News

Follow Us

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவோம் என்று கர்நாடக காங்கிரஸ் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் வெளிப்படையாக அறிவிப்பு செய்திருக்கிறார். இந்த நிலையில் கர்நாடக விடுதலை சிறுத்தைகள் அமைப்பு அணைக்கு ஆதரவாகப் போராடும் என்று திருமாவளவன் அறிவித்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

பெங்களூரில் இந்திய கூட்டணிக்கு ஆதரவாக ரூரல் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் டி.கே.சுரேஷை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் திருமாவளவன். அப்போது, ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திட பி.ஜே.பி. மோடிக்கு வாக்களிக்க கூடாது. ஆகவே தேசத்தை பாதுகாத்திட காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

அடுத்து நடந்த செய்தியாளர் சந்திப்பில், மேகதாது அணை திட்டத்துக்கு கர்நாடக விடுதலை சிறுத்தைகள் அமைப்பு ஆதரவு கொடுத்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த திருமாவளவன், ‘கர்நாடக விடுதலை சிறுத்தைகள் இந்த மாநில மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு செயல்படும். இதில் எந்த தவறும் இல்லை’ என்று தெரிவித்தார்.

இப்படி ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்ப கொள்கைகளையும் திட்டங்களையும் மாற்றிக்கொள்வது கேவலமான அரசியல் என்று திருமாவளவனை திட்டித் தீர்த்துவருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link