்மணிகள் சந்தோஷம் அடைந்திருக்கிறார்கள்.
அதேநேரம், மக்களவை
தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லைனு விஜய் அறிக்கை விட்ட பின்பும்… தம்பிகள் பாட்டுல
மைக் இருக்கு…எங்களுக்கு ஆதரவு குடுத்துட்டார்னு சோல்றது நியாயமே இல்லை என்று விஜய்
ரசிகர்களும் நிர்வாகிகளும் கொதிக்கிறார்கள்.
அதிபர் இன்னும் வாயைத்
திறக்கல… என்னைக் கேட்டுத்தான் அந்த வரி எழுதுனாருன்னு இவ்வளவு நேரம் சொல்லாம இருக்கிறதே
ஆச்சர்யம்தான்.