Share via:
அரசியல் சென்டிமென்ட்
வகையில் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா தொடங்கி விஜயகாந்த், கமல்ஹாசன் என்று அத்தனை
பேரும் முக்கியமான நிகழ்ச்சிகளை மதுரையில் தொடங்குவார்கள். இதே பாணியில் நடிகர் விஜய்யும்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை மதுரையில் தொடங்க இருக்கிறாராம்.
ஏப்ரல் மாத இறுதியில்
மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தல் அதற்குள்
முடிந்துவிடும் என்று கணக்குப் போட்டே ஏப்ரல் இறுதி என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம்.
எனவே, நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு, இந்த தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட
இருக்கிறதாம்.
மாநாடு நடத்துவதற்குள்
தமிழகம் முழுக்க 100 மாவட்டச் செயலாளர்களை தன்னுடைய கட்சிக்கு நியமிக்கவும், ஒவ்வொரு
நபரும் 10 ஆயிரம் பேரை மதுரைக்கு அழைத்துவர வேண்டும் என்றும் திட்டம் தீட்டியிருக்கிறார்களாம்.
எனவே கிட்டத்தட்ட
10 லட்சம் பேர் மதுரையில் திரளும் வகையில் ஊருக்கு வெளியே திடல் தயாரிக்க இருக்கிறார்கள்.
மாநாட்டுக்கு வரும் அத்தனை பேருக்கும் மணக்க மணக்க பிரியாணி வழங்கவேண்டும் என்றும்
உத்தரவு போட்டிருக்கிறாராம்.
சும்மாவே மதுரைக்காரங்க
விதவிதமாக போஸ்டர் அடித்து பரபரப்பைக் கிளப்புவாங்க, அங்கே விஜய் மாநாடு நடத்துவதால்
எப்படியெல்லாம் அடிக்கலாம்னு இப்பவே யோசிக்க ஆரம்பிச்சாடங்களாம்.