News

Follow Us

தேர்தல் பிரசாரத்தில் மோடியின் இஸ்லாமிய வெறுப்புப் பேச்சுக்கு பல பக்கங்களில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. தேர்தல் கமிஷன் இதுகுறித்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்பதும் உறுதியாகிவிட்டது.

இந்த நிலையில் நாம் தமிழர் சீமான் பிரதர் மோடி மன்னிப்பு கேட்டே ஆகவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “ராஜஸ்தான் பரப்புரையின்போது இஸ்லாமிய மக்களை இழிவுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே கலவரத்தைத் தூண்டும் வகையிலான பிரதமர் மோடியின் பேச்சு மதவெறியின் உச்சம்,

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே இஸ்லாமிய மக்கள் நீண்டகாலமாக இந்த நிலத்தில் நிலைத்து வாழ்ந்து வருகின்றனர் என்றும், இந்த மண்ணின் கோடிக்கணக்கான பூர்வகுடி மக்கள் இஸ்லாம் மதத்தை விரும்பி ஏற்றுக்கொண்டார்கள் என்றும் அவர்கள் யாரும் இந்த நாட்டிற்கு அந்நியர்கள் அல்ல.

ஆனால், பிரதமர் மோடி இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் அனைவரும் இந்த நாட்டிற்கு வெளியிலிருந்து வந்தவர்கள் போலவும், இந்துக்களின் சொத்துகளை அபகரித்தது போலவும் பேசுவது அற்ப அரசியல் இலாபத்திற்காக மதப்பிரிவினையை ஏற்படுத்துகின்ற சிறிதும் மனச்சான்றற்றச் செயலாகும் என்றும் காட்டமாக குற்றம்சாட்டி

ஆட்டுக்குட்டிகளை மோத விட்டு இரத்தம் குடிக்கும் ஓநாயின் குரூர மனப்பான்மையே பிரதமருடைய பேச்சில் வெளிப்படுகிறது. ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காக நாட்டு மக்களின் மனங்களில் வெறுப்பு நஞ்சை விதைக்கும் பிரதமர் மோடியின் பரப்புரை பேச்சு இந்த நாட்டினை அழிவுப்பாதைக்கே கொண்டு போகும்.

மோடி மீண்டும் பிரதமரானால் சமத்துவம், சனநாயகம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை என்பதெல்லாம் முற்று முழுதாக ஒழிக்கப்பட்டுவிடும். பாஜகவிற்கு தேசபக்தி குறித்துப் பேச எந்தத் தகுதியும் கிடையாது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் பாசிச மன ஆகவே, இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தி, இந்து – இஸ்லாம் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதற்கு பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவரிடமும் உடனடியாகப் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று ஆவேசம் காட்டியிருக்கிறார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link